Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னவனே..

Featured Replies

madhurizx9.jpg

என்னவனே..

உன்னை நினைத்து நினைத்து

வாழ வேண்டும் உந்தன் மடியில்

உயிர் துறக்க வேண்டும் வருவாயா?

காலை மாலையாவதும்

மாலை காலையாவதும்

உந்தன் ஆசைக்குள் மறைய

வேண்டும் வருவாயா?

எந்தன் கோட்டையை விட்டு

நீ போனாலும் நீ போட்டு விட்டு

போன கோடுகள் ஆறவில்லை

அதற்காகவேனும் வருவாயா?

கோழி கூவினாலும்

கோயில் மணி அடித்தாலும்

கோலம் போட மறந்தாலும்

உந்தன் மடியில் மறக்க வேண்டும்

அதற்காகவேனும் வருவாயா?

கனவில் நான் குளித்து

நினைவில் காய்கிறேன்

என்னை உடுத்திக்கொள்ள

உண்ர்வோடு வருவாயா?

அங்கத்தில் இடம் பிடித்தாய்

ஆசையை தூண்டி விட்டாய்

அனுபவத்தை கொளுத்தி விட்டாய்

அணையாமல் எரிகிறேன்

அதற்காகவேனும் வருவாயா?

கோடை மழையாய்

நீ வந்தாலும் காதலா

அடை மழையாய் வரவேற்பேன்

அதற்காகவேனும் வருவாயா?

இரவைக் காட்டிக்கொடுக்கும்

நிலவைப் போல எந்தன்

வெக்கத்தைக் காட்டிக் கொடுக்க

இரவில் வருவாயா?

ஊமையான உலகத்தில்

உன்னோடு பாட வேண்டும்

துடிக்காத நரம்பெல்லாம்

இசைக்க வேண்டும் அதைக்

கேட்டு நீ ஆடிக் களைக்க வேண்டும்

அதற்காகவேனும் வருவாயா?

மறந்து விட்டாயா நம்

தனிமை பிரிந்து நான்கு

மாதமாச்சு எங்கே ஒரு

தடவை வந்து பிரிந்து விடு

நாளாக நாளாக நான் பழுக்கிறேன்

நீ சுட்ட பழம்தானேடாநான் பரிமார

வருவாயா?

இரவும் நானும் சேர்ந்தால் ஏக்கம்

நீயும் நானும் சேர்ந்தால் வெக்கம்

என் ஏக்கத்தை களைந்து விடு

என் வெக்கத்தை பார்க்க

வேண்டும் உன்னோடு நான்

அதற்காகவேனும் வருவாயா?

வருவாயா காதலா வருவாயா

உன் வரவுக்காய் நான் வழியாகிறேன்

என் வாசல் எங்கும் விழியோடு

காத்து கிடக்கிறேன் வருவாயா

காதலா வருவாயா?

-யாழ்_அகத்தியன்

Edited by yaal_ahaththiyan

கனவில் நான் குளித்து

நினைவில் காய்கிறேன்

என்னை உடுத்திக்கொள்ள

உணர்வோடு வருவாயா?

உங்களை விட்டு அவள் பிரிந்து போனதற்கான காரணம் மேற்கூறிய கேள்வியாகவே இருக்கலாம்! இந்தக் காலத்தில் காதலிகள் உடுத்திக் கொள்ள என்னென்லாமோ கேட்கின்றார்கள், ஆனால் நீங்கள் உடுத்திக்கொள்ள வெறும் நினைவை கொடுக்கின்றீர்கள்.. :rolleyes:

அங்கத்தில் இடம் பிடித்தாய்

ஆசையை தூண்டி விட்டாய்

அனுபவத்தை கொளுத்தி விட்டாய்

அணையாமல் எரிகிறேன்

அதற்காகவேனும் வருவாயா?

இரவைக் காட்டிக்கொடுக்கும்

நிலவைப் போல எந்தன்

வெக்கத்தைக் காட்டிக் கொடுக்க

இரவில் வருவாயா?

அழகிய கவிதை! :)

காதலில் பீ.எச்.டி செய்யுறீங்கள் போல இருக்கின்றது! வாழ்த்துக்கள்! கடைசியில் மேல்வீடு கழறாமல் இருந்தால் சரி! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞன் அண்ணா இது ஒரு காதலி காதலனுக்கு எழுதிய கவிதை அல்லவா

நீங்கள் சொன்ன மாதிரி இல்லையே

ஆனால் இந்தக் கவிதையை எழுதியவர் இந்தக் கவிஞர் தானே? இவரது காதலியோ அல்லது காதலனோ இல்லையே? :rolleyes::D:)

நீண்ட நாட்களின் பின்னர் ஓர் அழகான காதல் கவிதை யாழ்களத்தில் கண்டதையிட்டு ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது.

யாழ் அகத்தியனே இக்கவிதைக்கு "என்னவனே" என்ற தலைப்பை விட்டு "வருவாயா" என்ற தலைப்பை இட்டால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

காதலனின் வருகைகாக காத்திருக்கும் இக்கவி காதலியின் ஏக்கம் நிறைவேற விரும்புகிறேன். நன்றி அகத்தியன்

வருவாயோ என்ற ஏக்கம் மேலிடவைக்கும் கவிதை நன்றாக உள்ளது அகத்தியன்

என்னவனே..

உன்னை நினைத்து நினைத்து

வாழ வேண்டும் உந்தன் மடியில்

உயிர் துறக்க வேண்டும் வருவாயா?

எந்தன் கோட்டையை விட்டு

நீ போனாலும் நீ போட்டு விட்டு

போன கோடுகள் ஆறவில்லை

அதற்காகவேனும் வருவாயா?

கோடை மழையாய்

நீ வந்தாலும் காதலா

அடை மழையாய் வரவேற்பேன்

அதற்காகவேனும் வருவாயா?

இரவைக் காட்டிக்கொடுக்கும்

நிலவைப் போல எந்தன்

வெக்கத்தைக் காட்டிக் கொடுக்க

இரவில் வருவாயா?

ஊமையான உலகத்தில்

உன்னோடு பாட வேண்டும்

துடிக்காத நரம்பெல்லாம்

இசைக்க வேண்டும் அதைக்

கேட்டு நீ ஆடிக் களைக்க வேண்டும்

அதற்காகவேனும் வருவாயா?

மறந்து விட்டாயா நம்

தனிமை பிரிந்து நான்கு

மாதமாச்சு எங்கே ஒரு

தடவை வந்து பிரிந்து விடு

வருவாயா காதலா வருவாயா

உன் வரவுக்காய் நான் வழியாகிறேன்

என் வாசல் எங்கும் விழியோடு

காத்து கிடக்கிறேன் வருவாயா

காதலா வருவாயா?

கவி வரிகள் அனைத்தும் அழகு!!!!

ம்ம்... கவிதையில் எழுதினமாதிரி எல்லாமாக அவங்க வருவாங்க.... :o கவி நலலயிருக்கு அகத்தியன்...!

மறந்து விட்டாயா நம்

தனிமை பிரிந்து நான்கு

மாதமாச்சு எங்கே ஒரு

தடவை வந்து பிரிந்து விடு

:lol:

ஆம அகத்தியன் இனியவள் இருவரும் ஒருவரா..........?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.