Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் பகுதியில் பள்ளிவாசல் இருந்ததாக போலி ஆவணங்களை காட்டி முஸ்லீம்களை குடியேற்ற திட்டம்?

Featured Replies

மட்டக்களப்பில் தமிழர்களின் பாரம்பரிய நிலமான வாகரை மாதுரங்கேணி பகுதிகளில் முஸ்லீம் மக்கள் வாழ்ந்ததாக காட்டி சுமார் 3000 குடும்பங்களை குடியேற்ற அமைச்சர் அமீரலி அவர்கள் வடகிழக்கு ஜனாதிபதி செயலனி ஊடாக அனுமதி பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த குடியேற்ற திட்டத்தை நிறைவேற்ற வாகரை மாதுரங்கேணி பகுதியில் முகைதீன் ஜிம் ஆ பள்ளிவாசல் இருந்ததாக காட்டும் போலி கடித தலைப்புடன் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

ஆனால் மாதுரங்கேணி பகுதியானது தமிழர்களின் பாரம்பரிய கிராமம் இங்கு தாங்கள் அறிந்த வகையில் எந்தவொரு பள்ளிவாசலும் இருக்கவில்லை எனவும் தமிழர்கள் யுத்தத்தில் செத்துக்கொண்டிருக்கும் போதே முஸ்லீம் அரசியல் வாதிகள் இது போன்றுபள்ளிவாசல்கள் இருந்தது போன்ற பொய்யான ஆவணங்களை தயாரித்து அரசாங்கத்தை ஏமாற்றியுள்ளனர் என மாதுரங்கேணி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை மற்றும் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுகளில் முஸ்லிம் மக்களை குடியேற்றும் கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்று ஜனாதிபதி அபிவிருத்தி செயலணிக்கு அமீர் அலி மூலமாக சமர்ப்பிக்கப்பட்டு அது குறித்த தகவல்கள் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த குடியேற்ற திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து முஸ்லிம்களும் விவசாயிகள் எனவும் அவர்கள் சேனை பயிர் செய்கை மற்றும் கால் நடை வளர்ப்புக்காக அரச காணிகளில் மூன்று அல்லது நான்கு மாதங்கள் குறித்த பகுதிகளுக்கு சென்று வந்தவர்கள் எனவும் இவர்களை குடியேற்றும் காணிகள் அரச காணிகள் எனவும் அதை அவர்கள் பரம்பரையாக வாழ்ந்து வந்த பகுதிகள் போல் ஆவணங்களை தயார் செய்து ஜனாதிபதி செயலணியை ஏமாற்றி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன் விவசாய நடவடிக்கைகளுக்காக அரசாங்க உர மாணியங்களை வழங்கிய போது தமிழ் பகுதி கமநல அமைப்புகளின் பெயர்களில் பதிந்து அதன் மூலம் குறித்த உர மாணியங்களைப் பெற்றுக் கொண்ட ஆவணங்களை வைத்துக்கொண்டு தற்போது குறித்த நிலப்பகுதியினை உரிமை கோரி வருவதாகவும் இதற்கான ஏற்பாடுகளை நீண்ட நாள் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் அமைச்சு றிசாட் பதியுதீன் ஊடாக அமீர் அலி அவர்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய ஆவணங்களுக்கு அனுமதிகளை பெற்றுக்கொண்டு தமிழர்களின் விவசாய நிலங்களை அபகரிக்க முயற்சிப்பதாக பொதுமக்கள் மேலும் குற்றம் சுமத்துகின்றனர்.

வாகரை பிரதேசத்தை பொறுத்த வரை விவசாய நடவடிக்கைக்காக கால் நடை மற்றும் காட்டு தெழில் மற்றும் குறித்த பகுதிக்கு வியாபாரத்திற்கு சென்ற வேளைகளில் தமிழர்களின் விவசாய நிலங்களை ஆயத்துக்கு எடுத்து மூன்று நான்கு மாதம் விவசாயம் செய்த காணிகளும் தமிழர்களின் சேனைகளில் முஸ்லிம்கள் காவல் காரர்களாக போய் குறிப்பிட்ட மாரிகாலத்தில் வேலை செய்து வந்த காணி களுக்கும் தற்போது காணி ஆவணம் மோசடியாக பெறப்பட்டும் ஆதாரம் அற்ற ஆவணங்களை வைத்து சில தமிழ் பேசும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் குறித்த குடியேற்றத்தை அமீர் அலி அவர்கள் மேற் கொண்டு உள்ளார் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கிரான் பிரதேசத்தில் பல அரச காணிகள் மற்றும் தமிழ் பகுதி காணிகள் ஆட்சி உறுதி மற்றும் போலி ஆவணங்கள் தாயரித்து அவை முன்னர் பதவிகளில் இருந்த அதிகாரிகளின் செல்வாக்கில் போலிகள் மறைக்கப்பட்டு தற்போது காணி களுக்கான அனுமதி மற்றும் குடியேற்றம் மேற் கொள்ள ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றது இதன் மூலம் பல தமிழ் பிரதேச எல்லை கிராமங்கள் முஸ்லிம் குடியேற்றத்திற்குள் உள்வாங்கப்படவுள்ளது.

ஜனாதிபதி அபிவிருத்தி செயலணி மற்றும் பிரதமரின் வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணி ஆகியவற்றில் அங்கத்தவராக பதவிகளை அலங்கரிக்கும் கிழக்கு மாகாண தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களின் காதுகளுக்கு அனைத்தும் நடந்து முடிந்துள்ள இந்த குடியேற்ற திட்டம் பற்றி தெரியாமல் போனதன் மர்மம் என்ன என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/120351

  • தொடங்கியவர்
1 hour ago, போல் said:

மட்டக்களப்பில் தமிழர்களின் பாரம்பரிய நிலமான வாகரை மாதுரங்கேணி பகுதிகளில் முஸ்லீம் மக்கள் வாழ்ந்ததாக காட்டி சுமார் 3000 குடும்பங்களை குடியேற்ற அமைச்சர் அமீரலி அவர்கள் வடகிழக்கு ஜனாதிபதி செயலனி ஊடாக அனுமதி பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த குடியேற்ற திட்டத்தை நிறைவேற்ற வாகரை மாதுரங்கேணி பகுதியில் முகைதீன் ஜிம் ஆ பள்ளிவாசல் இருந்ததாக காட்டும் போலி கடித தலைப்புடன் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

ஆனால் மாதுரங்கேணி பகுதியானது தமிழர்களின் பாரம்பரிய கிராமம் இங்கு தாங்கள் அறிந்த வகையில் எந்தவொரு பள்ளிவாசலும் இருக்கவில்லை எனவும் தமிழர்கள் யுத்தத்தில் செத்துக்கொண்டிருக்கும் போதே முஸ்லீம் அரசியல் வாதிகள் இது போன்றுபள்ளிவாசல்கள் இருந்தது போன்ற பொய்யான ஆவணங்களை தயாரித்து அரசாங்கத்தை ஏமாற்றியுள்ளனர் என மாதுரங்கேணி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு, கிழக்கில் முஸ்லிம்கள் போலி ஆவணங்களின் உதவியுடன் பெருமளவு கள்ளக்காணிகளை அபகரிக்கும்  சதித்திட்டங்கள் அண்மையில் ஆதாரங்களுடன் பரவலாக வெளிப்பட்டு வருகின்றன!   

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.