Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''17ஆவது ஆண்டில் புதிய பாய்ச்சலுக்காக காத்திருக்கும் சாள்ஸ் அன்ரனி படையணி''

Featured Replies

''17ஆவது ஆண்டில் புதிய பாய்ச்சலுக்காக காத்திருக்கும் சாள்ஸ் அன்ரனி படையணி''

- தெ.றஞ்சித்குமார்-

விடுதலைப் போராட்டம் இன்று விடுதலைப்புலிகளின் படையணிகளோடும், புதிய படைணிகளின் அறிமுகங்களோடும் எதிரிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறது.

விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரை ஆரம்பகால கட்டங்களில் இலக்குகள் மீது தாக்குதல்கள் நடாத்துவதற்கு ஈருருளிகளைக்கூட விடுதலைப்புலிகள் பயன்படுத்தியுள்ளனர். போராட்ட வளர்ச்சிக்கால கட்டங்களில் சிறிய குழுக்களாக பெரும் இராணுவ பலங்களின் நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் முகம் கொடுத்தார்கள். அதன் ஒரு தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் கெரில்லா ரீதியான நடவடிக்கையை மேற் கொண்டு, அடுத்த கட்டமாக இராணுவ முகாங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.

இதில் விடுதலைப் புலிகள் மேலும் பல சாதனைகளைப்படைக்க, பெரும் இராணுவ பலத்தைக் கொண்ட படையினருக்கு எதிராக போராட பலபடையணிகளின் உருவாக்கம் அவசியமாக இருந்தது.

இதன் ஒரு கட்டமாகத்தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் முதலாவது மரபு வழிப்படையணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தோற்றம் பெற்றது. இதன் தோற்றம் விடுதலைப்புலிகளின் பலத்திற்கு மேலும் வலுச் சேர்த்தது.

1991 ஆம் ஆண்டு ஏப்பிரல் 10 ஆம் நாள் யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்த சகல மாவட்டங்களிலும் இருந்து 1500 போராளிகளுடன் கேணல் பால்ராஜ் அவர்களின் வழிநடத்துதலுடன் இப்படையணி உதயமானது.

லெப். சாள்ஸ் அன்ரனி விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால நடவடிக்கைகளில் எல்லாம் முன்னணியில் திகழ்ந்தவர். வீரம், துணிவு, உறுதி இவற்றுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர். மாணவப் பருவத்திலேயே தமிழரை அழிக்கும் சிங்கள படைகளுக்கு எதிராக பலநடவடிக்கைகளில் ஈடுபட்டு பின் விடுதலைப் போராட்டத்தின் இலச்சியத்தோடு ஒன்றித்தார்.

விடுதலைப் போராட்டத்தில் ஆயுத பலம், ஆட்பலம் குறைந்திருந்த காலகட்டத்தில் தான் இவரின் வீரச்சாவு நிகழ்ந்தது. தன் மீது இராணுவம் தாக்குதல் மேற்கொண்டு தான் காயமுற்ற நிலையில் தனது உற்றதோழர்களிடம் தன்னை சுட்டுவிட்டு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு போகும் படி உத்தரவிட்டு விடுதலைக்காக தன் உயிரை நீத்தார்.

இவ்வாறான உறுதிமிக்க ஒரு போராளியின் நாமம் கொண்டு உருவான சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி வவுனியாவில் இருந்து வன்னி நோக்கி வன்னி விக்கிரம – 2 என்ற பெயருடன் தமிழர் நிலத்தை விழுங்கும் முனைப்புடன் 05.05.1991 அன்று படைநடவடிக்கையை ஆரம்பித்த போது அந்த இராணுவ நடவடிக்கைக்கு எதிராக முகம் கொடுத்து இரணுவத்திற்கு பெரும் இழப்புக்களை சாள்ஸ் அன்ரனிப்படையணி ஏற்படுத்தியது. இப்படையணிக்கு இதுவே முதல்களமாகவும் அமைந்தது.

பயிற்சி தந்திரம், துணிவு, வெற்றி என்ற தாரக மந்திரத்தோடு சிங்களப் படைகளுக்கு பெரும் சிம்ம சொப்பனமாக இப்படையணி விளங்கி வருகின்றது. சாள்ஸ்அன்ரனி படையணி என்றால் எதிரி கதிகலங்கும் அளவிற்கு அவர்களின் தாக்குதற் திறம் உச்சம் கண்டு நிற்கின்றது.

இவ்வாறாக வன்னி விக்கிரம தொடக்கம் விடுதலைப் புலிகளின் முதற் பெயர் சூட்டப்பட்டு நடாத்திய ஆகாயக்கடல் வெளிச்சமர் மற்றும் மின்னல், ஓயாதலைகள்கள், தீச்சுவாலை என பல களமுனைளிலும் தமிழீழத்தின் அனைத்துப்பாகங்களிலும் இப்படையணி தனது சாதனையை நிலைநாட்டிக் கொண்டுள்ளது.

லெப். கஜன் முதல் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களை இம்மண்ணிற்கு ஈந்து இப்படையணியானது புதிய உத்வேகத்தோடு விடுதலைப் ;போராட்டத்திற்கு பெரும் வெற்றிகளைக் குவிக்க புதிய ஆண்டில் தமது அடுத்த பாய்ச்சலுக்காக சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி காத்து நிற்கின்றது.

மூலம் - ஈழமுரசு

http://www.tamils.info/

எம்தேசிய படையணிகளின் மனபலத்துக்கு முன்னால் எதிரியின் நவீன ஆயுதங்கள்தூசுக்கு சமம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.