Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மிஷன் சக்தி" சோதனையால் விண்வெளியில் கழிவுகள் - அமெரிக்கா எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
Mission Shaktiபடத்தின் காப்புரிமை AFP / getty

செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகனையை இந்தியா சோதனை செய்திருப்பதையடுத்து, விண்வெளியில் அதன் கழிவுப்பொருட்களால் பாதிப்பை உண்டாக்கலாம் என அமெரிக்க பாதுகாப்பு துறையின் செயலாளர் பேட்ரிக் ஷனாஹன் எச்சரித்துள்ளார்.

செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி மார்ச் 27ம் தேதி புதன்கிழமை அறிவித்தார்.

விண்வெளியில் கழிவுப் பொருட்களை விட்டுவிடக் கூடாது என்பதற்காக தாழ்வான உயரத்தில் இருக்கும் சுற்றுப்பாதையில் இந்த சோதனையை இந்தியா மேற்கொண்டதாகவும், இந்தியாவின் இச்சோதனையை அமெரிக்கா ஆராய்ந்து வருவதாகவும் பேட்ரிக் ஷனாஹன் தெரிவித்தார்.

இந்தியா செயற்கைக்கோளைத் தடுத்து அழிக்கும் ஏவுகணை தொழில்நுட்பத்தை பெற்றுள்ள நான்காவது நாடாகியுள்ளது.

இதே போன்ற சோதனையை கடந்த 2007ஆம் ஆண்டு சீனா மேற்கொண்டது, சர்வதேச அளவில் எச்சரிக்கையாக அமைந்தது.

"என் செய்தி என்னவென்றால் நாம் அனைவரும் விண்வெளியில் வாழ்கிறோம். அதனை அசுத்தமாக்க வேண்டாம். விண்வெளி என்பது நாம் வணிகம் நடத்தும் இடமாக இருக்க வேண்டும். நாம் சுதந்திரமாக அங்கு செயல்பட வேண்டும்" என்று இந்தியாவின் சோதனையை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஷனாஹன் தெரிவித்தார்.

இது போன்ற சோதனைகளால் உருவாகும் கழிவுப்பொருட்கள், பொதுமக்கள் அல்லது ராணுவ செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை பாதிக்கலாம். மேலும், விண்வெளியில் உள்ள மற்ற பொருட்களுடன் மோதலாம்.

ஆனால், இந்த சோதனையால் ஏற்படும் கழிவுப்பொருட்கள் "சிதைந்து, ஒரு சில வாரங்களுக்குள் பூமியில் விழுவதை" உறுதி செய்ய, மிஷன் சக்தி சோதனையை வேண்டுமென்றே தாழ்வான வளிமண்டலத்தில் மேற்கொண்டதாக இந்தியா கூறியுள்ளது.

மிஷன் சக்திபடத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், கழிவுப்பொருட்கள் எவ்வாறு பயணிக்கும் என்ற பாதையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் சோதனையில் இருந்து உருவான, 250க்கும் மேற்பட்ட கழிவுப்பொருட்களின் பாகங்களை அமெரிக்க ராணுவம் ஆராய்ந்து வருவதாக, பென்டகனின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை அமெரிக்கா 1959-ம் ஆண்டு மேற்கொண்டது.

சீனா 2007-ம் ஆண்டு இதனை மேற்கொண்டபோது, 865 கிலோ மீட்டர் உயரத்தில் செயலிழந்த வானிலை செயற்கைக்கோள் ஒன்றை அழித்தது. இது, சுற்றுப்பாதையில் பெரும் கழிவுப்பொருள் ஒன்றை விட்டுச் சென்றது.

சோதனைக்கு பிறகு, உருவாகும் கழிவுப்பொருட்கள் குறித்து நாசாவும் எச்சரித்துள்ளது.

"செயற்கைக்கோள் எதிர்ப்பு திறன்களை வேண்டுமென்றே சிலர் சோதனை செய்வதாகவும், இதனால் சுற்றுப்பாதையில் விடப்படும் கழிவுகளால் ஏற்படும் பிரச்சனையாக இன்றும் கையாண்டு வருவதாக" அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஜிம் ப்ரைடன்ஸ்டீன் அமெரிக்க காங்கிரஸிடம் தெரிவித்தார்

https://www.bbc.com/tamil/global-47731994

  • கருத்துக்கள உறவுகள்

மிஷன் சக்தி: அமெரிக்காவுக்கு எதிர்ப்பு; விண்வெளியில் கை கோர்க்க இந்தியாவுக்கு ரஷ்யா அழைப்பு

India missileபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption2018இல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்திருந்தபோது பிரதமர் மோதியுடன் எடுக்கப்பட்ட படம்.

விண்வெளியில் பல நாடுகளின் சட்டபூர்வமான, ஒருங்கிணைந்த, கட்டுப்பாட்டு கருவிகளை நிறுவும் முயற்சிக்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது ரஷ்யா.

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி மார்ச் 27ம் தேதி புதன்கிழமை அறிவித்தார்.

விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என அந்த அறிவிப்பில் அவர் கூறினார்.

இந்த தொழில் நுட்பத்தை கொண்டுள்ள உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

'மிஷன் சக்தி' என்று பெயரிடப்பட்ட இந்த விண்வெளித் திட்டம் முழுவதும் இந்தியத் தொழில்நுட்பங்களைக் கொண்டே செயல்படுத்தப்பட்டது என்றார் மோதி.

மிஷன் சக்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES / AFP Image captionகோப்புப்படம்

இதற்கிடையில் செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகனையை இந்தியா சோதனை செய்திருப்பதையடுத்து, விண்வெளியில் அதன் கழிவுப்பொருட்கள் பாதிப்பை உண்டாக்கலாம் என அமெரிக்க பாதுகாப்பு துறையின் செயலாளர் பேட்ரிக் ஷனாஹன் எச்சரித்துள்ளார்.

"விண்வெளியை அசுத்தமாக்க வேண்டாம். விண்வெளி என்பது நாம் வணிகம் நடத்தும் இடமாக இருக்க வேண்டும். நாம் சுதந்திரமாக அங்கு செயல்பட வேண்டும்" என்று இந்தியாவின் சோதனையை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஷனாஹன் தெரிவித்தார்.

இந்நிலையில் ரஷ்யா இந்த விவகாரம் குறித்து முதல்முறையாக எதிர்வினையாற்றியள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் என்ன சொல்கிறது?

''கடந்த மார்ச் 27-ம் தேதி இந்தியா செயற்கைகோள் எதிர்ப்பு ஆயுத பரிசோதனை செய்துள்ளதை தாழ்வான உயரத்தில் பறக்கும் ஒரு செயற்கைக்கோளை இடைமறித்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை தாக்கியுள்ளதன் வாயிலாக அறிகிறோம்.

இந்த சோதனை குறிப்பாக எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதல்ல என இந்தியத் தலைமை அறிவித்திருக்கிறது. மேலும் விண்வெளியில் ஆயுதப் போட்டியில் நுழையும் நோக்கம் இல்லை என்றும் விண்வெளியில் ஆயுதங்களை செலுத்துவதை தடுப்பது குறித்தும் இந்திய வெளியுறவு கொள்கை மீண்டும் உறுதியாக கூறியிருக்கிறது என்பதை இங்கே முன்னிலைப்படுத்துகிறோம்.

''ஆனால் அதே சமயம் ஆயுத கட்டுப்பாட்டு களத்தில் கணிசமான அளவு சூழ்நிலை சீரழிந்திருப்பதன் விளைவுதான் இந்தியாவின் இந்த நடவடிக்கை என்பதை நாம் கூற வேண்டும்'' என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நரேந்திர மோதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப் படம்

'ரஷ்யா திரும்பத் திரும்ப அமெரிக்காவின் அழிவு நடவடிக்கைகள் குறித்து எச்சரித்து வந்துள்ளது. அமெரிக்காவின் ஏவுகணை அழிப்பு அமைப்பு ஒருதலைப்பட்சமாக வரம்பற்ற வளர்ச்சி அடைந்திருக்கிறது. மேலும் விண்வெளியை ஆயுதக் களமாக மாற்ற முனையும் திட்டங்களை கைவிட அமெரிக்கா தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. மற்ற நாடுகள் தங்களது தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்த, விண்வெளியில் தங்களது ஆயுத வலிமையை மேம்படுத்த திட்டமிட அமெரிக்காவின் நடவடிக்கைகளே காரணம்,'' என்கிறது ரஷ்யா.

''முழுக்க முழுக்க எட்டவே முடியாத ஒரு விஷயமான உலகளாவிய ராணுவ ஆதிக்க திட்டத்தை பித்துப்பிடித்தது போல செயல்படுத்தத் துடிக்கும் அமெரிக்கா, நிலைமையை உணர்ந்து தனது திட்டத்தை கைவிட்டு பொறுப்பான நிலைப்பாடை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

''உலகின் பல்வேறு பிராந்தியங்களில் ஆயுதப் போட்டி விரிவதை தடுக்க இன்னமும் சாத்தியமான வழிகள் உள்ளன. சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் பொறுப்புள்ள நாடுகளுக்கு உதவுவது முக்கியமானது ''

''ரஷ்யா தனது பங்கிற்கு விண்வெளியில் ஆயுதப் போட்டியை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தொடர்ந்து முக்கியத்துவமளிக்கும்.

ரஷ்ய - சீன வரைவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விண்வெளியில் ஆயுத போட்டியை தடுக்க ஒருமித்த சிந்தனையுள்ள நாடுகளுடன் இணைந்து விண்வெளியில் பலதரப்பு நாடுகளின் சட்டபூர்வமான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு கருவிகளை நிறுவ திட்டம் இருக்கிறது. விண்வெளியில் உண்டாகும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பல நாடுகளின் கூட்டு முயற்சியாக இது இருக்க வேண்டும். விண்வெளியில் ஆயுதம் வைத்திருப்பது முதன்மையான அரசியல் கடமையாக இருக்கக்கூடாது என்பது குறிப்பாக இதில் முக்கியமானது.

சர்வதேச குழுவின் இந்த கூட்டு முயற்சியில் தீவிரமாக இணைய இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கிறோம்'' என ரஷ்யா கூறியிருக்கிறது.

https://www.bbc.com/tamil/global-47745401

  • கருத்துக்கள உறவுகள்

SatelliteDensity.jpg

? ? 🤔

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.