Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஃபானி புயல்: 190 கி.மீ வேகத்தில் வீசும் காற்று , 10 லட்சம் மக்களை தங்க வைக்க ஏற்பாடு

Featured Replies

ஃபானி புயல்: வேறு இடங்களுக்கு குடியமர்த்தப்படும் ஆயிரக்கணக்கான மக்கள்படத்தின் காப்புரிமை Reuters

ஃபானி புயலின் காரணமாக வடகிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து ஆயிரக்கணக்காம்ன மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஃபானி புயல் ஒடிசாவை நோக்கி மணிக்கு 190 கி.மீ வேகத்தில் வீசும் காற்றுடன் நகர்ந்து கொண்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஒடிசாவில் கரையை கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தாழ்வான பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதியில் உள்ள இரண்டு துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள் அதிகாரிகள்.

புயல் ஒடிசாவை நோக்கி நகர்ந்தாலும், ஆந்திரம் மற்றும் தமிழகத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?

கிழக்கு ஆந்திர பகுதியில் வங்கக் கடலில் மேல்நோக்கி இந்த புயல் நகர்ந்து செல்கிறது.

ஃபானி புயல்

புவனேஸ்வரில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஹெச்.ஆர். பிஸ்வாஸ், குறைந்தது ஒடிசாவில் உள்ள 11 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்கிறார். மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய பேரிடர் பாதுகாப்பு முகமையும், மக்களை பாதுகாப்பாக இருக்கும்படியும், மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் எச்சரித்துள்ளது.

ஒடிசா கரையை அடைந்தவுடன், இந்த புயலானது வங்கதேசத்தின் சிட்டகோங்கை நோக்கி நகருமென எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன?

பத்துலட்சம் மக்களை தங்க வைக்க 850 தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடலோர காவல்படை, இந்திய கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.

81 தொடர் வண்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் காலம் என்பதால் தேர்தல் ஆணையமும், அரசு துரிதமாக செயல்பட தங்களது விதிமுறைகளை தளர்த்தி உள்ளது.

இதற்கு மத்தியில் ஃபானி புயலுக்கு 309 கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை சமூக ஊடகங்களில் சிலர் விமர்சித்துள்ளனர். கஜா புயலுக்கு தரப்படாத நிதி, தமிழகத்தை தாக்காத ஃபானி புயலுக்கு தரப்படுவது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.

https://www.bbc.com/tamil/india-48129443

  • கருத்துக்கள உறவுகள்

ஒடிசாவில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைப்பு

May 3, 2019

 

odisha-fani-cyclone-10-00000-people-in-cஒடிசாவில் பானி புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பானி புயல், ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் இன்று கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் பயணிகளின் பாதுகாப்பு கருதி 200-க்கும் மேற்பட்ட புகையிரதங்களையும் தென்கிழக்கு புகையிரதசேவை ரத்து செய்துள்ளதுள்ளதுடன் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

#odisha  #fanicyclone  #camps

 

http://globaltamilnews.net/2019/120436/

  • கருத்துக்கள உறவுகள்

ஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபானி புயல்: மீட்புப் பணிகள் தீவிரம்

 
ஃபானி புயல் கரையை கடக்க தொடங்கியது - ஒடிசாவில் கனத்த மழை

புயல் கரையை கடக்கும் ஒடிசா மாநிலத்தில் கனத்த மழை பதிவாகி உள்ளது.

புவனேஸ்வரில் இருந்து வட கிழக்கே 200 கிமீ வேகத்தில் நகரும் ஃபானி, வலுவிழந்து தீவிர புயலாக மாறி வங்க தேசம் நோக்கி செல்கிறது.

சுற்றுலா மற்றும் கோயில் நகரமான பூரியில் மணிக்கு 175 கி.மீ என்ற வேகத்தில் சூறை காற்று வீசியது. இதனால் ஒடிசாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மின்கம்பங்கள், சாலைகள் என அனைத்தும் சேதமாகியுள்ளது.

அதே போல ஆந்திராவின் வடக்கு பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

மீட்புப் பணிகள் தீவிரம்படத்தின் காப்புரிமை PIB India / TWITTER

இதுவரை எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளதென்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள் .

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @PIB_India

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @PIB_India

புயலின் காரணமாக கிழக்கு கடற்கரையில் உள்ள இரண்டு முக்கிய துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன. எட்டு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஃபானி புயல்படத்தின் காப்புரிமை Getty Images

புயல் கரையை கடக்கவிருக்கும் ஒடிசா பூரியில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். 850 ஆண்டுகள் பழமையான ஜகநாதர் கோயிலும் இங்குதான் உள்ளது. இந்த புயலினால் கோயில் சேதமாகலாமென அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

ஜெகநாதர் கோயில்படத்தின் காப்புரிமை Getty Images

அந்த பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.

7 போர்க்கப்பல், 6 விமானம்

கப்பற்படை, கடலோர காவல் படை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளன.

7 போர்க்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், 6 விமானங்கள் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளதாக கப்பற்படை தெரிவிக்கிறது.

ஃபானி புயல்படத்தின் காப்புரிமை Getty Images

பெருமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் நீரின் அளவு 5 அடி வரை உயரலாமென வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஃபானி புயல் கரையை கடக்க தொடங்கியது - பாதுகாப்பு பணியில் 7 போர்க்கப்பல்கள்

இந்தியாவில் கிழக்கு கடற்கரையில் கடந்த முப்பது ஆண்டுகளில் தாக்கிய புயல்களில் நான்காவது பெரிய புயல் ஃபானி.

2017ஆம் ஆண்டு தாக்கிய ஓக்கி புயலில் 200 பேர் பலியாகினர், நூற்றுக்கணக்கானோர் தம் வாழ்விடங்களை இழந்தனர்.

கனமழை

ஃபானி புயல்படத்தின் காப்புரிமை EUROPEAN PHOTOPRESS AGENCY

காலை 6 மணி நிலவரப்படி ஆந்திராவில் ஸ்ரீகாகுளம், இச்சாபுரம் பகுதியில் அதிகபட்சமாக 173.75 மி.மீ மழை பெய்துள்ளது. சோம்பேட்டாவில் 167 மி.மீ மழையும், மேல் பத்துபுரத்தில் 153.75 மி.மீ மழையும், கீழ் பத்துபுரத்தில் 131 மி.மீ மழையும், கவிட்டியில் 148 மி.மீ மழையும் பெய்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பத்துலட்சம் மக்களை தங்க வைக்க 850 தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஃபானி புயல்படத்தின் காப்புரிமை Getty Images

கடலோர காவல்படை, இந்திய கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.

81 தொடர் வண்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் காலம் என்பதால் தேர்தல் ஆணையமும், அரசு துரிதமாக செயல்பட தங்களது விதிமுறைகளை தளர்த்தி உள்ளது.

https://www.bbc.com/tamil/india-48143109

 

  • கருத்துக்கள உறவுகள்

ஓடிசாவில் பானி புயலால் 8 பேர் உயிரிழப்பு

May 4, 2019

odisa.jpg?resize=660%2C371இந்தியாவின் ஒடிசா மாநிலம் பூரியில் நேற்று வெள்ளிக்கிழமை கரையை கடந்த பானி புயல் அங்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 160 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒடிசாவின் பூரி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தமையினால் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் கடுமையான மழை பெய்திருந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்தநிலையில் பானி புயல் பங்களாதேசின்; சிட்டகாங் பகுதியை நோக்கி சென்று இன்று சனிக்கிழமை வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

 #odisa #fanicyclone #rain

Fani.jpg?resize=615%2C350

 

http://globaltamilnews.net/2019/120541/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.