Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உருவாகிறது புதிய சூறாவளி; இலங்கை இந்திய வானிலை மையங்கள் எச்சரிக்கை!

Featured Replies

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளியாக மாற்றமடையும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மற்றும் இந்திய வானிலை அவதான மையங்கள் எச்சரித்துள்ளன.

இதுதொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் தரிகையில்,

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் 2018 டிசம்பர் 13ஆம் திகதி காலை 05.30 மணிக்கு திருகோணமலைக்கு கிழக்கு- தென்கிழக்காக அண்ணளவாக 850 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 6.5N, கிழக்கு நெடுங்கோடு 88.7E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது.

இத் தொகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைவதுடன்

தொடர்ந்து வரும் 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக உருவாகக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாகவும் வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகள் குறித்தும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுவதுடன் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இதேவேளை இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தருகையில்,

“தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்கு தென் கிழக்கே 1170 கி.மீ.தொலைவில் நிலைகொண்டுள்ளது.

மேலும் இது இன்று இரவுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். நாளை இது புயலாக வலுப்பெற்று தற்போதைய நிலைப்படி வட தமிழக கடற்கரைப்பகுதி, தெற்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக டிச. 15, 16 தேதிகளில் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும். ஓரிரு இடங்களில் சில நேரம் கனமழையும் பெய்யக்கூடும். மீனவர்கள் டிச. 15, 16 ஆகிய தேதிகளில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போது உள்ள நிலையில் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கிறோம். இது 1120 கி.மீ. தொலைவில் ஆழ்கடலில் உள்ளது. நகர்ந்து வரும் நிலையில் மாற்றங்கள் உள்ளதால் தெளிவாக எங்கு கரையைக் கடக்கும் என்று கூறமுடியாது.”

எவ்வாறாயினும் ஏற்கனவே வங்கக் கடலில் உருவான கஜ சூறாவளியின் அழிவுத் தாக்கம் தமிழகத்தில் இன்னும் சீராகாத நிலையில் இந்த புதிய புயல் உருவாகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.ibctamil.com/srilanka/80/110738?ref=rightsidebar

  • தொடங்கியவர்

திசைமாறியது புயல்; ஆந்திராவுக்கு செல்கிறது: தமிழகத்துக்கு மழை இருக்காது- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கணிப்பு

 

rainPNG

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து டிசம்பர் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆந்திர மாநிலம் நரசபூர் அருகே கரை கடக்க வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கணித்துள்ளார். புயல் ஆந்திரா நோக்கிச் செல்வதால் சென்னை உட்பட தமிழகத்துக்கு எதிர்பார்த்த மழை கிடைக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

தெற்கு மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி பின்னர் நாளை புயலாக மாறும். இந்த புயலுக்கு ‘பேய்ட்டி’ என பெயரிடப்பட்டுள்ளது.

selva-2jpgjpg

செல்வகுமார்

 

 

 

 

 

 

இந்த புயல் வட தமிழகம் அல்லது தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறு நடந்தால் வட தமிழகத்தில் குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் அந்த புயல் திசைமாறி வடக்கு நோக்கி நகர்கிறது.

இமயமலை பகுதியில் பெய்யும் பனி காரணமாகவும், மியான்மரில் இருந்து இழுக்கும் குளிர்ந்த காற்று காரணமாகவும் புயலின் போக்கு மாற வாய்ப்புள்ளது. மசூலிபட்டினம் - காக்கிநாடா இடையே நர்சபூர் அருகே டிசம்பர் 16-ம் தேதி கரையை கடக்கும்.

கிழக்கு மற்றும் மேற்கு  கோதாவரி மாவட்டங்கள் வழியாக வலுவிழந்த நிலையில்  கரையை கடக்கும். எனவே  இதனால் பாதிப்பு இருக்காது. புயல் கரையை கடக்கும் முன்பாக கடலை சீற்றமாக வைத்திருக்கும்.

தமிழக கடல்பகுதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்துக்கு மழை இருக்காது. அதேசமயம் பயனளிக்கும் மழையும் இல்லாமல் போகும். சென்னை சுற்று வட்டார பகுதிகளில் லேசான மழை இருக்கலாம். கனமழை இருக்காது. திருவள்ளூர், சென்னை மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.  

https://tamil.thehindu.com/tamilnadu/article25734105.ece?utm_source=articlePage&utm_medium=artRel

  • தொடங்கியவர்

பயங்கரமாக உருவெடுத்தது ’பெய்ட்டி’ சூறாவளி; யாழ்ப்பாணத்துக்கு ஆபத்து??

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவான தாழமுக்க மண்டலமாக மாறி தற்பொழுது பாரிய சூறாவளியாக உருவெடுத்துள்ளது.

இதற்கு தாய்லாந்து நாடு பரிந்துரைந்த பேத்தை என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது இலங்கையின் திருகோணமலையிலிருந்து வடகிழக்காக 465கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது.

இந்த வலுத்த சுறாவளி நாட்டிலிருந்து விலகக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 24 மணித்தியாலங்களில் வடக்கு மற்றும் வடமேற்கு திசைகளில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்காரணமாக ஆழ்கடல் மீன்பிடித்தலில் ஈடுபடும் மீனவர்கள் இன்றையதினம் மட்டகளப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையிலான கடற்கரைகளை அண்டிய கடலுக்குள் செல்லவேண்டாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்பதுடன் நாடுமுழுவதும் குளிரான கால நிலை நிலவக்கூடும்.

காற்றின் வேகம் வடக்கு மாகாணத்தில் 60 கிலோமீட்டர்களுக்கு மேலாகக்கூடும் என்பதுடன் ஏனைய பகுதிகளில் 50 கிலோமீட்டர்கள் வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/110893

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.