Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு பேரழிவு ஆயுதங்களை வழங்கியதன் மூலம் ஆறரைக்கோடி தமிழரையும் இந்தியா உதாசீனப்படுத்தி விட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு பேரழிவு ஆயுதங்களை வழங்கியதன் மூலம் ஆறரைக்கோடி தமிழரையும் இந்தியா உதாசீனப்படுத்தி விட்டது

[23 - April - 2007]

* டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்

இலங்கையரசுக்கு இந்திய அரசு ஆயுதங்கள் வழங்கியுள்ளதை கடுமையாகக் கண்டித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ், ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க தமிழகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டியவேளை வந்துவிட்டதெனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இராணுவத் தாக்குதல்களை நிறுத்துங்கள்; மனித உரிமைகளை மதித்து நடவுங்கள்; ஈழத் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகளை வழங்குவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் முதல் போப் ஆண்டவர் வரையில் உலகத் தலைவர்கள் எல்லோரும் இலங்கை அரசை வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், நாள்தோறும் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து வரும் சிங்கள இனவாத அரசு மேலும் மேலும் தன்னுடைய இராணுவத் தாக்குதல்களுக்காகத் தளபாடங்களை வாங்கிக் குவித்துக் கொண்டு வருகிறது.

இலங்கையில் தமிழர்களை பூண்டோடு அழித்துவிட வேண்டும்; தமிழ் இனமே அங்கே இருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டு வரும் இலங்கை அரசுக்கு இந்தியாவும் பேரழிவு ஆயுதங்களை வழங்கியிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி உலகத் தமிழர்களையெல்லாம் திடுக்கிட வைத்திருக்கிறது.

இலங்கைக்கு எத்தகைய இராணுவ உதவிகளையும் வழங்க மாட்டோம் என்று அளித்த உறுதிமொழி இதன் மூலம் மீறப்பட்டிருக்கிறது. இந்தியா வழங்கியுள்ளதாக வெளிவந்திருக்கும் இந்த ஆயுத உதவி இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவாத அரசின் கொடிய போரை மேலும் ஊக்குவிக்கும். செஞ்சோலை கொடுமைகள் தொடரும்; அகதி முகாம்கள் குண்டு வீசி அழிக்கப்படும்; ஈழத் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே குடியிருக்க இடமில்லாமல் அலறி ஓடும் அவலம் பெருகும்.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ உதவிகள் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் அல்ல என்றும் பாதுகாப்புத் தேவைக்கான தளபாடங்கள் மட்டுமே என்றும் இந்திய அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளிவந்திருக்கிறது. இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஆயுதங்கள் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களா அல்லது பாதுகாப்புத் தேவைக்கான தளபாடங்களா என்பது பிரச்சினை அல்ல.

ஈழத் தமிழர்களோடு பேச்சுவார்த்தை நடத்த மறுத்து மூர்க்கத்தனமாக அவர்கள் மீது இராணுவத் தாக்குதலை நடத்தி வரும் சிங்கள இனவாத அரசுக்கு எத்தகைய இராணுவ உதவிகளையும் வழங்கக்கூடாது. இது ஒட்டுமொத்த இந்தியத் தமிழர்களின் கோரிக்கையாகும். இங்குள்ள ஆறரைக்கோடி தமிழர்களின் கோரிக்கையையும் அவர்களது உணர்வுகளையும் இந்திய அரசு உதாசீனப்படுத்திவிடக்கூடாது.

இந்தியாவை பகை நாடாகக் கருதும் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் இருந்து பெருமளவில் ஆயுதங்களையும், போர் விமானங்களையும் வாங்கிக் குவித்து வரும் இலங்கைக்கு இந்தியாவும் இராணுவ உதவிகளை வழங்கும் செயலைத் தமிழ் இனத்திற்கே எதிரான நடவடிக்கை என்று தான் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் கருதுவார்கள்.

இந்தப் பழி இந்தியாவின் தலையில் விழுந்துவிடக் கூடாது. இலங்கைக்கு எத்தகைய இராணுவ உதவியையும் வழங்கமாட்டோம் என்று அளித்திருக்கும் வாக்குறுதியை இந்திய அரசு தொடர்ந்து காப்பாற்றி வர வேண்டும்.

அந்த வாக்குறுதியைக் காப்பாற்றுவோம் என்ற உறுதியை இந்திய அரசிடமிருந்து பெறத் தாய்த் தமிழகத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினையில் தமிழகத்தின் ஆழ்ந்த நித்திரையும், தமிழகத் தலைவர்களின் மௌனமும் கலைய வேண்டும். அதற்கான தருணம் வந்துவிட்டது. இந்தத் தருணத்தைத் தவறவிட்டால் இலங்கையில் நம்முடைய சகோதரர்களான ஈழத் தமிழர்கள் அடியோடு அழிக்கப்பட்டுவிடுவார்கள். அதன் பிறகு அவர்களுக்காக ஒரு அனுதாபக் கூட்டம் நடத்துவதில் எந்தப் பயனுமில்லை.

எனவே, இந்த ஆபத்தை தடுத்து நிறுத்த இங்குள்ள ஆறரைக் கோடி தமிழர்களும் அவர்களை வழி நடத்துகிற அரசியல் இயக்கங்களும் தமிழர்களுக்கும் தமிழகத்திற்குப் பிரதிநிதித்துவம் வகிக்கும் தமிழக அரசும், அதனை வழி நடத்துகின்ற முதலமைச்சர் கருணாநிதியும் காலம் தாழ்த்தாமல் ஈழத் தமிழர்களை காக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.

அன்றாடம் செத்து மடிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்கள் இங்குள்ள தாயகத்துத் தமிழர்களைத் தான் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது நம்பிக்கையை சிதறடித்துவிடக் கூடாது. இங்குள்ள ஈழத் தமிழர்கள் செயற்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஒன்றுபட்டு குரல் கொடுப்போம். ஈழத் தமிழர்களைக் காப்போம்.

இதில் ஒரு நாளைக் கூட வீணடிக்கக்கூடாது. வீணடிக்கும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்கள் செத்து மடியும் ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்து அனைவரும் செயற்படுவோம்

தினக்குரல்

உதாசீனப்படுத்தவில்லை,

வஞ்சித்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உதாசீனம் வஞ்சித்தல் எண்டெல்லாம் சொல்லடுக்கிறியள். இந்தியா இலங்கைத் தமிழரைக் கொல்லச்சொல்லி இலங்கைக்கு ஆயுதம் குடுக்குது. இதுதானே விசயம். இலங்கைத் தமிழரைக் கொல்லுறது இந்தியாவுக்கு ஒண்டும் புதுசில்லை. முடிஞ்சால் இந்தியா தமிழநாட்டுத் தமிழரையும் அழிச்சிப்போடும். அந்தப் புத்தியாலதான் இலங்கைக் கடற்படை தமிழக மீனவரைச் சுடுறபொதெல்லாம் அதைத் திசைதிருப்பிக் கண்டும் காணாமல் இருக்குது. இந்தியாவுக்கு இந்தி ஆதிக்கமும் இந்தோஆரிய மேலாண்மையும்தான் முக்கியம். அதுக்காக மற்றைய இனங்களை அது அழிக்கத் தயங்காது. ஆட்சியில பலதரப்பாரும் பங்குகொண்டாலும் இந்து அடிப்படைவாதம்தான் இந்தியாவுடைய முதற் குறிக்கோள். கொள்கை வகுப்பாளர்களெல்லாம் இதைச்சுத்திச் சுத்தித்தான் நிற்பார்கள்.

என்ன உதாசீனம் வஞ்சித்தல் எண்டெல்லாம் சொல்லடுக்கிறியள். இந்தியா இலங்கைத் தமிழரைக் கொல்லச்சொல்லி இலங்கைக்கு ஆயுதம் குடுக்குது. இதுதானே விசயம். இலங்கைத் தமிழரைக் கொல்லுறது இந்தியாவுக்கு ஒண்டும் புதுசில்லை. முடிஞ்சால் இந்தியா தமிழநாட்டுத் தமிழரையும் அழிச்சிப்போடும். அந்தப் புத்தியாலதான் இலங்கைக் கடற்படை தமிழக மீனவரைச் சுடுறபொதெல்லாம் அதைத் திசைதிருப்பிக் கண்டும் காணாமல் இருக்குது. இந்தியாவுக்கு இந்தி ஆதிக்கமும் இந்தோஆரிய மேலாண்மையும்தான் முக்கியம். அதுக்காக மற்றைய இனங்களை அது அழிக்கத் தயங்காது. ஆட்சியில பலதரப்பாரும் பங்குகொண்டாலும் இந்து அடிப்படைவாதம்தான் இந்தியாவுடைய முதற் குறிக்கோள். கொள்கை வகுப்பாளர்களெல்லாம் இதைச்சுத்திச் சுத்தித்தான் நிற்பார்கள்.

உண்மையச்சொன்னீங்கள். :o

இந்தியாவின் நிலையில் மாற்றம் வேண்டுமாயின் உடனடி நடவடிக்கையாக இரண்டு விடயங்கள் நடந்தேற வேண்டும்

1,பதில் தூதுவர் Hகம்ஸா விலக்கப்பட வேண்டும். 2,இலங்கை விவகாரத்தில் நடுத்தெரு நாராயணன் விலக்கப்பட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

வட இந்திய ஆரியர்களுக்கு பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் உள்ள முரண்படுகளுக்காக தென்பகுதித் திராவிடர்களும் அந்நாடுகளை எதிரி நாடுகளாகக் கொண்டுள்ளார்கள். எதற்காக? வட இந்திய ஆரியனும் ஒரு இந்திய சகோதரன் என்ற அடிப்படையில். என்றாவது பாகிஸ்தானுக்கும் தமிழகத்துக்கும் பிரச்சினை இருந்ததுண்டா? அப்படி ஒன்றுமில்லாதபோதும், திராவிடத் தமிழன் தன் தேச ஒருமையை வெளிப்படுத்தி வந்துள்ளான்.

ஆனால், மறுமுனையில் என்ன நடக்கிறது? தமிழனுக்கு சிங்களவன் எதிரி. ஆனால், ஈழத்தில் திராவிடன் சாகும்போது வட இந்திய ஆரியர்கள் சிங்கள ஆரியனுக்குத்தானே வக்காலத்து வாங்குகிறார்கள். திராவிடர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டில்லை. ஆயுதங்கள் வழங்குகிறார்கள். கொல்லும்படி செய்கிறார்கள். தமிழக மக்களை இதைவிட வேறு வகையில் அசிங்கப் படுத்த முடியாது.

சிந்துசமவெளியில் நாகரிகத்தால் சிறந்து விளங்கிய திராவிடனுக்கு ஆரியப் படையெடுப்பால் தெற்கே ஓடவேண்டிய நிலை அன்று. ஓய்ந்ததா அவர்கள் ஓட்டம் இன்றுவரை? வங்காளத்திலிருந்து தென்னிலங்கை சென்ற ஆரியன் சிங்களவனாகி தமிழனை வடக்கே துரத்துகிறான். வடக்கே ஆரியன் அடக்குகிறான். தமிழனுக்கு எங்கே பாதுகாப்பு?

தமிழகச் சொந்தங்களே! ராஜீவ் காந்தி கொலையை வைத்து உங்களைத் திசைதிருப்பி விட்டார்கள். அவரைவிடப் பெரிய இந்திராவைக் கொன்றவர்கள் சீக்கியர்கள். ஆனால், ஒரு சீக்கியர் இன்று உங்கள் பிரதமர். சீக்கியரும் ஆரியர் என்பதால் அது அன்ணன் தம்பி தகராறு. இங்கே தமிழன் என்பதான் இது வாழ்நாள் தண்டனைக்குரிய கொடுங்குற்றமாம். இதற்குத் தமிழகத்தின் தமிழர்களே ஆதரவு. எங்கே போய்ச் சொல்லி அழுவது?

எனவே, தமிழக சகோதரர்களே! ஈழத்தமிழனுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள். உங்கள் மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி. அதாவது, ஈழத்தமிழனை அழிக்கும் சிங்கள / ஆரிய கூட்டுச் சதிக்கு உங்கள் மவுனத்தின் மூலம் உடந்தையாகிவிடாதீர்கள். இந்திய நடுவண் அரசுக்குத் தமிழக மக்கள் ஒன்றிணைந்து பாடம் புகட்ட வேண்டிய தருணம் இது. அரசியல் வேற்றுமைகளை மறந்து கட்சிகள் இதை முன்னெடுக்க வேண்டும். முதன்மையாக, பாகிஸ்தானையும் சீனாவையும் தமிழகத்தின் நட்பு நாடுகளாக கொள்கை அடிப்படையில் அறிவிக்க தமிழ் உணர்வுக்கட்சிகள் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும். ஒரு சிறு திரியைக் கொளுத்திப் போட வேண்டும். ஆரியன் வழிக்கு வருவான்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உதாசீனம் வஞ்சித்தல் எண்டெல்லாம் சொல்லடுக்கிறியள். இந்தியா இலங்கைத் தமிழரைக் கொல்லச்சொல்லி இலங்கைக்கு ஆயுதம் குடுக்குது. இதுதானே விசயம். இலங்கைத் தமிழரைக் கொல்லுறது இந்தியாவுக்கு ஒண்டும் புதுசில்லை. முடிஞ்சால் இந்தியா தமிழநாட்டுத் தமிழரையும் அழிச்சிப்போடும். அந்தப் புத்தியாலதான் இலங்கைக் கடற்படை தமிழக மீனவரைச் சுடுறபொதெல்லாம் அதைத் திசைதிருப்பிக் கண்டும் காணாமல் இருக்குது. இந்தியாவுக்கு இந்தி ஆதிக்கமும் இந்தோஆரிய மேலாண்மையும்தான் முக்கியம். அதுக்காக மற்றைய இனங்களை அது அழிக்கத் தயங்காது. ஆட்சியில பலதரப்பாரும் பங்குகொண்டாலும் இந்து அடிப்படைவாதம்தான் இந்தியாவுடைய முதற் குறிக்கோள். கொள்கை வகுப்பாளர்களெல்லாம் இதைச்சுத்திச் சுத்தித்தான் நிற்பார்கள்

இன்னும் சொல்லப்போனால் ஈழத்தமிழரைவிட

தமிழகத்தமிழர்கள் மீதே இந்தியாவிற்கு ஆத்திரம் அதிகம்

இந்தியா ஈழத்தில் செய்த அநியாயங்களுக்கு ஈழத்தமிழர்மேல் கொண்ட ஆத்திரம் காரணமல்ல.

தமிழகத்தமிழர்களை பழிதீர்ப்பதாகவே அவர்களது ஆவேசம்இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பெரியார் எப்போதோ கூறியிருக்கிறார். அண்ணாவின் ஆரிய மாயையிலும் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. உண்மையில் பாகிஸ்தானியர் தமிழரின் சகோதரரர்கள். இந்து கங்கைச் சமவெளிகளில் அதாவது சப்தசிந்துப் பிரதேசங்களில் வாழந்த எமது மூதாதையரின் வழித் தோன்றல்களே இன்றைய பாகிஸ்தானியரும் ஆபகானிஸதானியரும். ஆரியரின் பிராமணீய ஒடுக்குமுறைக்கெதிராக இஸ்லாத்தைத்தைத் தழுவியவர்கள் அவர்கள். சரித்திரம் புரட்டிப்போடப்படவேண்டும் அப்போதுதான் இந்தியாவிலுள்ள இந்து ஆரிய வெறியர்களின் கொட்டம் அடங்கும். பாகிஸதானியருடன் தமிழர்கள் தங்கள் நட்புக்கரத்தை நீட்டவேண்டும். கற்பனைக்கடவுளர்களை நம்பி எமது செந்தமிழர் அடிப்படை வாதத்தைக் கோட்டைவிட்டுவிடக் கூடாது. இதைத்தான் அன்று திராவிடக்கொள்கை போதித்தது. இன்று அது எங்கே போனது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.