Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத் தீர்வு பற்றிய நம்பிக்கையில் தெற்கு!

Featured Replies

இராணுவத் தீர்வு பற்றிய நம்பிக்கையில் தெற்கு!

`

"எது நடக்க வேண்டுமோ, அது நன்றாகவே நடக்கின்றது!'

பகவத்கீதை சாராம்சத்தின் ஒரு வாசகம் இது.

இலங்கை அரசை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் தலைமையை பொறுத்தவரை காரியங்கள் இப்படித்தான் நடக்கின்றன. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் படைப்பலத்தின் அடிப்படையில் தமிழரின் தலைவிதியைத் தீர்மானிக்க மஹிந்தரின் அரசு எண்ணுகின்றது. இராணுவப் பலத்தை வைத்துக் கொண்டு பௌத்த, சிங்கள மேலாண்மையை உறுதிப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, நிலைநிறுத்த கங்கணம் கட்டிச் செயற்படுகின்றது அரசு. அந்தத் திசையில் தான் விடயங்கள் நன்றாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.

தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு சமாதான வழியில் அமைதி முறையில் நியாயமான தீர்வு ஒன்றை கொழும்பு அரசு முன்வைக்கப் போவதில்லை என்பது இன்று வெட்ட வெளிச்சமாகியிருக்கின்றது. அரசு தான் மாத்திரமல்லாமல், அத்தகைய இராணுவத் தீர்வை நோக்கிய திசையில் தென்னிலங்கை மக்களின் மனப்பாங்கையும் திசைதிருப்புவதில் வெற்றி கண்டிருக்கிறது. தென்னிலங்கையில் அறிவுசார் வட்டாரங்கள் நடத்திய ஆய்வுகளும், புள்ளி விவரத் திரட்டுகளும் இதனை ஊர்ஜிதம் செய்திருக்கின்றன. புலிகளை போரியல் ரீதியில் அடக்கி, இராணுவத் தீர்வு ஒன்றைக் காணலாம் என்ற நம்பிக்கை தென்னிலங்கை மக்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வருகின்றது. இராணுவத் தீர்வுக்கான ஆதரவும், அதன் மீதான நம்பிக்கையும் தென்னிலங்கைச் சிங்கள மக்கள் மத்தியில் சுமார் அறுபது வீதம் வரை வளர்ந்திருக்கின்றது. புலிகளுக்கு எதிராக இராணுவ ரீதியில் வெற்றிகொள்ளும் வலிமையும் தகைமையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உண்டு என்ற நம்பிக்கை சிங்கள மக்களில் அரைவாசிப் பேருக்கு இப்போது ஏற்பட்டிருக்கின்றது. புலிகளை இராணுவ ரீதியில் அரசு வெற்றி கொள்ளும் என்ற நம்பிக்கை தென்னிலங்கைச் சிங்கள மக்கள் மத்தியில் வேகமாக வளர்ந்துவரும் அதேசமயம், அமைதி வழித் தீர்வுக்கான அவர்களின் ஆதரவும் வீழ்ச்சிகண்டு வருகின்றது.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் இவ்வாண்டு முற்பகுதியில் நடத்திய புள்ளி விவர ஆய்வுகளில் இந்தப் பெறுபேறுகள் கிடைத்திருக்கின்றன. ஆக, தென்னிலங்கையில் எத்தகைய மனப்பாங்கும் போக்கும் வளர வேண்டும் என மஹிந்தரின் அரசு எதிர்பார்த்ததோ விரும்பியதோ அது நன்றாகவே நடக்கின்றது என்பதை இந்தப் புள்ளி விவர ஆய்வுகள் நமக்குப் புலப்படுத்துகின்றன. இலங்கையின் அரசியல் வரலாற்றில் தேசிய இனப்பிரச்சினையை ஒட்டிய சர்ச்சையில் 2001 டிசெம்பர் முக்கியமான காலகட்டம். அந்தவேளை யில்தான் வடக்கிலும் கிழக்கிலும் அமைந்த தமிழர் தேசமும், தென்னிலங்கையின் சிங்களத் தேசமும் ஒன்றிணைந்து, தேசிய இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வுகாண்பதற்கான தமது விருப்பத்தை வாக்குகள் மூலம் ஒரே குரலில் வெளிப்படுத்தி நின்றன.

மக்களின் அந்த ஆணையை ஏற்று அமைதி வழித் தீர்விற்கு சம்மதித்த அப்போதைய ரணிலின் அரசு, மெல்ல, மெல்ல அந்த வாய்ப்பை உதாசீனம் செய்து, சர்வதேச ஆதரவுடன் கூடிய வலைப் பின்னலுடன் இராணுவ நெருக்குவாரத் தந்திரோபாயத்தைக் கட்டவிழ்த்தது. அதனோடு தென்னிலங்கை அரசியல் சித்து விளையாட்டும் சேர அமைதி முயற்சிகள் முற்றாக ஸ்தம்பித்துத் தடைப்பட்டன. அத்தோடு சமாதான முயற்சிகளுக்கு மட்டுமல்லாமல், அமைதி வழித் தீர்வை நோக்கிய மக்களின் நம்பிக்கைக்கும் சாவுமணி அடிக்கும் கைங்கரியங்கள் நடந்தேறின.

அமைதி வழித் தீர்வுக்கான முயற்சிகளில் ஈடுபட்ட ரணிலின் அரசு, அரைகுறை ஆட்சியில் கலைக்கப்பட, 2004 முற்பகுதியில் மீண்டும் தேர்தலை சந்தித்தது இலங்கைத்தீவு. அத்தேர்தலில் தமிழர் தேசத்துக்கும், சிங்களத் தேசத்துக்கும் இடை யிலான பரஸ்பர புரிந்துணர்வு தகர்ந்து, இரண்டும் மீண்டும் ஒரு புள்ளியில் சங்கமிக்க முடியாத இரு வெவ்வேறு முனைகளை நோக்கி நகரும் மனக் கருத்து அம்பலமாகியது. 2005 இறுதியில் நடந்த அதிபர் தேர்தல் இப் பிளவு மேலும் கூர்மைப்படுத்தப்பட்டு, முனைப்புற்று நின்றதைப் பகிரங்கப்படுத்தியது. தமிழர் தேசம் அத்தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க, தென்னிலங்கைச் சிங்கள தேசமோ பௌத்த சிங்களப் பேரினவாத மேலாண்மையைப் பிரதிபலிக்கும் மஹிந்த ராஜபக்ஷவைத் தெரிவு செய்ததன் மூலம் தனது உளக்கருத்தை வெளிப்படுத்தியது. அந்த அரசியல் கருத்து நிலைப்பாடு மேலும் தீவிரம் பெற்று, சிங்களத் தேசியவாதத்தின் அதிகாரத் திமிராக உருமாறி வருவதை இப்போதைய புள்ளிவிவரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

பலாத்காரப் பிரயோகத்திலும், இராணுவ வழித் தீர்விலும் விடாப்பிடியாகச் சன்னதம் கொண்டு நிற்கும் தென்னிலங்கையின் கருத்துநிலையில், எவ்வளவு காலம் கழிந்தாலும் மனமாற்றம் நிகழப் போவதில்லை, தமிழருக்கு நீதி கிடைக்கப் போவதில்லை, அமைதி வழித் தீர்வு சாத்தியமாகப் போவதில்லை என்பவைஇப்போது துலாம்பரமாகி வருகின்றன. இந்த யதார்த்தங்களை உள்வாங்கி, அவற்றின் அடிப்படையில் தீர்மானங்களை வகுத்து, தந்திரோபாயமாகச் செயற்பட வேண்டிய வேளை தமிழர் தேசத்துக்கு வந்துவிட்டது. அதையே தென்னிலங்கையின் கருத்து நிலைப்பாடு பற்றிய இந்தப் புள்ளி விவரங்கள் இப்போது நமக்குக் காட்டி நிற்கின்றன.

உதயன் ஆசிரியர் தலையங்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.