Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதல் பார்வை: K-13

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உதிரன்

சென்னை
 
 
k-13jpg
 

ஒரு கதைக்காக ஒருவர் எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்தால் அதுவே 'K-13'.

அருள்நிதி படம் இயக்கத் துடிக்கும் ஓர் இயக்குநர். ஷூட்டிங் தொடங்கிய 10 நாளில் அவரது படம் டிராப் ஆகிவிடுகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் அருள்நிதி மனநல நிபுணரிடம் கவுன்சிலிங் செல்கிறார். அந்த சூழலில் நண்பன் ரமேஷ் திலக் இரண்டாவது படம் இயக்க ஒப்பந்தமாகிறார். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக ரமேஷ் திலக், அருள்நிதி உள்ளிட்ட சில நண்பர்கள் பாரில் மது அருந்துகின்றனர். அங்கு வரும் எழுத்தாளர் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அருள்நிதியைச் சந்திக்கிறார். இருவரும் ஷ்ரத்தாவின் வீட்டுக்குச் செல்கின்றனர். மறுநாள் காலையில் பார்த்தால் அருள்நிதி நாற்காலியில் அமர்ந்தபடி கைகள் கட்டப்பட்டு இருக்கிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.

 

K-13 என்ற வீட்டில் ஒருநாளில் நடந்தது என்ன, ஷ்ரத்தாவின் மரணத்தில் உள்ள மர்மம் என்ன, அருள்நிதி இதிலிருந்து தப்பித்தாரா, அவரின் 10 வருடக் கனவு என்ன ஆனது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

அலட்டிக்கொள்ளாமல் ஒரு சைக்காலஜி த்ரில்லர் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பரத் நீலகண்டன். ஒரே வீட்டில் நடக்கும் சம்பவங்களைக் காட்சிப்படுத்திய விதத்தில் சற்று சறுக்கியிருக்கிறார். மற்றபடி தரமான தொழில்நுட்ப அம்சங்களுடன் யூகிக்க முடியாத திருப்பங்களுடன் திரைக்கதையைக் கட்டமைத்துள்ளார்.

'டிமான்ட்டி காலனி', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' போன்ற படங்களின் பாணியில் அருள்நிதிக்கு இது இன்னொரு படம்.  கதாபாத்திரத்தின் பொறுப்பை உணர்ந்து தன் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளார். கதைக்காகத் தவிப்பது, மன அழுத்தத்தில் உழல்வது, மது போதையில் உளறுவது, கொலை நடந்த இடத்திலிருந்து தப்பிக்க முயற்சி செய்வது என கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்தியுள்ளார்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்தான் படத்தின் மையம். அதற்கு எந்தவிதக் குறையும் வைக்காமல் இயல்பாக நடித்துள்ளார். 'யோகி' பாபு, காயத்ரி, 'எருமசாணி' விஜய், ரமேஷ் திலக் ஆகியோருக்குப் படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை.  ஆனால், கதை நகர அவர்கள் பயன்பட்டுள்ளனர்.

அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும் சாம்.சி.எஸ்.ஸின் பின்னணி இசையும் படத்துக்கு வலு சேர்க்கின்றன. இயக்குநர் பரத் நீலகண்டன் வசனங்களில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். எந்த உரையாடலிலும் சுவாரஸ்யம் இல்லை.

அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் சந்திக்கும் காட்சிகளும் அதற்கான முன்கதையும் திரைக்கதையில் சொல்லியிருக்கும் விதம் நம்பகத்தன்மையுடன் உள்ளது.  ஷ்ரத்தா எழுதிய புத்தகத்தின் தலைப்பை ஒட்டியவாறு திரைக்கதையின் பரிணாமம் விரிவடைவது இயக்குநரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. ஆனால், ஷ்ரத்தா- காயத்ரி பிரிவுக்கான காரணம் வலுவாகவும், ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இல்லை. ஒரே வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் எந்தத் திருப்பமும் இல்லாமல் இழுவையாய் நீள்கிறது. எடிட்டர் ரூபன் அதைக் கொஞ்சம் கத்தரி போட்டுக் குறைத்திருக்கலாம்.

இயக்குநரும், எழுத்தாளரும் கதைக்காக எடுக்கப்படும் மெனக்கெடல் வேலைகள் மேலோட்டமாகவே உள்ளன. அதை இன்னும் ஆழமாக அலசியிருக்கலாம். மர்ம மரணம் குறித்த இருவேறு பார்வைகள் திரைக்கதையின் திருப்பத்துக்கு உதவுகின்றன. ஆனால், இரண்டாவது பார்வையில் லாஜிக் இடிக்கிறது. அதற்கான நுட்பத்தை ரசிகர்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு இயக்குநர் காட்சிப்படுத்தத் தவறிவிட்டார். இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் K-13 வித்தியாசமான த்ரில்லர் அனுபவத்தைக் கொடுக்கும்.

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article27023859.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.