Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான்: தெய்வ நிந்தனை வழக்கில் கிறிஸ்தவ பெண் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  •  
மரண தண்டனை ரத்தாகி விடுதலை செய்யப்பட்ட ஆசியா பீபி Image caption மரண தண்டனை ரத்தாகி விடுதலை செய்யப்பட்ட ஆசியா பீபி

தெய்வ நிந்தனை வழக்கில் கிறிஸ்தவ பெண் ஒருவரின் மரண தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட சீராய்வு மனுவை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட சச்சரவொன்றில் ஆசியா பீபி எனும் பெண் முகமது நபியை அவமனாப்படுத்திய வழக்கில் 2010 ஆம் ஆண்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால், தான் அவ்வாறாக அவமானப்படுத்தவில்லை என்று கூறிவந்தார். எட்டு ஆண்டுகள் தனிமை சிறையிலும் கழித்தார்.

ஆசியா பீபி விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவரது கணவர் வெளிநாடுகளில் தஞ்ச கோரிக்கை விடுத்தார்.படத்தின் காப்புரிமை AFP Image caption ஆசியா பீபி விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவரது கணவர் வெளிநாடுகளில் தஞ்ச கோரிக்கை விடுத்தார்.

தெய்வ நிந்தனை சட்டங்கள் வலுவாக உள்ள பாகிஸ்தானில் இவரது வழக்கு பலத்த சச்சரவையும் பிரிவினையையும் ஏற்படுத்தியது.

அவரது வழக்கு இதற்கு முன்னால் மேல் முறையீட்டுற்கு வந்ததை தொடர்ந்து, கலவரம் ஏற்படும் என்ற அச்சத்தில் இஸ்லாமாபாத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தீவிர மதசார்பாளர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

மேல்முறையீடு

8 ஆண்டுகள் தனிமை சிறையில் கழித்த பின்னர், மேல்முறையீட்டு மனு பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாகிர் நிசாருக்கு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, ஆசியா பீபியை விடுதலை செய்தார்.

பழிவாங்கல்

தெய்வநிந்தனை குற்றத்திற்காக கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென பெரும் ஆதரவு பாகிஸ்தானில் நிலவுகிறது.படத்தின் காப்புரிமை EPA Image caption தெய்வநிந்தனை குற்றத்திற்காக கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென பெரும் அளவில் ஆதரவு பாகிஸ்தானில் நிலவுகிறது.

தெய்வ நிந்தனை சட்டம் பாகிஸ்தானில் பெரும்பாலும் பழிவாங்கலுக்காக பயன்படுத்தப்படுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆசியா பீபிக்கு ஆதரவாக முறையீடு செய்த அந்த மாகாண ஆளுநர் சல்மான் தசீர், அவரது பாதுகாவலராலேயே கொல்லப்பட்டதால் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றது. .

அவரை கொன்ற பாதுகாவலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும், அவர் பலரால் கதாநாயகனாக கொண்டாடப்படுகிறார்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன?

நான்கு குழந்தைகளுக்கு தாயான ஆசியா பீபி 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அண்டை வீட்டாருடன் விவாதத்தில் ஈடுப்பட்டார்.

அந்த வாக்குவாதமும் சாதாரணமான ஒரு விஷயத்திற்காகதான் தொடங்கியது. அவர்கள் லாகூர் அருகே பழம் பறித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பக்கெட் தண்ணீர் பகிர்ந்து கொள்வதில்தான் பிரச்சனை தொடங்கியது.

ஆசியா பீபிவியின் மரண தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்த பின்னர், நாட்டை முடக்கும் அளவில் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன.படத்தின் காப்புரிமை EPA Image caption ஆசியா பீபிவியின் மரண தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்த பின்னர், நாட்டை முடக்கும் அளவில் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன.

தாங்கள் பயன்பாட்டுக்காக வைத்திருந்த தண்ணீரை எடுத்து ஆசியா அருந்திவிட்டார். இதனால், எங்கள் நம்பிக்கையின்படி அந்த தண்ணீரின் புனிதம் கெட்டுவிட்டது. இனி அந்த தண்ணீர் பயன்படுத்த முடியாது என்று கூறி சச்சரவிட்டனர்.

ஆசியா பீபி மதம் மாற வேண்டும் என்று அவர்கள் வாதிட்டதாகவும், அதற்கு மறுப்பாக முகமது நபியை ஆசியா தெய்வந்தனை செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

சச்சரவிட்டதை ஒப்புக் கொண்ட ஆசியா பீபி, தொடக்கத்திலிருந்தே தெய்வநிந்தனை குற்றத்தை மறுத்து வந்தார்.

அவரது வழக்கறிஞர் அரசு தரப்பில் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக கூறி வந்தார்.

அவருக்கு ஆதரவாக

இஸ்லாம்தான் பாகிஸ்தானின் அரச மதம். இது அவர்களின் சட்டத்திலும் பலமாக எதிரொலிக்கும்.

மக்களும் தெய்வநிந்தனை சட்டத்திற்கு ஆதரவாகவே இருக்கின்றனர்.

இப்படியான சூழ்நிலையில், ஆசியாவை ஆதரித்தவர் பஞ்சாப் மாகாண ஆளுநரான சல்மான். ஆசியா பீபியை மன்னிக்க வேண்டும், தெய்வநிந்தனை சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று கோரி வந்தார்.

இதன்காரணமாக. 2011 ஆம் ஆண்டு, அவரது பாதுகாவலராலேயே கொல்லப்பட்டார்.

https://www.bbc.com/tamil/global-47042571

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.