Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா இன்னொரு தாக்குதலுக்கு திட்டமிடுகிறது.. பாக். குற்றச்சாட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பà¯à®°à¯ à®à®²à¯à®²à¯

இன்னும் 5 நாட்கள்தான்.. இந்தியா இன்னொரு தாக்குதலுக்கு திட்டமிடுகிறது.. பாக். பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்திய விமானப்படை பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி இருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் என்று பாலக்கோடு உட்பட நான்கு இடங்களில் தாக்குதல் நடத்தியது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் 3 அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்தது. அதன்பின் பாகிஸ்தான் விமானப்படை இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்க முயன்றது. இதனால் பெரிய அளவில் போர் பதற்றம் நிலவி வந்தது.

பாகிஸ்தானில் பிடிபட்ட இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தனின் விடுதலை தொடர்ந்து இந்த போர் பதற்றம் மொத்தமாக தணிந்தது.இந்த தாக்குதல்கள் குறித்தும் இப்போதும் நிறைய கேள்விகளும், மர்மங்களும் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேரடியாக புகார் அளித்து இருக்கிறார். இந்தியா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும். எங்கள் உளவுத்துறை தகவல்கள் அப்படித்தான் தெரிவிக்கிறது.

எப்போது தாக்குதல்:  பெரும்பாலும் ஏப்ரல் 16-20க்குள் இந்த தாக்குதல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. எங்களுக்கு இதுகுறித்து உறுதியான தகவல்கள் வந்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். 

இந்தியாவில் ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு தாக்குதல் நடக்குமா என்பது குறித்து பலரும் சந்தேகம் எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/india-is-preparing-for-another-attack-says-pakistan-346175.html

  • கருத்துக்கள உறவுகள்

'பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது'

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷிபடத்தின் காப்புரிமைGEORGES GOBET Image captionபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி

தங்கள் மீது இந்தியா இந்த மாதம் மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று உளவுத்துறையின் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளது பொறுப்பற்ற மற்றும் அபத்தமான கருத்துகள் என்று கூறியுள்ளது.

எல்லைதாண்டி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவங்ளால் பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே உண்டான பதற்றம் தணிந்து வருவதாகத் தோன்றி வரும் சூழலில், இன்று, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஷா மஹ்மூத் குரேஷி இதைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தாக்குதல் ஏப்ரல் 16 முதல் 20 வரையிலான காலகட்டத்தில் நடக்க வாய்ப்புண்டு என்றும் தங்கள் கவலைகளை ஐ.நா பாதுகாப்பு அவையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளிடம் பகிர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பாகிஸ்தானிடம் என்ன ஆதாரம் உள்ளது, எந்த நேரத்தில் இந்தியா தாக்குதல் நடத்தும் போன்ற தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.

இது குறித்த தகவல்களை பிரதமர் இம்ரான் கான் நாட்டு மக்களிடம் பகிர்ந்துகொள்வார் என்று குரேஷி தெரிவித்தார்.

'பொறுப்பற்ற மற்றும் அபத்தமான கருத்துகள்'

இந்தப் பிராந்தியத்தில் போர்ப் பதற்றத்தை உண்டாக்கும் நோக்கத்துடன் கூறப்பட்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் பொறுப்பற்ற மற்றும் அபத்தமான கருத்துகளை மறுப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத அமைப்புகளை இந்தியா மீது தாக்குதல் நடத்தத் தூண்டவே பொது வெளியில் பாகிஸ்தான் இவ்வாறு பேசுகிறது என்று இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள மறுப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா மீது நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களில் தமக்கு இருக்கும் பொறுப்பில் இருந்து பாகிஸ்தான் தம்மைத் தாமே விடுவித்துக்கொள்ள முடியாது. தமது சொந்த மண்ணில் நடக்கும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நம்பகத்தன்மை மிக்க மற்றும் மாற்ற முடியாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு எதிராக தீர்க்கமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

காஷ்மீர் பதற்றங்கள்

பிப்ரவரி 14 அன்று, இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்திய தாக்குதலில் இந்தியப் படையினர் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர்.

பின்னர் பிப்ரவரி 27 அன்று, பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம் என்று தாம் கூறும் ஓர் இலக்கின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறியது.

அடுத்த நாள் இந்திய விமானப்படை விமானத்தைச் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான், அதன் விமானியையும் சிறைபிடித்தது. பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறி இந்தியா போர்ப் பதற்றங்களை அதிகரிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியிருந்தார்.

சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் எஃப்-16 விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையின் பாகங்கள் என்று சில பாகங்களை இந்தியா காட்டியது.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு பாகிஸ்தான் வான் எல்லை மூடப்பட்டது.

செயற்கைக்கோள் புகைப்படங்களில் சேதம் அதிகம் தெரியாததால், பாலகோட்டில் இருந்த தீவிரவாத முகாம் மீது இந்தியா நடத்திய தாக்குதலின் வெற்றி குறித்து கேள்விகள் எழுந்தன.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

இந்தியக் கைதிகள் விடுதலை

தங்கள் நாட்டில் உள்ள இந்தியக் கைதிகள் 360 பேரை விடுவிக்கப் போவதாக பாகிஸ்தான் வெள்ளியன்று தெரிவித்தது. அவர்களில் 100 பேர் ஞாயிறன்று விடுதலை செய்யப்பட்டனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதான இந்திய மீனவர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனையால் பல மாதங்களை பாகிஸ்தான் சிறையில் கழித்தனர்.

லாகூர் அழைத்துச் செல்லப்படும் அவர்கள் வாகா - அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என ஈதி ஃபவுண்டேஷன் எனும் பாகிஸ்தான் தொண்டு அமைப்பைச் சேர்ந்த சாத் ஈதி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-47846273

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது'

சொல்லுறாங்களே தவிர தாக்கிறாங்களில்லையே!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

சொல்லுறாங்களே தவிர தாக்கிறாங்களில்லையே!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.