Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதவிக்காலம் தொடர்பில் உச்சநீதிமன்றம் போகும் மைத்திரி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதவிக்காலம் தொடர்பில் உச்சநீதிமன்றம் போகும் மைத்திரி.

தான் பதவிக்கு வந்த அரை ஆண்டின் பின்னர், ஜூன் மாதம் 21, 2015 தான் 19A அமுலுக்கு வந்து ஜனாதிபதி பதவிக்காலத்தினை 5 வருடத்துக்கு மட்டுப்படுத்தியது. 

ஆனால் தான் பதவிக்கு வந்தது ஜனவரி 2015, பழைய சட்டத்தின் படி தான் ஆறு வருடத்துக்கு தேர்வு செய்யப்பட்டதாக கருதுவதால், அது குறித்து தெளிவு படுத்துமாறு உச்சநீதிமன்றதினை அணுகுகிறார் மைத்திரி.

ஆயினும், கடந்த வருடம் ஜனவரி மாதமளவில் இது குறித்து நீதிமன்று சென்று, 5 வருடம் தான் பதவிக் காலம் என்று தெளிவாக சொல்லப் பட்டிருந்தது. 

மேலதிகமாக ஆறுமாதம்  நீடித்தால், 4 1/2 வருடமுடிவில், இந்த அரசாங்கத்தினை பதவி நீக்கி, புதிய தேர்தலை நடாத்த விரும்புவதாக தனது கட்சி முக்கியதர்களுக்கு சொல்லி உள்ளார்.

இவர் கடந்த அக்டோபர் மாதம் செய்த குளறுபடிகளுக்கு மக்கள், இவர் ஜனாதிபதி தேர்தலில் நின்றால், சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்ற, நிலையில், இந்த வகையில் முயன்று பார்க்கப் போகிறார்.

வேறுவகையில், இன்னும் 7 மாதம் தான் இவர் பதவிக்காலம். 

http://www.dailymirror.lk/top_story/Prez-to-seek-SC-ruling-on-date-his-tenure-ends/155-165246

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அடடா, இவர் தானே ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வேன் என்று உறுதியளித்தவர்?!

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி,பதவியில் நீடிக்க நீதிமன்றத்தை நாடி ஜனாதிபதி மீண்டும் அவமானப்படப் போகின்றார் 

sumenthiran.jpg

(ஆர்.யசி)
இந்த ஆண்டில்  ஜனாதிபதி தேர்தலை நடத்தியாகவேண்டும். இந்நிலையில் ஜனாதிபதியின் பதவிக்கால
எல்லை குறித்து நீதிமன்றத்தை நாடி  ஜனாதிபதி மீண்டும்  அவமானப்படப்போகின்றார்  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

 தமது பலவீனத்தை அறிந்து எப்படியேனும் அதிகாரத்தில் ஒட்டிகொண்டிருக்கவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் ஆட்சி எல்லைக்காலம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கேள்வி எழுப்பி வருகின்ற நிலையில், ஜனாதிபதி தேர்தல் தள்ளிப்போகும்  வாய்ப்புகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி தேர்தல் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இடம்பெற்று ஜனவரி 9 ஆம் திகதி ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றார். அன்றில் இருந்து ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருகின்றார். அவ்வாறு இருக்கையில் இப்போது அவரது கால எல்லை எப்போது நிறைவுக்கு வருகின்றது என்ற கேள்வியை அவரது அணியினர் மூலமாக அவர் கேட்கின்றார்.

 இந்த விடயத்தில் மிகத் தெளிவாக தெரியும் அவரது ஐந்து ஆண்டுகால பதவிக்காலம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி முடிவுக்கு வரவேண்டும். 19 ஆம் திருத்த சட்டத்தை நிறைவேற்றியது ஜூன் மாதமாக இருந்தாலும் ஜனவரி மாதம் தொடக்கம் அவர் பதவியில் இருந்து வருகின்றார். ஒருவேளை  19 ஆம் திருத்த சட்டம் இந்த மாதமே நிறைவேற்ற முடிந்திருந்தால் இன்றில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்

https://www.madawalaenews.com/2019/04/sum.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.