Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசுக்கு கால அவகாசம் வழங்கிய மட்டு.விகாராதிபதி! தவறின் வீதிக்கு இறங்குவாராம்!

Featured Replies

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி , ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைககள் முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதேவேளை பாடசாலை மாணவர்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும், அரசுக்கு இரண்டு கிழமை அவகாசம் தருகின்றோம் அதனை அரசு உறுதிப்படுத்தவில்லை என்றால் நாங்கள் வீதிக்கு இறங்கவேண்டி ஏற்படும். என மட்டக்களப்பு மங்களராமய விகாரை விகாராதிபதி சுமணரத்ன தேரர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக புத்திஜீவிகள், இந்துகுருமார்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சனிக்கிழமை (11) மங்களராமய விகாரை விகாராதிபதி சுமணரத்ன தேரரைச் சந்தித்து தற்போதைய நிலமை தொடர்பாக கலந்துரையடிய பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

கடந்த 3 கிழமைகளாக நாட்டில் பாதுகாப்பு அற்ற நிலை இருப்பது நாம் அனைவரும் அறிந்த விடயம். இந்த பிரச்சனை தொடர்பாக அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வாள்கள் இல்லாமல் செய்யப்பட்டு நம்பிக்கையை உறுதிப்படுத்துமாறு வேண்டுகின்றோம்.

மீராவோடை பாடசாலையில் இருக்கின்ற அபாயகரமான நிலைமை, வவுணதீவு மற்றும் ஏனைய பிரதேசத்தில் இருக்கின்ற நிலைமை இது தொடர்பாக பொறுப்புக் கூறவேண்டிய பதவியில் இருப்பவர்கள் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புமாறு கூறுவது தொடர்பில் பெற்றோர்கள் இதனை ஏற்றுக் கொள்வதாக இல்லை.

இந்த காத்தான்குடி பிரதேசத்தில் ஸஹ்ரான் இருந்து கொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவின் அறிவுறுத்தலுக்கும் அதிகாரத்தையும் பயன்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ். குழுவை கட்டியெழுப்பியிருந்தார்.

அது மட்டுமல்ல சில சட்டத்தரணிகள் சில நீதவான்களும் அதனுடன் தொடர்பு பட்டிருக்கின்றனர். அதனை நிரூபிப்பதற்கான சாட்சி இருக்கின்றது. இது வரைக்கும் ஸஹ்ரான் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுவிப்பது எவ்வாறு?

ஆளுநர் ஏ.எல். எம். ஹிஸ்புல்லாவின் காரியாலயத்தில் துப்பாக்கி ரவைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். அது பொலிஸ் உத்தியோகத்தர் எடுத்துச் சென்ற ஆயுதங்கள் எனவும் அதனை அங்கு விட்டு விட்டு வந்ததாகவும் என கடைசியில் அதற்கு கதை ஒன்று அமைக்கின்றனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் போற, போற இடத்தில் ஆயுதங்களை விட்டு, விட்டு வரமுடியுமா? அது பாரதூரமான பிரச்சனை. ஆகையினால் அவர்களை இவ்வாறு விடுதலை செய்தது எந்த நோக்கத்துக்காக என எமக்கு தெரியாது.

ஆனால் இறுதியாக பாதிக்கப்படுவது தமிழ் மக்கள்தான். 30 வருட யுத்தத்தினால் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்த இம் மக்களுக்கு மீண்டும் துயரத்தை ஏற்படுத்துவதா?

இந்த அப்பாவி தமிழ் மக்களின் பிள்ளைகளை பலாத்தகாரமாக ஸஹ்ரான் கடத்தி கொண்டு சென்று இந்த குழுவில் இணைத்துக் கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட தாயார் தனது மகளை கடத்திக் கொண்டு சென்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கச் சென்றபோது முறைப்பாட்டை பாரம் எடுக்கவில்லை. ஆகையினால் ஸஹ்ரான் கூட்டிச் சென்ற அந்தப் பிள்ளை எங்கிருக்கின்றார். பிள்ளைகள் அங்கு எவ்வாறு சென்றார்கள் எனவும் தெரியாத நிலையில் இருக்கின்றது. இறுதியில் இந்த பெற்றோர் அபாயகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களை கைது செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான பிரச்சனைகளுக்கு பெற்றோரை தள்ளவேண்டாம் என பொறுப்புள்ள அதிகாரிகளுக்கு மதகுரு என்ற வகையில் பொறுப்புடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

இந்த நாட்டில் எல்லோருக்கும் பொதுச் சட்டம் இருக்க வேண்டும் அந்த சட்டத்தை ஓவ்வொருவருக்கும் பிரித்து வழங்கியதன் பிரதிபலன்தான் இந்த நாட்டுக்கு சட்டத்தை அவமானப்படுத்தும் விதமாக ஷரியா சட்டத்துக்கு பொருத்தமான விதத்தில் காதிச் சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

காதிச் சட்டம் யாருடைய தேவைகளுக்காக? இந்த கிழக்கு மாகாணத்தில் இயங்குகின்றது அமைச்சர் ஹக்கீம் கடந்த காலத்தில் நீதி அமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் ஷரியா சட்டத்துக்கு பொருத்தமான காதிச் சட்டம் ஆகிய முறைகளை நடைமுறைப்படுத்தி அவர்களை 125 வருடத்துக்கு அப்பால் அவர்களுடைய சந்ததியினரை இந்த நீதித் துறைக்குள் உள்வாங்கியிருக்கின்றார்.

எனவே நீதித்துறைக்குள் இடம்பெறுகின்ற எந்தவொரு செயற்பாட்டையும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு அப்பால் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே அனைவருக்கும் பொதுவான சட்டத்தை நடை முறைப்படுத்துங்கள் என அரசுக்கு மிகவும் பொறுப்புடன் இந்த விடையத்தை அறியத்தருகின்றோம்.

நிர்வாகத்துறை, அரச திணைக்களம் , நீதிமன்றங்கள் பாடசாலைகள் போன்ற அரச திணைக்களங்களில் எப்படி இஸ்லாமிய பெண்கள் உடல் முழுக்க உடையை போர்த்துக் கொண்டு உள்நுழைவது? அரசுக்கு உரித்தான ஒழுக்க ரீதியான உடைகளை உடுக்குமாறு இந்த தமிழ், சிங்கள பெண்களுக்கு சாறி , அணியுங்கள் என கூறிக் கொண்டு ஏன் இந்த முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் இந்த பௌத்த நாட்டினுள் இந்த மாதிரி ஒரு விடயத்தை அனுமதித்துள்ளனர்.

இவ்வாறான உடையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்த நாட்டிலும் இவ்வாறான தாக்குதலை செய்வதற்கு அவர்கள் முன்வந்திருக்கின்றனர் ஆகையினால் இந்த விடயம் தொடர்பாக கவனத்தை செலுத்துங்கள்,

அவசரகால மற்றும் பயங்கரவாத சட்டத்தை பயன்படுத்தி எந்த ஒருவரையும் சிறைப்படுத்தலாம். ஆனால் இந்த நாட்டுக்குள் சேதத்தை ஏற்படுத்தி வருபவர்களை கைது செய்யாது நியாயத்தை கதைக்கும் மக்களை கைது செய்வது என்பது தொடர்பாக நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் .

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் , அரசாங்க அதிபர், கல்விப் பணிப்பாளர்கள், என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக எதிர்வரும் புதன்கிழமை அறியப்படுத்த உள்ளோம் அதன் பிற்பாடு அவர்கள் சரியான தீர்வை முன்வைக்காவிடின் நாங்கள் வீதிக்கு இறங்கவேண்டி ஏற்படும்.

எல்லா வீட்டிலும் வாள்கள் கண்டு பிடிக்கப்படுகின்றன. என்னத்துக்கு வாள்? புல் வெட்டுவதற்கு எனவும் பெண்களுடைய பாதுகாப்பு எனவும் அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர். எனவே எந்த இடத்திலாவது முஸ்லிம் பெண்களை தமிழ், சிங்கள இளைஞர்கள் பலாத்காரமாக கொண்டு வந்துள்ளனரா? முடிந்தால் சொல்லுங்கள்.

ஆனால் எமது பெண்பிள்ளைகள் சிறுவயது பிள்ளைகளை முஸ்லிம் கடத்திச் சென்று மதம் மாற்றி இந்த மாதிரி ஆயுதக்குழுக்களில் இணைக்கின்றனர். காரணம் தமிழ் பிள்ளைகள் திறமைசாலிகள் அதனைக் கருத்தில் கொண்டு கடத்திச் செல்கின்றனர்.

எனவே மீண்டும் தமிழ் பிள்ளைகளை கடத்திச் சென்று குண்டுகளை கட்டிக் கொண்டு பாய்கின்ற நிலையை ஏற்படுத்த இடமளிக்க முடியாது எனவே எங்களுடைய கழுத்தை வெட்டும் வரைக்கும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. 14 அல்லது 15 நாட்களுக்குள் அரசு தீர்வை தரவில்லை எனில் நாட்டின் சட்டத்தை கையில் எடுப்போம். எனவே அனைத்து மக்களும் சமாதானமாகவும் ஓன்றாகவும் வாழும் சூழலை ஏற்படுத்தி தரவேண்டும் என்றார் அவர்.

https://www.ibctamil.com/srilanka/80/119790?ref=recommended1

  • கருத்துக்கள உறவுகள்

வீதிக்கு இறங்கி, பவித்திரா வன்னியாராச்சின் தவறுகளை கு(ஹு)த்தி காட்டுவாராம? 😂

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

வரே வா..... சுமனே IS BACK...மடை திறந்து பாயப்போகுது தூசணம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.