Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் நான்கு பொதுமக்கள் சுட்டுப்படுகொலை.

Featured Replies

வவுனியாவில் நான்கு பொதுமக்கள் சுட்டுப்படுகொலை.

வவுனியா கூமாங்குளத்தில் நேற்று மாலை 5.45 மணியளவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் வீதியால் சென்ற பெண்மணி உட்பட நால்வரை சிறீலங்கா படையினர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்போது வீடொன்றில் இருந்த சிறுவன் ஒருவனும் வயோதிபர் இருவரும் மற்றும் வீதியில் சென்ற பெண்மணியுமே கொல்லப்பட்டவர்களாவர். இவர்களை இராணுவத்தினர் படுகொலை செய்த போதும் காவல்துறையினர் இதனை மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

-Pathivu-

வவுனியாவில் நேற்று மாலை படையினர் துப்பாக்கிச் சூடு பெண், சிறுவன் உட்பட நால்வர் உயிரிழந்தனர்

வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

வவுனியாவுக்கு மேற்கே சுமார் 6 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கூமாங்குளத்திலேயே நேற்று மாலை 5.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீடொன்றினுள் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவரும் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவரும் கொல்லப்பட்டனர்.

விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற மோதலிலேயே மூன்று புலிகள் கொல்லப்பட்டதாகவும் மோதலின் நடுவில் சிக்கி பெண்ணொருவர் கொல்லப்பட்டதாகவும் படையினர் கூறியுள்ளனர்.

எனினும், படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவிப் பொதுமக்களேயென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.க்களின் வட்டாரங்கள் தெரிவித்தன.

இரு வயோதிப ஆண்களும் சிறுவனொருவனும் பெண்ணுமே கொல்லப்பட்டதாகவும் அந்த வட்டாரங் கள் தெரிவித்தன.

இதில் பெண்ணினதும் மற்றும் இருவரதும் சடலங்கள் நேற்றிரவு வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டன.

இந்தச் சம்பவம் குறித்து வவுனியா மாவட்ட நீதிபதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

thinakkural.com

தற்போது நடப்பது மக்கள் ஆட்சி

  • தொடங்கியவர்

துணை இராணுவக் குழுவினரால் மூவர் படுகொலை.

சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா குமணங்குளத்தைச் சேர்ந்த சந்திரகுமார் இராஜகோபால் (வயது 20), அருளப்பு கேதீஸ்வரன்(வயது 48) மற்றும் சுப்பிரமணியம் சந்திரமதி (வயது 68) ஆகியோரை துணை இராணுவக் குழுவினர் நேற்று புதன்கிழமை மாலை 5.45 மணிக்கு சுட்டுப் படுகொலை செய்தனர். இதில் இருவர் படுகாயமடைந்தனர்.

பலசரக்குப் பொருட்கள் வாங்குவதற்காக தனது தாயாருடன் சந்திரகுமார் இராஜகோபால் சென்று கொண்டிருந்தார். அதேபோல் தொலைபேசி பேசுவதற்காக சென்றபோது அருளப்பு கேதீஸ்வரன் படுகொலை செய்யப்பட்டார்.

இப்படுகொலைச் சம்பவம் நடந்த வவுனியா வேப்பங்குளம் சிறிலங்கா இராணுவ முகாம் பகுதியில் இதேபோல் 5-க்கும் மேற்பட்ட படுகொலைச் சம்பவங்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இப்படுகொலைகள் தொடர்பாக அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான சிறிலங்கா இராணுவ அதிகாரியிடம் வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் விவரங்களைக் கேட்டறிந்துள்ளார்.

-Puthinam-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.