Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரவு, பகலாக விமானத் தாக்குதல்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரவு, பகலாக விமானத் தாக்குதல்கள்.

- பண்டார வன்னியன் Tuesday, 17 April 2007 10:33

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நேற்றுப்பகலும் இரவும் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இத்தொடர் குண்டுவீச்சுத் தாக்குதலால் அப்பகுதியே அதிர்ந்தது மக்கள் பாதுகாப்புத் தேடி அவலமாக ஓடித்திரிந்ததை அவதானிக்க முடிந்தது புதுக்குடியிருப்புப் பிரதேச வான்பரப்பினுள் காலை 8.35 மணிக்கும் பின்னர் 9.15 மணிக்கும் தொடர்ந்து 9.30 மணிக்கும் இரவு 8.30 மணிக்கும் பிரவேசித்த சிறிலங்கா வான்படையின் மிக் 27 ரக யுத்த விமானங்கள் மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதி மீது தாக்குதலை மேற்கொண்டன.

இரவு 8.30 மணிக்கு புதுக்குடியிருப்புப் பிரதேச வான்பரப்பினுள் நுழைந்த சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான இரண்டு மிக் 27 யுத்த விமானங்கள் 15 இற்கு அதிகமான வெளிச்சக் குண்டுகளை வீசித் தாக்குதலை மேற்கொண்டன. கேப்பாப்பிலவுப் பக்கமாக குண்டுகள் வீசப்பட்டன.

http://sankathi.org/news/index.php?option=...95&Itemid=1

யுத்த நிறுத்தத்தை அமுலில் வைத்துக்கொண்டு மக்களின் மேல் குண்டுகளைப்போட உலகம் அனுமதி கொடுத்துள்ளது... கண்டிப்புகள் இல்லாத உலக செல்லப்பிள்ளை இலங்கை இனவெறியரசு.....

எத்தனை நாளைக்கு?

உலக தமிழ் பிரச்சார அமைப்புக்கள் ஏன் உடனுக்குடன் ஆதாரங்களுடன் வெளியுலகுற்கு கொண்டு வரக்கூடாது?........

முல்லைத்தீவில் நேற்றிரவு `பரா' வெளிச்சத்தில் கிபிர் விமானங்கள் கடும் தாக்குதல்

- குடாநாட்டில் கடும் ஷெல் வீச்சு

முல்லைத்தீவில் நேற்று திங்கட்கிழமை இரவு விமானப் படை விமானங்கள் , `பரா' வெளிச்சம் பாய்ச்சி குண்டு வீச்சை நடத்திய அதேநேரம் யாழ்.குடாநாட்டடில் படைமுகாம்களிலிருந்து கடும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு 8 மணியிலிருந்தே முல்லைத்தீவிலும் குடாநாட்டிலும் இந்தத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியிலேயே நேற்றிரவு 8 மணியளவில் வந்த இரு குண்டு வீச்சு விமானங்கள், திடீரென `பரா' வெளிச்சத்தை பாய்ச்சி அடுத்தடுத்து குண்டுகளை வீசியுள்ளன.

இரு விமானங்கள் ஆறிற்கும் மேற்பட்ட குண்டுகளை வீசி இத்தாக்குதலை நடத்தியுள்ளன. இதன் போது, எவப்பட்ட `பரா' வெளிச்சம் கிளிநொச்சி வரை தெரிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவில் விமானத்தாக்குதல் நடைபெற்ற அதேநேரம் யாழ்.குடாநாட்டில் வடமராட்சிகிழக்கு மற்றும் முகமாலைப் பகுதிகளை நோக்கி கடும் ஷெல் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

இரவு 8 மணிமுதல் 9 மணி வரை இந்தச் ஷெல் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதேநேரம் முல்லைத்தீவு வேணாவில் பகுதியில் நேற்றுக்காலை விமானத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தினக்குரல்

கிளிநொச்சிப் பகுதியில் பரா வெளிச்சக் குண்டுகளை வீசி வான் தாக்குதல்.

சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான மிக் - 27 ரக வானூர்திகள் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8.20 முதல் 8.35 மணிவரை கிளிநொச்சி பிரதேசத்தில் வான்குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

மிக் - 27 ரக வானூர்தி ஒன்று 15-க்கும் அதிகமான பரா வெளிச்சக் குண்டுகளை வீசி வெளிச்சத்தினை பரப்ப, மற்றொரு மிக் - 27 ரக வானூர்தி குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

para1cn8.jpg

பரா வெளிச்சங்கள்

para2ax6.jpg

பரா வெளிச்சங்கள்

-Puthinam-

Edited by யாழ்வினோ

புலிகளின் வற்றாப்பளை பயுற்சி முகாமை தாங்கள் தாக்கி அழித்துவிட்டதாக அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.