Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவறுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் இல்லாது இலங்கையில் அமைதி ஏற்படாது – பிரித்தானியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

U.K.-Foreign-Secretary-Jeremy-Hunt-720x450.jpg

தவறுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் இல்லாது இலங்கையில் அமைதி ஏற்படாது – பிரித்தானியா

இலங்கையில் இடம்பெற்ற  தவறுகள் தொடர்பான நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் இலங்கையில் நிலையான அமைதி ஏற்படாது என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, கரேத் தோமஸ் என்ற உறுப்பினர் பாரிய மனித உரிமை மீறல் குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த தவறும் இலங்கை மீது எடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்தபோதே பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஜெர்மி ஹன்ட் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான அமைச்சர், இலங்கை அரசாங்கத்துடன் தனது தொடர்புகளின் ஊடாக ஒரு மகத்தான வேலைகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை எழுப்புவது முற்றிலும் சரியாது எ்ன்றும் குறைந்தபட்சம் இதுகுறித்து இந்த நாட்டில் வாழும் இலங்கை சமூகத்தினர் பலர் அக்கறை கொண்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இலங்கையில் பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட தற்போது நல்ல நிலைமை காணப்படுவதாகவும் அவர் அங்கு எடுத்துரைத்தார்.

எவ்வாறாயினும், நடந்த தவறுகள் தொடர்பான நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் அங்கு நிலையான அமைதி சாத்தியப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/நீதியும்-பொறுப்புக்கூறல/

  • கருத்துக்கள உறவுகள்
 
April 3, 2019

Jeremy-Hunt.jpg?zoom=1.1024999499320984&

இலங்கையில் நீதி நிலைநாட்டப்பட்டு பொறுப்புக்கூறப்படாத பட்சத்தில் நிரந்தர சமாதானம் ஒருபோதும் நிலவாது என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் பொதுச்சபையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜெரெமி ஹன்ட் இதனை தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர் காணப்பட்டதை விட நல்லநிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர், எனினும் இடம்பெற்ற தவறுகளிற்காக நீதி வழங்கப்படாத பட்சத்தில் பொறுப்புக்கூறப்படாத பட்சத்தில் நிரந்தர சமாதானம் ஒருபோதும் நிலவாது என சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை பொதுச்சபையில் உரையாற்றியவேளை ஆசிய பசுவிக்கிற்கான பிரித்தானிய அமைச்சர் மார்க்பீல்ட் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானத்திற்கு இலங்கை இணை அணுசரனை வழங்கியதை பாராட்டியுள்ளார்.

சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கும் அதேவேளை மிகவும் வேகமான முன்னேற்றம் அவசியம் எனவும் மார்க்பீல்ட் தெரிவித்துள்ளார் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்கள் குறித்த தங்கள் கடப்பாடுகளை முழுமையாக நிறைவேற்றுமாறு இலங்கையை கேட்டுக்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார் இந்த நிலையில் இலங்கையில் உண்மையான முன்றேம் ஏற்படுவதை பார்ப்பதற்கு பிரித்தானியா ஆவலாக உள்ளது எனவும் மார்க்பீல்ட் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2019/117550/

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.