Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசமைப்பை பாதுகாப்பதற்காக கூட்டமைப்பு செயற்பட்ட விதம் தொடர்பில் ஐ.தே.க பெருமிதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

luxman-kiriyella-720x450.jpg

அரசமைப்பை பாதுகாப்பதற்காக கூட்டமைப்பு செயற்பட்ட விதம் தொடர்பில் ஐ.தே.க பெருமிதம்!

அரசமைப்பை பாதுகாப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பட்ட விதமானது, ஐக்கியத்துக்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணியிலிருந்து அரசாங்கத்தில் இணைய இன்னுமொரு தரப்பினர் வருகைத் தரவுள்ளனர். தற்போது எமது அரசாங்கத்துடன் இணைந்துக் கொண்டவர்களும் அமைச்சுப் பதவிகளை எதிர்ப்பார்த்து இணைந்துக்கொள்ளவில்லை.

எம்முடன் இணைந்து அரசியல் பயணத்தை தொடர்வதற்காகவே அவர்கள் வந்தார்கள். இவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை.

எவ்வாறாயினும், தற்போது நாட்டு மக்களுக்கு அரசியலமைப்பு தொடர்பில் சிறந்த ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களினால், ஒருமுறையேனும் அரசியலமைப்பை மக்கள் வாசித்திருப்பார்கள்.

இவ்வாறான நிலையில், அமைச்சுக்களுக்கான பெயர் பட்டியலைத் தயாரிப்பது பிரதமருக்கு உரிய கடப்பாடு என்றும் அதனை இறுதி செய்யும் கடமை ஜனாதிபதிக்கு உரியது என்றும் மக்கள் அறிந்திருப்பார்கள்.

இவர்கள், இருவரும் ஒன்றிணைந்துதான் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பதவிகளை வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வார்கள்.

அத்தோடு, இன்று சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரிக்குக்கூட இவற்றில் தலையிடும் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டவாக்கம், நீதி மற்றும் நிறைவேற்றுத் துறைக்கு சமமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், எமது அரசாங்கம் உறுதியான பயணத்தை எதிர்க்காலத்திலும் மேற்கொள்ளும் என்பதை நான் கூறிக்கொள்கிறேன்.

வரவு – செலவுத் திட்டத்தைப் பொறுத்தவரை, மக்கள் எதிர்ப்பாராத சலுகைகளை வழங்க நாம் தீர்மானித்துள்ளோம். மேலும், இன்றும் நாட்டில் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் தான் இருக்கிறார். மஹிந்த தரப்பினர் வேறு கட்சிக்கு சென்றுள்ளமையால், அவர்களுக்கான சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை தானாகவே இரத்து செய்யப்படும்.

இதுதொடர்பில் நீதிமன்றைக்கூட நாட வேண்டியத் தேவைக் கிடையாது. எனவே, சபாநாயகர் தான் இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்க வேண்டும்.

அத்தோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற எம்மைப் போன்ற ஒரு கட்சி தெற்கு கட்சியொன்றுடன் இணைந்து செயற்படுவதை முக்கியமான ஒன்றாகக் கருத வேண்டும்.

அவர்கள், கடந்த காலங்களில் இவ்வாறான ஒரு கொள்கையில் இருக்கவில்லை. தற்போது, அவ்வாறு இல்லை. நாடாளுமன்றில் அவர்கள் முழுமையாக நாட்டின் அரசமைப்பை பாதுகாத்தார்கள்.

நாட்டின் ஐக்கியத்துக்கும் இது முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. இவ்வாறான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டை நாம் முழுமையாக வரவேற்கிறோம்“ என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/அரசமைப்பை-பாதுகாப்பதற்க/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அத்தோடு, இன்று சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரிக்குக்கூட இவற்றில் தலையிடும் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டவாக்கம், நீதி மற்றும் நிறைவேற்றுத் துறைக்கு சமமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், எமது அரசாங்கம் உறுதியான பயணத்தை எதிர்க்காலத்திலும் மேற்கொள்ளும் என்பதை நான் கூறிக்கொள்கிறேன்.

அமைச்சரின் கூற்றுப்படி இவர்களின் தில்லு முல்லுச் செயற்பாடுகளில் நீதி மன்றங்களும் தலையிடும் அதிகாரம் மட்டுப்படுத்தபட்டுள்ளது. :shocked:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.