Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈஸ்டர் கொலைகள் - ஷோபாசக்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் கொலைகள்

இந்த தேவாலயத்தை நிர்மூலமாக்கினாலும், மூன்றே நாட்களில் கட்டியெழுப்புவேன்
-இயேசுக் கிறிஸ்து

நேற்று இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளால் நிகழ்ந்த புகை அடங்க முதலே, இஸ்லாமியர்கள் மீதான பழிப்பும், வன்மம் மிக்க நினைவுகூறல்களும் சமூக வலைத்தளங்களில் புகையத் தொடங்கிவிட்டன. இலங்கையில் அமைதியே இருக்கக்கூடாது, இரத்தமும் குண்டும் கொலையும் பழிவாங்கல்களும் தொடர்ந்துகொண்டேயிருக்க வேண்டும் என்ற இரத்த வேட்கை, புலம் பெயர்ந்த எளிய தமிழ்ப் பிள்ளைகளின் முகப்புத்தகங்களில் வழிந்துகொண்டேயிருக்கிறது.

இதுவரை கிடைத்த ஊடகச் செய்திகளின்படி, இந்தக் குண்டுவெடிப்புகளை சர்வதேச வலைப்பின்னலிலுள்ள இலங்கையர்களான இஸ்லாமிய அடிப்படைவாத, பயங்கரவாதிகளே செய்துள்ளதாகத் தெரிகிறது. இத்தகைய பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளிற்கு இஸ்லாமிய மக்கள் பொறுப்பாக மாட்டார்கள் என்கிற அடிப்படை உண்மையைக் கூடப் பார்க்க முடியாதளவிற்கு இந்தத் தமிழ்ப் பிள்ளைகளின் இருதயம் கெட்ட வன்மத்தால் கடினமாயிருக்கிறது.

காத்தான்குடிப் பள்ளிவாசல் கொலைகளிற்கு தமிழ் மக்கள் பொறுப்பல்ல, புலிகளே பொறுப்பு. நவாலி தேவாலயத்தின் மீதான விமானத் தாக்குதலிற்கு சிங்கள மக்கள் பொறுப்பல்ல, இலங்கை அரசே பொறுப்பு. அதுபோலவே இந்தக் குண்டுவெடிப்புகளிற்கும் அடிப்படைவாதப் பயங்கரவாதிகளே பொறுப்பு. இஸ்லாமியப் பொதுமக்கள் பொறுப்பாக மாட்டார்கள் என்பதோடு இனி அரசால் திணிக்கப்படும் பாதுகாப்பு கெடுபிடிகளையும் சந்தேகப் பார்வைகளையும் சுமக்க வேண்டிய துன்ப நிலைக்குள் அவர்கள் தள்ளப்பட்டுமிருக்கிறார்கள். 

இலங்கை அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சி வரிசையிலிருப்பவர்களோ இந்தத் தாக்குதல்களிற்குப் பின்னாலிருக்கிறார்கள் என்ற ஊகங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த ஊகங்கள் சரியற்றவை என்றே நான் நினைக்கிறேன். போர்ச்சூழல் அற்றுப்போய் மெதுமெதுவாக இயல்பு வாழ்க்கையை நோக்கி நகரும் நாட்டையும் இலங்கையின் முக்கிய பொருளாதார அலகான உல்லாசப் பயணத்துறையையும் அவர்கள் சீரழிக்க நினைக்கமாட்டார்கள். தாக்குதலில் சிங்கள மக்களும் வெளிநாட்டவர்கள் முப்பது பேர்கள்வரையும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் வைத்துப் பார்க்கையில் இலங்கை அரசு இதன் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்படும் ஊகம் தவறான ஊகமே.

இலங்கை அரசின் கண்காணிப்பை மீறி இத்தகையதொரு பாரிய தாக்குதல் ஒருங்கிணைக்கப்பட்டிருக்க முடியாது என்ற சந்தேகமும் வலுவற்றதே. பல தடவைகள், பல வளர்ச்சியடைந்த நாடுகளின் இறுக்கமான கண்காணிப்புகளை மீறியும் தீவிரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தியுள்ளார்கள். பாதுகாப்புத் துறையில் நுாறுசதவீத வளர்ச்சியை எட்டிய பிரான்ஸில் நான்கு வருடங்களிற்கு முன்பாக இதேபோன்ற தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

இஸ்லாமிய மக்களுக்கு எதிராக, பவுத்த இனவாதிகள் மிக இலகுவாக ஓர் இனக் கலவரத்தை ஏற்படுத்தக் கூடிய இந்தச் சூழலை இலங்கை அரசு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கத் துரிதமாக முயன்றதும் நன்நம்பிக்கை வெளிச்சங்களே. இலங்கை அரசுமீது நமக்கு ஆயிரம் விமர்சனங்களும் முரண்களும் இருந்தாலும் இந்தக் குறிப்பான ஆபத்தான நிலமையை இலங்கை அரசு கையாளும் முறையில் குற்றங்காண இதுவரை ஏதுமில்லை. அப்படியொரு இனக்கலவரம் நிகழாதா? தமிழருக்கு நடந்த கொடுமைகள் இஸ்லாமியருக்கும் இப்போது நிகழாதா என ஏங்கும் எளிய தமிழ்ப் பிள்ளைகளின் ஆசைகள் நிறைவேற வாய்ப்புகள் இல்லை.

சில தமிழ்ப் பிள்ளைகள் இந்தச் சந்தர்ப்பத்தில், இதுதான் மடுத் தேவாலயத்தில் நிகழ்ந்தது, இதுதான் நவாலியில் நிகழ்ந்தது என நனவிடை கொடூரமாகத் தோய்வதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இப்போது இறந்தவர்களிலும் கணிசமானோர் தமிழர்கள்தானே. தெற்கில் மட்டுமா குண்டு வெடித்தது, கிழக்கிலும்தானே வெடித்துத் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் இவர்கள் இலங்கை அரசின் முன்னைய கொலைகளை ஞாபகப்படுத்துவதன் மூலம் என்னதான் சொல்லவருகிறார்கள்? “துன்பம் தந்தவனுக்கு அதையே திருப்பிக்கொடு“ என்ற மேதகு தலைவரின் மொக்கு மொழியிலா இவர்கள் பேச விழைகிறார்கள்?

இலங்கையில் இன அடிப்படைவாதங்கள் நம்மைப் பேரழிவிற்குள் தள்ளின. இதுவரை இருந்த பவுத்த அடிப்படைவாதத் தீவிரவாதிகளோடு இப்போது இஸ்லாமிய அடிப்படைவாத் தீவிரவாதிகளின் அபாயத்தையும் இந்நாடு எதிர்நோக்குகிறது. இந்துத்துவ அடிப்படைவாதம் இந்தியாவிலிருந்து எல்லைகடந்து இலங்கைக்குள் நுழையும் முயற்சிகளில் இருக்கிறது. நம் சந்ததியினரை எல்லாவித அடிப்படைவாத அரசியலிலிருந்தும் விலகி நிற்கச் செய்வதே அழிவுகளைத் தவிர்ப்பதற்கான ஒரே மார்க்கமும் அதே அமைதி மார்க்கமுமாகும்.

மத, இன, மொழி அடிப்படைவாதிகள் You Tube-களிலும் மேடைகளிலும் மதவழிப்பாட்டிடங்களிலும் ஆற்றும் உரைகளைக் கேட்க விறுவிறுப்பாகத்தானிருக்கும். குண்டுகள் தயாரிப்பதற்கான பொருட்கள் வேறாயிருந்தாலும் இத்தகைய உரைகளும் அறைகூவல்களும் முட்டாள்தனமான அடிப்படைவாத நம்பிக்கைகளுமே குண்டுதாரிகளைத் தயாரிக்கின்றன. அடிப்படைவாதத்தில் முற்போக்கானது என்றோ ஆபத்தற்றது என்றோ எதுவுமில்லை. 

இந்த சின்னஞ்சிறிய அழகிய தீவை எவர் நிர்மூலமாக்கினாலும் அதை நாங்கள்தான் ஆளும்பேருமாக மீளக் கட்டியெழுப்ப வேண்டும். மூன்றே நாட்களில் கட்டியெழுப்ப இயேசு வரார்!

 

http://www.shobasakthi.com/shobasakthi/2019/04/22/ஈஸ்டர்-கொலைகள்/

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியே பேசிக்கொண்டு இருக்கப் போகிறோம் - தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாதாக்கும் என்றெல்லாம் ? 'நமது இந்து மதம்' என மார்தட்டுகிறவர்கள் பசு ரட்சகர்களுக்கும் சங்கிகளின் மத வெறி செயல்பாடுகளுக்கும் குறைந்த பட்சம் கண்டனமாவது தெரிவித்தால், அந்த மத வெறியர்கள் இவ்வளவு வளர முடியுமா ? அதுபோல் மதவாதிகள் பர்தா அணியச் சொன்னால், எதிர்ப்பு தெரிவிக்காமல் மூன்று வயதுக் குழந்தைக்கும் மாட்டிவிட்டு ஒத்துழைப்பு நல்குகிறார்கள். உலகில் ஏதாவது அரசு பர்தா தடைச் சட்டம் கொண்டு வந்தால், இந்த இசுலாமியப் பொதுமக்கள்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நீங்கள் பூணூல், திருநீறு, நாமம், குல்லா, தாடி என்று உங்கள் மதச் சின்னம் எதையும் அணிந்து விட்டுப் போங்கள். ஆனால் மற்றவரைப் பயமுறுத்தும் பர்தா தீவிரவாதத்தின் முதற்படி என்பதை உணர்வதில்லையா ? இப்படி மதத்தின் பெயரால் தீவிரவாதம் செய்பவர்கள் அந்தந்த மத நம்பிக்கையுள்ளவர்களின் ஒத்துழைப்புடன்தான் செய்கிறார்கள். எனவே அந்தந்த மதம் சார்ந்தவர்களைத்தான்  நாம் கேட்க வேண்டும்; கண்டிக்க வேண்டும். அதை விடுத்து தீவிரவாதம் வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை போல் தீவிரவாதிகளை எதிர்கொள்ள நினைப்பது, ஒரு இருட்டு அறையில், இல்லாத ஒரு கறுப்புப் பூனையைத் தேடுவது. இனிமேலாவது, மதச் சிறுபான்மையினர் என்றால் தூக்கிப் பிடிப்பது அதிமேதாவித்தனம் என்ற நிலையைக் கைவிட வேண்டும்.

Edited by சுப.சோமசுந்தரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.