Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தகம் …………………..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகம் …………………..
உங்கட மகனை நான் அனுப்புகிறேன்.
அவற்ர புத்தகத்தையும், 50000 ரூபா காசை அட்வான்சாகவும் தாங்கோ.
ஓம் தம்பி சொன்ன மாதிரி செய்யிறன். எம்மவரின் புலம்பெயர்வு காலத்தில்
சாதாரணமாகப் பேசப்பட்ட வசனங்களில் ஒன்று.
ஏஜென்ஸிமாருக்கும் எமக்குமான உரையாடல்களில் இச் சொற்கள் சர்வசாதாரணமாகவே வரும்
அது என்ன புத்தகம்.

பாடப்புத்தகம், பாஸ்போட் ( கடவுச் சீட்டு -Passport ), மோட்டார் வாகனப்
பதிவுப் புத்தகம். ஆகியவை எம்மால் புத்தகமென கூறப்படும் புத்தகங்களாகும்.
எம்மவருக்கும் புத்தகம் எனப்படும் பாஸ்போட்டுக்கும் இரத்தமும் சதையுமான
உறவு ஒன்று உள்ளது.
பலாலி விமான நிலையம் ஊடாக நாம் வெகு சுதந்திரமாக இந்தியாவுக்குப் போய்
வந்த ஒரு காலம் இருந்தது. 1974 ஆம் ஆண்டு எனது அப்பாவை பலாலி விமான
நிலையம் வரை சென்று இந்தியா பயணமாக வழியனுப்பி வந்தது ஞாபகத்திற்கு
வருகிறது.
அப்போது பாஸ்போட் இல்லாமல் அவசர காலப் பத்திரம் என்ற ஒரு முறை
பயன்படுத்தும் ஆவணம் மூலமாக பயணத்தை மேற்கொண்டோரும் உள்ளனர்.
நாளாந்தம் காலை 10 மணிக்கு பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்தின்
திருச்சி விமான நிலையத்திற்கு விமானமொன்று புறப்படும்.
அதில் யாழ்ப்பாணத்தில் வெட்டப்பட்ட கிடாய் ஆட்டின் இறைச்சியை விமான நிலைய
ஊழியர்கள் மூலமாகத் தமது உறவுகளுக்கு கிரமமாகக் கொடுத்து விட்டோரும்
உள்ளனர்.
கொடிகாமத்திற்கு அங்கால கறுப்பா சிவப்பா எனத் தெரியாமல் தமது ஊருக்குள்
முடங்கி வாழ்ந்த காலமொன்றும் இருந்தது.
1977 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கம் வந்தது. மத்திய கிழக்கு
நாடுகளுக்கு இலங்கையர்கள் தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்ற கைநிறைய
உழைக்கும் நிலை வந்தது.
அப்போது பாஸ்போட் எடுப்பதற்கான ஆள்களின் தொகை சடுதியாகப் பல மடங்கு அதிகரித்தது.
அதனால் அரசாங்கம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு என மட்டும் குறித்துப்
பாஸ்போட்டை வழங்கும் முறையைக் கொண்டு வந்தது.
மத்திய கிழக்கு எனப்பட்ட மேற்காசிய அரபு நாடுகளில் உழைத்த பணம் நாட்டின்
நாலா பகுதிகளிலும் புதுப் பணக்காரக் குடும்பங்களை உருவாக்கியது.
காலச் சக்கரம் உருண்டது. போர் மேகங்கள் கருக்கொள்ள தப்பிக் கொள்வதற்காக
வெளிநாடுகளுக்கு எம்மவர் போகத் தொடங்கும் நிலைமை 1980 களின் ஆரம்பத்தில்
வந்தது.
அப்போது பாஸ்போட்டின் தேவை எழுந்தது. கச்சேரி எனப்பட்ட மாவட்டச்
செயலகங்கள் ஊடாக மட்டும் பாஸ்போட்டிற்கு விண்ணப்பிக்கும் முறை இருந்தது.
அப்படி விண்ணப்பித்தால் 3 மாத கால அளவில் பாஸ்போட் வந்தது.
நேரடியாகக் கொழும்பு சென்று குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினுள்
உள்ளால் அலுவல் பார்த்து ஓரிரு நாள்களில் பாஸ்போட் எடுக்கும் வழக்கமும்
இருந்தது.
புளத்சிங்கள தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக வந்த ரொனிடி மெல்
வரவு செலவுத் திட்டத்தின் நிதிப் பற்றாக்குறைக்கு நிதி பெறும் வழிகளில்
ஒன்றாக ஒரே நாளில் பாஸ்போட் பெறும் முறை ஒன்றை 1980 களின் ஆரம்பத்தில்
கொண்டு வந்தார்.
பாஸ்போட் அலுவலகத்தில் அவரைப் பிடித்து இவரைப் பிடித்து இலஞ்சம் கொடுத்து
பாஸ்போட்டை ஓரிரு நாள்களில் பெறுகின்றனர்.
அதை ஏன் அரசாங்கத்திற்கு வருமானமாக மாற்றக் கூடாதென நினைத்து இந்தப்
பிரேரணையைக் கொண்டு வந்தார்.
இத் திட்டம் பெரும் முன்னோடித் திட்டமாகப் பார்க்கப்பட்டது.
மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதற்காக வழங்கப்பட்ட பாஸ்போட்டை சகல
நாடுகளுக்கும் செல்வதற்கான நடைமுறையாக பொன்ட் சைன் எனப்பட்ட பிணை
நிற்கும் நடைமுறை ஒன்றை அரசாங்கம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி இருந்தது.
இதன் படி குறிப்பிட்ட மட்டத்திற்கு மேலாக மாதச் சம்பளம் பெறும் ஒருவர்
தமது நியமனக் கடிதம், சம்பள விபரப் பட்டியல் ஆகியவற்றைக் கொண்டு குடிவரவு
குடியகல்வுத் திணைக்களத்திற்கு செல்லல் வேண்டும்.
அங்கு வைத்து உரிய படிவத்தை நிரப்பி சகல நாடுகளுக்கும் செல்வதற்கான
பாஸ்போட் தேவைப்படுபவருக்கான பிணை எனப்பட்ட பொன்ட் சைன் ( Bond Sign)
வைத்தல் வேண்டும்.
அந்தப் பாஸ்போட்டில் பொன்ட் வைத்தவருக்கு என மாவட்டக் குறியீட்டு ஆங்கில
எழுத்துடன் ஓர் இலக்கம் ஒதுக்கப்படும். அது பாஸ்போட்டில் குறிக்கப்படும்.
ஒருவருக்கு மாவட்டக் குறியீட்டுடன் ஒரு இலக்கம் ஒதுக்கப்பட்டால் வேறு
ஒருவருக்கு அது வழங்கப்பட மாட்டாது.
உதாரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் பொன்ட் சைன் வைத்தால் அவருக்கு
JF 00121 என இலக்கம் ஒதுக்கப்படும்.
அது போல அரசுக்கு வருமான வரி கட்டுபவர்களும் பொன்ட் சைன் செய்ய முடியும்.
அவருக்கும் இதே போன்ற நிபந்தனைகளும் உண்டு. அரச உத்தியோகத்தரின் சம்பள
அளவுக்கும், வருமான வரி கட்டுபவர்களின் வருமான அளவுக்கும் ஏற்ப பொன்ட்
சைன் வைக்கக் கூடிய தகுதி எண்ணிக்கை கூடும்.
பெரும்பாலும் ஒருவர் இரண்டு மூன்று பேருக்கு மேல் சைன் வைக்க விரும்புவதில்லை.
ஏனெனில் வெளிநாட்டுக்குச் செல்பவர் திரும்பி வராவிட்டால் பொன்ட் சைன்
வைத்தவர் தான் அதறகுரிய பிணைப் பணத்தைக் கட்ட வேண்டும்.
இதனால் பொன்ட் சைன் வைப்பவர்கள் தமக்கென ஒரு தொகைப் பணத்தை வாங்கிக்
கொண்டு பிணை வைத்தார்கள்.
நிதி அமைச்சரான ரொனி டிமெல் பின்னாளில் வரவு செலவுத் திட்டப் பிரேரணை
மூலமாக சகல நாடுகளுக்குமான கடவுச் சீட்டைப் பெறுவதற்கான பொன்ட் சைன்
முறையை நீக்கி விட்டார்.
அதன்படி மத்திய கிழக்கு நாடுகளுக்கான பாஸ்போட்டுக்கு ஒரு கட்டணமும், சகல
நாடுகளுக்குமான பாஸ்போட்டுக்கு ஒரு கட்டணமும் அறவிடும் நடைமுறையைக்
கொண்டு வந்தார்.
இது இலங்கையர் யாவருக்கும் சிறந்த ஓர் முறையாக இருந்தது.
முன்பு பம்பலப்பிட்டியில் பாஸ்போட் பெறும் அலுவலகம் இருந்த போது காலை 6
மணிக்கே சனக் கூட்டம் அலைமோதும். சமாதான நீதிவான்கள் மக்களுக்கு
இலவசமாகச் சேவை செய்ய வேண்டுமெனக் கூறுவார்கள்.
ஆனால் அங்கும் தற்போது பாஸ்போட் அலுவலகம் உள்ள புஞ்சிபொரளையிலும்
பகிரங்கமாக விலைபேசி சமாதான நீதிவான்களின் கையொப்பம் விற்கப்படுவதனைக்
காணலாம்.
போர்க் காலத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் புலம் பெயர்வுப்
பயணத்திற்குச் சென்ற போது பாஸ்போட்டின் கீழ் 100, 500, 1000 என
காலத்திற்கு ஏற்ப தாள் காசு வைத்து உரிய சோதனைகளின் போது கொடுத்தால் தான்
நகர முடிந்தது.
வல்லரசுப் பனிப் போர்க் காலம் இருந்த போது கிழக்கு ஜேர்மனி, மேற்கு
ஜேர்மனி முரண்பாடுகள் தீவிரமாக இருந்தது.
மேற்கு ஜேர்மனி கிழக்கு ஜேர்மனிய மக்களை வசியப்படுத்தி பேர்லின் எல்லைச்
சுவரேறிக் குதிக்க வைத்தது.
அதற்குப் பழிவாங்க கிழக்கு ஜேர்மனி இலங்கை போன்ற போர் மேகம் சூழ்ந்த
நாடுகளிலிருந்து ஆள்களை தனது நாடு ஊடாக மேற்கு ஜேர்மனி போக வழிவிட்டது.
எம்மவர் பல ஆயிரம் பேர் மேற்கு ஐரோப்பா போக கிழக்கு ஜேர்மனி தாராள உபயம் தந்தது.
ஒருவரது பாஸ்போட்டை இன்னொருவர் உடமையாக வைத்திருப்பது சட்டப்படி குற்றம்.
ஆனால் ஏஜென்ஸிமார் பலரது பாஸ்போட்டை தமது உடமையாக வைத்திருப்பது சர்வ
சாதாரணமாக இருந்தது.
பாஸ்போட்டில் தலைமாற்றி இன்னொருவரை அனுப்புவதனை ஹெல்மட் என அழைத்தார்கள்.
புலம் பெயர்ந்த பல இலட்சம் பேர் இன்று பிரித்தானியா, ஜேர்மனி,
சுவிற்சலாந்து, சுவீடன்,கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என தாம்
வாழ்ந்த நாடுகளின் பிரசையாகி அந்த நாடுகளின் பாஸ்போட்டுடன் சிறிலங்கா
விசா பெற்று வருவது சாதாரண ஒன்றாகி விட்டது.
கொழும்பு, கண்டி,அநுராதபுரம் ஆகிய இடங்களில் மட்டுமிருந்த பாஸ்போட்
வழங்கும் அலுவலகங்கள் 2010 ஆம் ஆண்டுக்குப் பின்பாக மாகாணத்திற்கு ஒரு
அலுவலகம் என அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்டு விட்டது.
வட மாகாணத்திற்குரிய அலுவலகம் வவுனியாவில் உள்ளது.
நேற்றைய தினம் 01.01.2019 ஆம் திகதி முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்காக
பாஸ்போட் வழங்கும் முறை நீக்கப்பட்டு சகல நாடுகளுக்கான ( All Countries )
பாஸ்போட் மட்டுமே வழங்கும் நடைமுறையை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.
அதனால் பாஸ்போட் ( Passport ) நினைவலைகள் பல வந்து இங்கு
எழுத்துருவாக்கம் பெற்றுள்ளது.

வேதநாயகம் தபேந்திரன்
நன்றி- எதிரொலி 02.01.2019 புதன்கிழமை

கன காலத்துக்கு பிறகு ஊரவனை காண்பதில் சந்தோசம். எப்படி சுகங்கள்?

உங்கள் பதிவு கதைக்கும் கட்டுரைக்கும் இடையில் இருப்பது போலத் தோன்றுவதால் கதை கதையாம் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன் (நீங்கள் உலகச் செய்தி பக்கம் பதிவை இட்டு இருந்தீர்கள்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி  ஆம் பல பணி நிமிர்த்தம் நீண்ட நாள் வரவில்லை அத்துடன் வந்த பொது வரவேற்பு நான் எதிர்பார்த்தது போல் இல்லை. பழையவர்கள் தங்குளுக்குள் பேசுமளவுக்கு புதியவர்களை வரவேற்று கருத்திடல் திருப்திகரமாக தோன்றவில்லை. அத்துடன் ரகுநாதனுக்குப் பின் அகே பாடசாலையின் அதிபர் பொறுப்பினை ஏற்று அதில் கொஞ்சம் ஈடுபாடாகி விடடேன். இப்போது கொஞ்சம் நேரம் கிடைத்து ள்ளது. மேலும் வெளிச்சம் எனும் நிகழ்ச்சியை மீண்டும் இணைய வழியாக தொடக்கி நடாத்தலாம் என்று எண்ணியுள்ளேன் . எனது அனுமதி இன்றி தரிசம தொலைக்காடசி எனது நிகழ்ச்சியை தொடர்கிறது தற்போது ஐபிசி புதிய வெளிச்சம் என்ற பெயரில் தொடர்கிறார்கள். நானும் இன்னுமொரு பெயரில் திடங்கலாமென்று நினைக்கிறன் . யாழ் உறவுகளின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் , குறைந்தது நிழலி என்ற தனி மனிதனாவது!. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.