Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா காவல்துறையினரின் தாக்குதலில் யாழ். ஊடகவியலாளர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா காவல்துறையினரின் தாக்குதலில் யாழ். ஊடகவியலாளர் காயம்

 

Kugaraj-assault-300x200.jpgயாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொக்குவில் பகுதியில் நேற்றுப் பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொக்குவில் பகுதியில் நேற்று வீடு ஒன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழுவினர், அங்கிருந்த பொருட்களையும், வீட்டின் யன்னல்கள், கதவுகளையும் அடித்து உடைத்து விட்டு, வாகனங்கள் மீது பெற்றோல் குண்டுகளை வீசினர்.

இதனால் ஒரு வான் மற்றும் இரண்டு உந்துருளிகள் தீக்கிரையாகின.

இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற நடராஜா குகராஜ் என்ற ஊடகவியலாளர் மீது கோப்பாய் காவல் நிலைய அதிகாரி தாக்குதல் நடத்தினார்.

இதில் காயமடைந்த இரத்தம் வழிந்த நிலையில் அவர் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

Kugaraj-assault.jpghttp://www.puthinappalakai.net/2019/02/20/news/36493

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

February 20, 2019

Kugaraj-Media1.jpg?zoom=3&resize=335%2C2

ஊடகவியலாளர் நடராஜா குகராஜா (குகன்) மீதான காவல்துறையினரின் தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கும் அதேவேளை, இது தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு நீதி வழங்கும் படி பொறுப்பிலிருக்கும் அனைத்து தரப்பினரையும் சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது
தமிழ் தொலைக்காட்சி சேவையான ‘டான் டிவி’ நிறுவனத்தின் செய்தியாளர் திருநெல்வேலியைச் சேர்ந்த நடராஜா குகராஜா காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 19 ம் திகதி2.30 மணியளவில் கொக்குவில் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை செய்திக்காக படமெடுத்துக் கொண்டிருக்கையில், பொறுப்பிலிருந்த கோப்பாய் காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரி படமெடுக்க வேண்டாம் என்று அச்சுறுத்தி, தம்மீது தாக்குதல் நடத்தியதாக குகராஜா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் தமது பணியை சுதந்திரமாக மேற்கொள்ளவதற்கும் பேச்சு மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கும் இத்தகைய சம்பவங்கள் பெரும் தடையாகும். வடக்கிலும் தெற்கிலும் வன்முறைக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கு நியாயம் கிடைக்காதிருக்கும் ஒரு சூழலில், இதுபோன்ற அச்சுறுத்தல்களை ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை சம்பவங்களாகவே சுதந்திர ஊடக இயக்கம் நோக்குவதால் அதனை கண்டிக்கிறது.

எனவே, இந்த சம்பவத்தை உடனடியாக விசாரணை செய்து, தாக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நியாயத்தைப் பெற்றுத்தருவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொள்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

http://globaltamilnews.net/2019/113838/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.