Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நீர்


              இந்த உலகத்துல உசுரோட இருக்கனும்னா அதுக்கு இந்த நீர்தான்  ரொம்பத் தேவை.. அணுக்களின் சேர்மம் நீர்னு அறிவியல் சொல்லுது. H2Oதான் இந்த  நீரோட மூலக்கூறு. நீர் திட,திரவ ,வாயு வடிவத்துல இருக்கு .
   
      மனுசனுக்கு மட்டுமில்ல இந்த உலகத்துல இருக்குற அத்தன ஜீவராசிக்கும் தண்ணீர் ரொம்பத் தேவை. நீரின்று அமையாது உலகுனு   வள்ளுவர் சொல்லிருக்காரு. மனுசனோட உடம்புல நீர்  70% இருக்கு. இயற்கை நமக்கு குடுத்த கொடைதான் இந்த நீர். ஒரு மனுசன் எவ்ளோ கோவத்துல இருந்தாலும், முகத்துல நல்லா  சள் சள்னு தண்ணிய அடிச்சா இல்ல  ஒரு சின்ன குளியல் போட்டாலோ நம்ம கவலைகளோ இல்ல, உடல் அயர்ச்சியோ இருந்த இடம் தெரியாம ஓடிப்போயிரும். மந்திரம் போட்டது மாரி நம்ம உடம்பு  நல்லா என்ர்ஜடிகா ஆகிரும். மனசும்  லேசாகிரும். நம்ம மனசு சுறுசுறுப்பா இருக்குறப்ப நம்மளால பெரிய பெரிய விசயங்களையெல்லாம் அசால்டா சாதிக்க முடியும். சோ  எப்பலாம் டய்ர்டா  ஃபீல் பண்றோமோ அப்பலாம்  தண்ணிக்குள்ள நம்ம முகத்தையோ இல்ல உடலையோ கொஞ்சம்  காட்டுனா  போதும். சூரியனைக் கண்ட பனித்துளி போல களைப்பு ஓடியே போயிரும்.

                        உலகமே நீராலதான் இயங்கிக்கிட்டு இருக்குன்னு சொல்லலாம். உலகத்துல இருக்குற நிலப்பரப்புல பெரும்பகுதி நீரால சூழப்பட்டு இருந்தாலும்.  மூன்றாவது உலகப்போர்னு ஒண்ணு வந்தா , அதுக்கு முக்கிய காரணியா இந்த தண்ணிதான் இருக்கும்னு ஒரு கணிப்பு இருக்கு இன்னைக்கு.

                      தாகம் தீர்க்குற இந்த நீருக்கு, உணர்வுகளை தன்னுள் எளிதில் ஈர்த்துக் கொள்ளும் தன்மை இருக்கு. எல்லா மதவழிபாடுகள்லயும்  நீருக்கு முக்கிய இடமுண்டு. இந்து சமயத்தில, கோயில்களுக்கு  சக்தியூட்ட கும்பாபிஷேகம் பண்ணுவாங்க. பன்னிரண்டு வருசத்துக்கு ஒரு தடவ  நடக்குற இந்த விழாவில, கலசங்களில் நீர் வைத்து அதுக்கு பக்கத்துல  உக்காந்த்துகிட்டு , நாப்பத்தெட்டு நாள்கள் மந்திரங்கள் ஓதுவாங்க. அந்த மந்திரங்களைச் சொல்லச் சொல்ல ஏற்படுகிற சக்தி அதிர்வுகளை இந்த நீர் , தனக்குள் ஈர்த்துக் கொள்ளும். அதுனால மந்திரங்களின் சக்தி அந்த நீருக்குள் இறங்கிரும்,  அந்தப் புனித நீரைத்  கோயிலுக்குள்ளயும்  அங்கருக்குற மக்கள் மேலயும் தெளிப்பாங்க. இப்பிடி பண்ணுறதுனால கோயிலின் சக்தி பெருகும்னு ஐதீகம்.

                பொறந்த குழந்தைகளுக்கு பேரு வைக்குறப்ப இந்தப் புனித நீர தெளிக்குற வழக்கம் இருக்கு சில மதங்கள்ல. இதுனால அந்தக் குழந்தைகள் புனிதமடைவதா ஒரு நம்பிக்கை இருக்கு நோயாளிகள்  இந்த தண்ணிர குடிச்சா எந்த வித நோய்களிலிருந்தும் விடுபடமுடியும்னு தீவிரமா நம்புறவங்களும் உண்டு இங்க.

                     வீடுகள்ல தீபாவளி,பொங்கல், நவராத்திரி போன்ற சமயத்துலய நடத்துற பூஜைகள்ல கூட நிறைந்த தம்ளரயோ இல்ல நிறைந்த ஒரு செம்பையோ வைச்சு  சாமி கும்பிடுற பழக்கம்  நிறைய குடும்பங்கள்ல இன்னும் இருக்கு.

                        அந்தக்  காலத்துல ரிஷிக்களும் முனிவர்களும் கைல வச்சிருக்குற கமண்டலத்துல  உள்ள நீரை தெளிச்சு மக்கள வாழ்த்துவாங்க.அவங்க சொன்னது சொன்ன மாரியே பலிக்கும். கமண்டலத்துல இருக்குற நீருல ரிஷியோட தவத்தின் சக்தி இறங்கிருக்கும். அதுனால ரிஷிக்களும் முனிவர்களும் சொல்லும் வாக்கு அப்பிடியே பலிச்சது. இத நம்ம புராணங்கள்ல பாத்துருப்போம்.
          
                  உணர்வுகள  உள் வாங்குற தன்மையுள்ள நீருக்கு அது நல்ல உணர்வு கெட்ட உணர்வுனு பிரிச்சு பாக்கத் தெரியாது. அதுனாலதான்  அந்தக் கால பெரியவங்க, சில இடங்கள்ல, சிலர் வீடுகள்ல தண்ணி வாங்கி குடிக்க மாட்டாங்க.  தண்ணி குடுக்குறவங்களோட மனநிலையை தண்ணீர் அப்பிடியே கிரகிச்சிக்கும். அவங்க கோவமான மனநிலைலயோ.. இல்ல எதிர்மறை சிந்தனை உடையவங்களாகவோ  இருந்தா, அந்த உணர்வுகள் இலவசமா நமக்குள்ள டவுன்லோட் ஆகிரும்னு தண்ணிய வெளில வாங்கிக் குடிக்கமாட்டாங்க.  அதே மாரி கெட்ட சூழ்நிலைகள்ளயும் தண்ணி  வாங்கி குடிக்கமாட்டாங்க. அந்த இடத்துல இருக்குற எதிர்மறை சக்தி நமக்குள்ள வந்து நம்ம எண்ண ஓட்டத்தயும் மாத்திரும்னு  குடிக்க மாட்டாங்க.

            எடுப்பார் கைபுள்ள மாரி இருக்குற இந்த  சக்தி வாய்ந்த தண்ணிய நாம எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்ளோ கெடுக்குறோம். ஜீவ நதிகள புனித நதிகளா வணங்குற பழக்கம் நம்மகிட்ட இருக்கு. அந்த நதிகள்ல   முங்கிக் குளிச்சா மக்களோட பாவங்கள்லாம்  கரைஞ்சிரும்னு தீவிர நம்பிக்கை மக்களிடையே இருக்கு. புனித நதியா நாம வணங்குற கங்கை நதிக் கரைல இருக்குற, காசில போய் ஒருத்தர் செத்தா அவரோட உடலை அப்பிடியே எரியூட்டாம நதில மிதக்க விட்டுருவாங்க சில பேரு. சில பேரு செத்தவங்களோட அஸ்தியக் கொண்டுவந்து காசில கரைப்பாங்க.. செத்துப் போன உடலு சொர்க்கத்துக்குப் போகனும்னு ,உயிரோட இருக்குற புனிதமான நதியையே சாகடிக்குற எல்லா வேலையையும் நாம செய்யுறோம்.

               நீர்நிலைகளத் தொலச்சிட்டு மழைநீர சேமிக்க முடியாம நமக்கு நாமே குழி தோண்டிக்கிட்டு இருக்கிறோம். நதிகளை கால்வாயா மாத்துன பெருமை இந்த தலைமுறைக்கு தான் கிடைச்சிருக்கு.
நீர்நிலைகளை தூர்வாருனா .. இல்ல ஆழப்படுத்துனா நம்மளோட நீர் ஆதாரங்களை நம்மளால பல மடங்கு பெருக்க முடியும்.  இதுனால விவசாயம் அதிகரிக்கும் .விலைவாசி  குறையும். இந்த வேலையை  அரசாங்கம் தான் செய்யனும்னு இல்ல. நம்ம கடமையை உணர்ந்து, அந்தந்த பகுதி மக்கள் இணைந்து செய்யலாம். இப்பிடி செஞ்சா,தண்ணீர் பற்றாக்குறை இருக்காது .வீட்டுத் தேவைகளுக்கு,விலங்குகளுக்கு, கால்நடைகளுக்கு தொழிற்சாலைகளுக்குனு எல்லாத் தேவைகளுக்கும் தண்ணீர் போதுமான அளவு கிடைக்கும். நீர் மேலாண்மையை சரிவர செஞ்சோம்னா நீர் வளத்த பெருக்க முடியும். நிலத்தடி நீரும் பெருகும்.

                 உலகத்துலயே நீர் இல்லா நகரமாக தென்னாப்பிரிக்கால இருக்குற கேப்டவுண் நகரம் இருக்குறத நாம  நினைவில்  வச்சிருக்கனும் .தமிழ்நாடுக்கு இந்த நிலை வருவதற்கு முன்னாடியே கொஞ்சம் விழிப்புண்ர்வோடு செயல்பட்டா நம்ம சந்ததி நம்மள வாழ்த்தும்.. சந்ததிகளுக்கு வெறும் சொத்து மட்டும் சேத்துவச்சா ஒரு பிரயோஜனமும் இல்ல அடுத்து வர்ற சந்ததி நல்லா வாழ்றதுக்கு ஏத்த சூழ்நிலைய தர்றோமாங்குறதுதான் முக்கியம். நல்ல வளமிக்க நாட்டை விட்டுட்டு போகணும்..அப்பத்தான் மனித சமுதாயமும் செழிக்கும்...நாடும் வளமிக்கதா மாறும்...

https://seeikara.blogspot.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.