Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிலேனியம் சவால்களுக்கான நிதியுதவி பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்.

Featured Replies

மிலேனியம் சவால்களுக்கான நிதியுதவி பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்.

மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் பேச்சுச் சுதந்திரத்துக்கு எதிரான ஒடுக்கு முறைகள் அதிகரித்துச் செல்வதையடுத்து மிலேனியம் சவால்களுக்காக நிதியுதவி பெறும் நாடுகளின் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்படுவதாக பிரீடம் ஹவுஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான ஒப்பந்தம் மற்றும் சமாதான நடவடிக்கைகள் காரணமாக 2004ஆம் ஆண்டு மிலேனியம் சவால்களுக்கான உதவிபெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டது.

எனினும் இந்நிலைமைகள் சீர்குலைந்து விடுதலைப் புலிகள் மீண்டும் சிவில் யுத்தத்தின்பால் திரும்ப தொடங்கியமை மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் என்பவற்றாலேயே இலங்கையை இப்பட்டியலில் இருந்து நீக்கமுடிவு செய்ததாக பிரீடம் ஹவுஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரீடம் ஹவுஸ் அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் ஜெனிபர் வின்ட்சர் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகளை மீறும் செயற்பாடுகள் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நீதிக்கு புறம்பான கொலைகள் மற்றும் ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்களில் அரசாங்கம் சம்பந்தப்பட்டுள்ளது. அத்தோடு பேச்சு மற்றும் கருத்து வெளியிடும் சுதந்திரங்கள் கடும் நெருக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

இவை மிலேனியம் சவால்களுக்கான நிதியுதவி பெறுவதற்கான நிபந்தனைகளுக்கு முரணானது. இவற்றை இலங்கை அரசாங்கம் திருத்திக்கொள்ளும் வரை அந்நாட்டை நிதியுதவி பெறும் நாடுகளின் பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்க முடியாது.

தனி நபர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை மதித்து பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு ஜனநாயக அரசாங்கத்தினதும் கடமையாகும் என தெரிவித்துள்ளார். வாஷிங்டனை தளமாகக்கொண்டு செயற்படும் பிரீடம் ஹவுஸ் அமைப்பானது தன்னார்வ தொண்டு நிறுவனமாகும்.

இது ஜனநாயக சுதந்திரத்தை பாதுகாப்பதை நோக்காக கொண்டு செயற்படுகிறது. இதன்கீழ் ஜனநாயக நாடுகள் எதிர்நோக்கும் சவால்களை சமாளிக்க பல்வேறு பிரிவுகளின்கீழ் நிதியுதவி அளித்து வருகின்றது.

-Virakesari-

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் `மிலேனியம் சவால் நிதியுதவி' பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க சிபார்சு

-அருளானந்தம் அருண்-

அமெரிக்க அரசினால் வழங்கப்படும், "மிலேனிய சவால்களுக்கான நிதியுதவிகள்" எனும் கடன் மற்றும் நன்கொடை உதவிகள் பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை அகற்றுமாறு வாஷிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் சுதந்திரத்திற்கான இல்லம் (Freedom House) எனும் அரச சார்பற்ற அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்கள் காரணமாகவும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாகவுமே அமெரிக்காவின் மிலேனிய சவால்களுக்கான நிதியுதவிகளை பெற்றுக் கொள்ளும் தகுதி இலங்கைக்கு இல்லையென இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மிலேனிய சவால்களுக்கான நிதியுதவிகளை அளிப்பதற்கு தகுதியான நாடுகளைத் தேர்வு செய்யும் ஆணைக் குழுவான மிலேனியம் சவால்களுக்கான ஆணைக் குழுவின் ஆய்வுகள் சுதந்திரத்திற்கான இல்லம் எனும் மேற்படி அமைப்பின் மதிப்பீடுகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் சந்தர்ப்பத்திலேயே மேற்படி அமைப்பு இவ்வாறு பரிந்துரைத்துள்ளது.

மிலேனிய சவால்களுக்கான நிதியுதவிகளை பெற்றுக் கொள்வதற்கு தகுதியான நாடுகளில் ஒன்றாக 2004 ஆம் ஆண்டு இலங்கை தெரிவு செய்யப்பட்டது. ஆயினும், இந்த நிதியுதவிகளை பெறுவதற்கு தகுதியான நாடுகளாக தெரிவு செய்யப்படும் நாடுகள் தமது நாடுகளின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விடயங்களில் முன்னேற்றங்களை காண்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நன்கொடை நிதியுதவிகள் வழங்கப்படும்.

ஆனால், இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், பாரியளவில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் சுட்டிக்காட்டியே மேற்படி அமைப்பு இலங்கைக்கான நிதியுதவிகள் பெறும் தகுதியை மீள்பரிசீலனை செய்யக் கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களையும் கண்டித்துள்ள இந்த அமைப்பு, கருத்துச் சுதந்திரத்திற்கான கட்டுப்பாடுகள், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் மீதும் கேள்விக் கணைகளை தொடுத்துள்ளது.

ஊடகங்கள் மீதான துன்புறுத்தல்கள், அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் தமிழர்கள் மீது இரு தரப்பும் மேற்கொள்ளும் வன்முறைகள் காரணமாக இலங்கையில் அரசியல் உரிமைகளும் சிவில் சமூகத்தின் சுதந்திரமும் இந்த வருடம் பாரியளவில் மறுக்கப்பட்டுள்ளதாகவும் தமது அறிக்கையில் சுதந்திரத்திற்கான இல்லம் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலகட்டத்தில் ஹிட்லரின் நாஜிப் படைகள் மேற்கொண்ட இன அழிப்பிற்கெதிராக போராட 1941 ஆம் ஆண்டு அமெரிக்காவின் புத்திஜீவிகளும் தலைவர்கள் பலரும் இணைந்து உருவாக்கியதே இந்த சுதந்திரத்திற்கான இல்லம் எனும் அமைப்பாகும்.

உலகளாவிய ரீதியில் சிவில் சமூகத்தின் உரிமைகள், சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக போராடி வரும் இவ்வமைப்பு அமெரிக்காவின் முன்னணி சிவில் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.