Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொலை குண்டுதாரிகளாகும் தாய்மார்கள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை குண்டுதாரிகளாகும் தாய்மார்கள் !

இலங்­கையில் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் சோதனை நட­வ­டிக்­கை­க­ளுக்­காகப் பாது­காப்பு படை­யினர் கொழும்பில் உள்ள வீடொன்­றுக்கு சென்­றி­ருந்­த­வேளை அந்தச் சம்­பவம் இடம்­பெற்­றது.

Muslim-woman-wearing-a-hijab.jpg

அவ்­வேளை கதவை திறந்­தவர் பாத்­திமா இப்­ராஹிம். தற்­கொலை குண்­டு­தா­ரி­களில் ஒரு­வ­ரான இலாம் இப்­ரா­ஹிமின் மனைவி- கர்ப்­பிணி.

பொலி­ஸாரைப் பார்த்­ததும் அவர் வீட்­டிற்குள் ஓடி­வெ­டி­குண்டை வெடிக்க செய்தார்.அவ­ருடன் சேர்ந்த அவ­ரது மூன்று மகன்­களும் கொல்­லப்­பட்­டனர்.

இதே­போன்­ற­தொரு சம்­பவம் மார்ச் மாதம் இந்­தோ­னே­சி­யாவில் இடம்­பெற்­ற­து-­ ப­யங்­க­ர­வாத தடுப்பு பிரி­வினர், ஐ.எஸ் அமைப்பின் ஆத­ர­வா­ள­ரான அபு ஹம்­சாவை கைது­செய்­தி­ருந்­தனர். இவர் குண்­டு­ த­யா­ரிப்­பதில் திற­மை­யா­னவர்.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் அவ­ரது மனைவி சொலி­மாவை கைது­செய்­வ­தற்­காக அவ­ரது வீட்­டிற்குச் சென்­ற­வேளை சொலிமா தன்னை வெடிக்­க­வைத்து இறந்தார். இதன் போது அவ­ரது இரண்­டு­வ­யது குழந்­தையும் இறக்­க­வேண்­டிய பரி­தாபம் நிகழ்ந்­தது.

இலங்கை முதல் இந்­தோ­னே­சியா வரை ஆபத்­தான போக்­கொன்று ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. ஐ.எஸ் கொள்­கை­யினால் தங்­களை தீவி­ர­வா­த­ம­யப்­ப­டுத்­திக்கொண்ட பெண்கள் தற்­கொ­லைக்­ குண்­டு­தா­ரி­க­ளாக மாறு­கின்­றனர்.இதன் போது தங்கள் பிள்­ளை­க­ளையும் தங்­க­ளுடன் இணைத்துக் கொண்டு அவர்கள் மர­ணிக்­கின்­றனர்.

ஜிகாத் வர­லாற்றில் பெண் தற்­கொலைக் குண்­டு­தா­ரிகள் பலர் காணப்­ப­டு­கின்­றனர். ரஷ்யா மேற்­கொண்ட போராட்­டத்தில் கருப்பு வித­வைகள் என்ற பிரி­வினர் தற்­கொலை தாக்­கு­தல்­களில் ஈடு­பட்­டனர்.

ஆனால் தங்கள் பிள்­ளை­க­ளுடன் தாய்­மார்கள் தங்­களை வெடிக்­க­வைக்கும் போக்­கொன்று புதி­தாக பயங்­க­ர­வா­திகள் மத்­தியில் உரு­வா­கி­யுள்­ளது.

அல்கொய்தாவில் இவ்­வா­றான போக்கு இல்லை என தெரி­விக்­கின்­றார். தென்­கி­ழக்­கா­சி­யாவைச் சேர்ந்த முன்னாள் அல்கொய்தா உறுப்­பினர்  சோபியான் சவுரி.

இஸ்­லாமை பொறுத்­த­வரை வீட்­டையும் பிள்­ளை­க­ளையும் பார்த்­துக்­கொள்­வதே பெண்­க­ளுக்கான கடமை என்­கிறார் அவர். 

எனினும்  தற்­கொலை தாக்­கு­தல்­களில் ஈடு­படும் பெண்கள் வேக­மாக சொர்க்­கத்­திற்குச் செல்ல விரும்­பு­கின்­றனர் என்­கிறார் அல்கொய்தா ஜெமா இஸ்­லா­மிய அமைப்பின்  நசீர் அபாஸ்.

இஸ்­லா­மிய பெண்கள் மத்­தியில் இவ்­வா­றான புதிய போக்கு காணப்­ப­டு­வதை 2018 மே மாதம் இந்­தோே­னசி­யாவின் சுர­பயா நகரில் இடம்­பெற்ற தற்­கொலை குண்­டு­த்தாக்­கு­தல் கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

இந்த நகரில் ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் மீது தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

தந்தை, தாய் மற்றும் 18 வயதுக்குட்­பட்ட நான்கு பிள்­ளைகள் இணைந்து மேற்­கொண்ட இந்த தாக்­குதல் இந்­தோ­னே­சி­யா­விலும் சர்­வ­தேச அள­விலும் பாரிய அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

செல்­வந்த வர்த்­த­க­ரான தந்தை, மனைவி மற்றும் இரு பெண்­பிள்­ளை­களின் உடல்­களில் வெடி குண்டை பொருத்­தினார். அவர்கள் அதனை கிறிஸ்­தவ தேவா­­ல­யங்­களில் வெடிக்­க­ வைத்­தனர்.

அதன் பின்னர் அவர் வெடி­குண்­டுகள் பொருத்­தப்­பட்ட மோட்­டார்­சைக்­கிளில் ஏற்றி தனது இரு மகன்­மாரை கிறிஸ்­தவ தேவா­ல­யத்­திற்கு அனுப்­பி­வைத்தார் அவர்கள் அங்கு தங்­களை வெடிக்­க­வைத்­தனர்.

அதன் பின்னர் தந்தை வெடி­பொ­ருட்கள் நிரம்­பிய காரை மற்­றொரு கிறிஸ்­தவ தேவா­ல­யத்தை நோக்கி செலுத்தி தன்னை வெடிக்­க­வைத்தார்.

குண்­டு­வெ­டிப்பு இடம்­பெ­று­வ­தற்கு முதல்­நா­ளி­ரவு தனது பிள்­ளை­க­ளிடம் மர­ணிக்க தயா­ரா­யி­ருங்கள் என தந்தை தெரிவித்­துள்ளார் என அறியத் தருகின்றார் ஆய்­வா­ள­ரான  ரிஸ்கா நூருல்.

தம்­ப­திகள் தீவி­ர­வா­த­ம­யப்­ப­டுத்­தப்­படும் இந்த போக்கு அவர்­க­ளது பிள்­ளை­க­ளுக்கு ஆபத்­தான விட­ய­மாக மாறி வரு­கின்­றது.

பெற்­றோர்கள் தாங்கள் ஜிகாத்தில் ஈடு­ ப­ட­வேண்டும் என தீர்­மா­னித்தால் பிள்­ளைகள் ஆபத்­தான நிலைக்கு தள்­ளப்­ப­டு­கின்­றனர் எனத் தெரிவிக்­கின்றார் ஜெமா இஸ்­லா­மிய அமைப்பின் முன்னாள்   தலைவர் நசீர் 

பெற்­றோர்கள் தங்கள் பிள்­ளை­களை சொர்க்­கத்­திற்கு கொண்­டு­செல்­ல­வேண்டும் என கரு­து­கின்­றார்கள் எனவும் அவர் தெரிவித்­துள்ளார்.

ஆண்­களை விட பெண்­களால் அதிதீவி­ர­வாத போக்­குடன் விளங்க முடியும் என பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் குறித்து ஆராய்ச்­சி­களை மேற்­கொண்­ட­வர்கள் தெரிவிக்­கின்­றனர்.

பெண்கள் தங்கள் மனதை தம் மனதை உறுதி­ப­டுத்­து­வதால் அவர்கள் தியா­கத்­திற்கு அதி­க­ளவு தயா­ரா­க இ­ருப்­பார்கள். அதனால் அவர்கள் ஆபத்­தா­ன­வர்கள் என தெரிவிக்­கின்றார் ஆய்­வா­ள­ரான  ரிஸ்கா நூருல்.

இந்­தோ­னே­சி­யாவில் பொலிஸார் தேடுதல் நடத்­தி­ய­வேளை, தன்னை வெடிக்­க­வைத்த சொலிமா தன்னை விட அதி­க­ளவு தீவி­ர­வா­த­போக்கை கொண்­டவர் என அவ­ரது கணவர் அபு ஹம்சா விசா­ர­ணையின் போது தெரிவித்­துள்ளார்.

இந்­தோ­னே­சிய தம்­ப­தி­யினர் இணை­ய­ மூ­லமே தீவி­ர­வா­த­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். தற்­கொலை குண்­டு­த்தாக்­கு­தலை மேற்­கொண்ட பெண்­களில் பலர் தங்கள் கண­வர்­களின் போத­னை­களால் ஈர்க்­கப்­பட்­டுள்­ளனர். இதனை அவர்­க­ளுக்கு அடி­ப­ணி­வ­தாக அவர்கள் கரு­தி­யுள்­ளனர்.

இலங்­கையின் பெண் தற்­கொலை குண்­டு­தாரி பயங்­க­ர­வாத சூழலில் வாழ்ந்­தவர் என்­பதால் அவரைப் பற்றி எந்தவித அதிர்ச்­சியும் எனக்கு ஏற்­ப­ட­வில்லை எனத் தெரிவிக்­கின்றார் இந்­தோ­னே­சி­யாவின் சமூக உள­வியல் நிபுணர் ஒருவர். பயங்­க­ர­வா­தி­களின் மனை­விமார் குறித்த எனது ஆராய்ச்­சியின் போது பலர் தங்கள் கண­வர்களுக்குக் கீழ்­ப­ணிவை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளமை தெரிய­வந்­தது. 

சிறிய எண்­ணிக்­கை­யி­லான பெண்­களால் மாத்­தி­ரமே தங்கள் கணவர்­களின் தீவி­ர­வாத போக்கை நிரா­க­ரிக்க முடிந்­தது ஆனால் அவ்­வாறு நிராகரித்தால் அதற்கான விளைவை அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் அவர்கள் கணவர்களிடமிருந்து பிரிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்­தோ­னே­சி­யாவில் தீவி­ர­வா­த­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட பெண்கள் சிலர் தங்கள் கணவர்­க­ளி­ட­மி­ருந்து சீத­ன­மாக தற்­கொலை அங்­கி­களை கேட்­கின்­றனர் என அதிர்ச்சி தக­வலும் வெளியா­கி­யுள்­ளது. இவர்கள் திரு­ம­ணத்­திற்குப் பின்னர் தற்­கொலை குண்­டு­த்தாக்­கு­தல்­களை மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்­ளனர். இவர்­களில் பலர் கைது­ செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கடந்த மார்ச்­மாதம் இந்­தோ­னே­சி­யாவின் பல பகு­தி­களில் இவ்­வா­றான  பெண்கள் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர்.

 சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்

தமிழில் அ. ரஜீபன்.

 

http://www.virakesari.lk/article/55665

  • கருத்துக்கள உறவுகள்

 

கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கையையே ஒழுங்க்காய் அனுபவிக்க தெரியாதவர்கள் கெதியாய் சொர்க்கத்திற்கு போவதற்காய் உயிரை மாய்த்து கொண்டார்களாம் 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.