Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

21 ஆம் திகதி தாக்குதலை நடத்தியவர்கள் இந்தியாவிலிருந்தே திட்டம் வகுத்துள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி )

21 ஆம் திகதி தாக்குதலை நடத்தியவர்கள் இந்தியாவில் இருந்தே  அதிகளவில் திட்டங்களை வகுத்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் வாக்குமூலங்களில்  எட்டுப்பேர் தம்மை தற்கொலை தரிகளாக அடையாளப்படுத்தியுள்ளனர் எனவும்  இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக தெரிவித்தார். 

makesh.jpg

வடக்கு கிழக்கில் மீண்டும் இராணுவ பாதுகாப்பு வேண்டும் என கோருகின்றனர் என்றால் இராணுவம் மீதான போர்க்குற்றச்சாட்டு பொய் என்பது உறுதியாகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் சர்வதேச பயங்கரவாத நகர்வுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

தேசிய தவ்ஹித் ஜமா அத் அமைப்பு குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து தகவல் கிடைத்தது. ஆனால் இந்த அமைப்பு பயங்கரவாத அமைப்பா என்பதில் எமக்கு கேள்வி இருந்தது. சில இறுக்கமாக கொள்கைகளுடன் அவர்கள் செயற்படுவது மட்டுமே அறிவிக்கப்பட்டது. அதேபோல்  பாதுகாப்பு சபையில் இந்த விடயம் குறித்து 13 தடவைகள் பேசப்பட்டதாக என்ற எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் சில சந்தர்ப்பங்களில் நாம் இந்த விடயங்கள் குறித்து பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தெரிவித்தோம்.

ஆனால் ஆழமாக எந்த விடயங்களும் பேசப்படவில்லை. ஆனால் இந்த தாக்குதல் நடத்தப்பட சகல தரப்பினரதும் பலவீனம் காரணம் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் யார்  குற்றவாளி என்பதை என்னால் கூற முடியாது. நான் உட்பட  பாதுகாப்புபடை பிரதானிகளும் அரசியல் பிரதானிகள் என அனைவரும் இதில் குற்றவாளிகள் தான். அதனை நான் ஏற்றுகொள்கின்றேன்.  

21 ஆம் திகதி சம்பவம் இடம்பெற்றும் எமக்கு 24 ஆம் திகதி தான் இவற்றை கையாளும் அதிகாரம் வழங்கப்பட்டது. எமது புலனாய்வு தரப்பில் சில குறைபாடுகள் இருந்தது. சிறந்த சில புலனாய்வு அதிகரிகள் கைதுசெய்யப்பட்டமை புலனாய்வு செயற்பாடுகள் குறைக்கப்பட்டமை என்பன சில பின்னடைவுகளை ஏற்படுத்தியது. அதேபோல் இராணுவமாக 

எம்மால் சுயாதீனமாக செயற்பட அதிகாரம் இல்லாமையே இதற்கு காரணம். எனினும் 24 ஆம் திகதியில் இருந்து இருவரை இராணுவத்தின் செயற்பாட்டால் தான் குற்றவாளிகளை கைதுசெய்ய முடிந்துள்ளது. இதனை விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/55798

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பிழம்பு said:

வடக்கு கிழக்கில் மீண்டும் இராணுவ பாதுகாப்பு வேண்டும் என கோருகின்றனர் என்றால் இராணுவம் மீதான போர்க்குற்றச்சாட்டு பொய் என்பது உறுதியாகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஆக.. ஐ எஸ்.. அவர்களுடன் தொடர்புபட்ட.. முஸ்லீம் காங்கிரஸின் உள்ளூர் இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத அரசியல்வாதிகள்.. அவர்களுக்குச் சார்ப்பான இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகள்.. சொறீலங்கா மைத்திரி அரசு.. சொறீலங்கா அரச புலனாய்வுத்துறை.. சொறீலங்கா இராணுவம் உட்பட்ட படைகள்.. கோத்தா - மகிந்த கும்பல்.. மோடி கும்பல்.. எல்லாம் இணைந்து செய்த செயல்தான்.. உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு.

குண்டு வெடிப்பின் பின்..

மகிந்தா + கோத்தா: நடைமுறை அரசால்.. மக்களை பாதுக்காக்க முடியாது. மீண்டும் எங்களை பதவியில் அமர்த்தினால்.. பயங்கரவாதத்தை அழிந்தொழிப்போம்.

மோடி: இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு போல்.. இந்தியாவில் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால்... எமக்கு வாக்களியுங்கள்.

சொறீலங்கா இராணுவம்: வடக்குக் கிழக்கின் பாதுகாப்பை  எங்களிடம் கோரிய படியால்.. நாங்கள் போர்க்குற்றம் செய்தவர்கள் என்பது பொய்.

சொறீலங்கா புலனாய்வுத்துறை: தகவல் முன்னரே கிடைத்தது. அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தினோம். ஆனால் தாக்குதலை தடுக்க நடவடிக்கை இல்லை.

றோ: தாக்குதல் திட்டம் தீட்டப்படுவது குறித்து முன்னரே தெரியும். சொறீலங்காவை எச்சரித்தம்.

முஸ்லிம் காங்கிரஸ் இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத அரசியல்வாதிகள்: நாட்டில் இரத்த ஆறு ஓடும். பள்ளிவாசல்களில் வாள்கள் தற்பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருக்கலாம்.. மீண்டும் புலிகள் வரக்கூடும்.. அல்லது சிங்களவர்கள் தாக்கக் கூடும். சில அரசியல்வாதிகளின் பங்களிப்புக் குறித்து வெளியில் சொல்ல முடியாது. இந்த தாக்குதல் சூத்திரதாரிகளின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து தெரியும்.. ஆனால் வெளியில் சொல்ல முடியாது. அது சாணக்கியம் கிடையாது. 

ஐ எஸ்: இலங்கையில்.. புனிதப் போர். சிலுவை தூக்கிகள் 1000 பேரை சரிக்கட்டிட்டம். 350 பேர் மரணம்.. 650 பேர் காயம். 

சொறீலங்கா பொலிஸ்: உளவுத்தகவல் வந்தது. அதிகாரிகளுக்கிடையே பகிரப்பட்டும் இருந்தது. ஆனால்.. தடுக்க நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

மைத்திரி: நாட்டில் மக்கள் பிரிவினைவாதத்தை கைவிட்டு.. பயங்கரவாதத்தை முறியடிக்க என்னோடு கைகோர்க்கவும்.

இதுக்கு அப்பால்..

சொறீலங்காவின் இன அழிப்புப் போருக்கு முழு உதவியும் வழங்கி தமிழ் மக்களின் சாவை ரசித்த.. அமெரிக்க முன்னாள் தூதர் பிளேக்.. நீங்கள்.. செப் 11 இல் இருந்து அமெரிக்க மீண்டது எப்படி என்று அதில் இருந்து பாடம்படிச்சுக் கொள்ளுங்கள். ஏலவே.. செப் 11 சி ஐ ஏ.. மற்றும் அல் குவைடா கூட்டுச் சதி என்றே பேசப்படுகிறது.  

ஆக இது நன்கு திட்டமிட்டு.. தமிழ் மக்களுக்கு எதிராகவும்.. சொறீலங்காவின் மீதான படுமோசமான.. போர்க்குற்றச் சாட்டுக்களை மழுங்கடிக்கவும்.... சொறீலங்காவின் அரச பயங்கரவாதம்.. இஸ்லாமிய மதப் பயங்கரவாதம்.. ஹிந்தியாவின் பிராந்திய பயங்கரவாதம்.. அமெரிக்காவின் உலகப் பயங்கரவாதம்.. மகிந்த - கோத்தாவின் சிங்கள பெளத்த பேரினவாதப் பயங்கரவாதம்..எல்லாம் இணைந்து மேற்கொண்ட ஒரு மனித அழிவே இதுவாகும்... அப்படியான சந்தேகமே வலுவடைகிறது. 

Edited by nedukkalapoovan

10 hours ago, பிழம்பு said:

வடக்கு கிழக்கில் மீண்டும் இராணுவ பாதுகாப்பு வேண்டும் என கோருகின்றனர் என்றால் இராணுவம் மீதான போர்க்குற்றச்சாட்டு பொய் என்பது உறுதியாகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்டு மக்கள் அபிமான முன்னாள் முதல்வர் விக்கி தாக்குதலின் பின்னர் அறிவித்துவிட்டார்! அதனால போர்க்குற்றச்சாட்டு உண்மை என்டு  உறுதியாகின்றது கண்டியளோ!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.