Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் நிறுத்தம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு - தேவை ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்தம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு - தேவை ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவிப்பு

[19 - April - 2007]

-கே.பி.மோகன்-

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பாக முடிவொன்றுக்கு வர சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தகவல் நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த பாதுகாப்பு செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் கூறியதாவது;

சர்வகட்சி மாநாட்டில் இந்த விடயம் தொடர்பாக ஆழமாக ஆராயப்பட்டுள்ளது. ஆனாலும், இன்னும் இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை.

அநேகமாக சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது என்றே என்னால் கூற முடியும். அரசாங்கம் சார்பில் பேசவுள்ள அமைச்சராக இருக்கும் நான் இதனை உறுதிப் படுத்தி தெரிவிக்கின்றேன்.

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக தற்போது பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

பலர் பலவிதமான நிலைப்பாட்டில் உள்ளனர்.

அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது. அது வாக்கெடுப்பொன்றுக்கு செல்லும் தீர்மானமாகவே இருக்கும்.

சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டிய அவசியம் உள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை தொடர்பாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

அது தவறான தகவல் எனவும் அவ்வாறான முடிவொன்றுக்கு அரசாங்கம் வரவில்லையெனவும் அப்போது மறுக்கப்பட்டதே. ஆனால், நீங்கள் இப்போது மாற்றுக் கருத்தை முன்வைத்து முன்னர் ஜனாதிபதி தெரிவித்த கருத்தை உறுதிபடுத்துகின்றீர்களே என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போர் நிறுத்தம் என்பது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதில் அரசாங்கத்திற்கு தொடர்புகளும் இருக்கவில்லை. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தொடர்புடைய புலிகள் பல ஆயிரம் தடவைகள் ஒப்பந்தத்தை மீறி அது செயலற்றதென வெளியுலகத்திற்கு காட்டியுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டு அரசாங்கம் மற்றும் அரச படைகள் மீது பழி சுமத்தி வருகின்றனர்.

அதேவேளை, கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து புலிகள் சர்வதேச ரீதியில் எமது அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு ஒரு சில வெளிநாட்டவர்களும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர்.

இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை முறியடிக்க அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எதிர்கால பாதுகாப்பு குறித்து அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. அதனால், எமது இறைமையை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் முடிவுகளை எடுக்க அரசாங்கத்திற்கு பூரண அதிகாரம் உள்ளது என்றும் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்.

தினக்குரல்

தம்மீதான அழுத்தங்களின் சுமைகளைக்குறைப்பதற்கு யுத்தநிறுத்தத்தின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தி ஒத்துழைப்பாளர்களைத் தமது வழிக்குக் கொண்டவருவதற்கு முயல்கின்றார்கள். யத்தநிறத்த ஒப்பந்தத்தால் தங்களுக்கேற்பட்டிருக்கும் நன்மைகளைப் புறந்தள்ளுவதன் மூலம் எதையம் இவர்கள் சாதிக்கப்போவதில்லை. மாறாக இந்த ஏமாற்று வேலைகளுக்கும் சர்வதேசம் இடங்கொடுக்கப்போவதுமில்லை. ஒன்று மட்டும் உறுதி யுத்த நிறுத்த ஒப்பந்தம் விலக்கிக் கொள்ளப்பட்டால் அதை தமிழர் தரப்பு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு செயற்படத் தொடங்கலாம். என்பதைச் சர்வதேசம் உணரும். அதற்கேற்றாற் போல் சர்வதேசமும் தமது நடவடிக்கையி சில மாற்றங்களை ஏற்படுத்தத் தயங்காது. ஆனாலும் ஒப்பந்தத்தினை விலக்கிக் கொள்ளும் முடிவு இலங்கை அரசிற்குப் பாதகமாகவே முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.