Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் உரிமைப் போராட்டம் நியாயமானது: பிரான்ஸில் இன்று மாபெரும் பேரணி.

Featured Replies

தமிழர்களின் உரிமைப் போராட்டம் நியாயமானது: பிரான்ஸில் இன்று மாபெரும் பேரணி.

தமிழர்கள் பயங்காரவாதிகள் அல்ல எனவும், தமிழர்களின் உரிமைப் போராட்டம் நியாயமானது என்பதை வலியுறுத்தியும், பிரான்ஸில் இன்று மாபெரும் பேரணி இடம்பெறவுள்ளது.

பிரான்ஸ் தமிழ் மாணவர் அமைப்பு ஒழுங்கு செய்துள்ள இந்தப் பேரணி, இன்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நடைபெறவுள்ளது.

தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள இன அழிப்பு நடவடிக்கைளை பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு எடுத்து விளக்குவதுடன், அனைத்துலக ரீதியாக சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் பரப்புரையை முறியடிக்கவும் இந்தப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணியை பிரான்ஸ் தமிழ் மாணவர் அமைப்பு ஒழுங்கு செய்துள்ளது.

-Pathivu-

பிரான்ஸில் கைதான சமூக தொண்டர்களின் விசாரணையைத் துரிதப்படுத்துக அல்லது விடுதலை செய்க! - கனடியத் தமிழர் பேரவை-

Written by admins - May 01, 2007 at 01:14 AM

கடந்த ஏப்ரல் மாதம் 1ம் திகதி பிரெஞ்சு மாநகர் பாரிசில் வைத்து தமிழ் மக்களின் தொண்டர்களும், சமூகத் தலைவர்களும் பிரெஞ்சுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தவேண்டும் அல்லது உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கனேடிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவ் அறிக்கையின் முழுவடிவம்

ஏப்ரல் 1ம் திகதி பிரெஞ்சு மாநகர் பாரிசில் தமிழ் மக்களின் தொண்டர்களும், சமூகத் தலைவர்களும் கைதுசெய்யப்பட்ட செய்தி கனடியத் தமிழர்கள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாம் புகுந்த நாடுகளில் வாழ்வின் நிலைக்களமாய் விளங்கும் மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரம், நீதி நியாயங்களை நாம் என்றென்றும் ஏற்றுப் போற்றி வந்துள்ளோம்.

பாரிசில் கைதுசெய்யப்பட்ட எம்மவர்கள் புரிந்த குற்றம் என்ன என்பது தெரிவிக்கப்படாமலேயே அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்.

இலங்கையில் அரச ஆதரவுடன் நிகழ்த்தப்படும் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படுவோர்க்கு மனமுவந்து தொண்டாற்றிய எம்மவரைக் கைதுசெய்வதற்கு முன்வைக்கப்பட்ட காரணங்கள் பெரிதும் ஐயுறவுக்கும் அநியாயத்துக்கும் உட்பட்டவை என்றே நாம் கருதுகிறோம்.

உலகம் முழுவதும் ஒடுக்கப்படும் மக்களின் சட்டபூர்வமான வேட்கைகளுக்காகக் குரல்கொடுப்பதில் பெயர்பெற்ற பிரான்சு, இலங்கை அரச படையினரால் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டு, ஒழிக்கப்பட்டு, தமது கிராமங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் விரட்டப்பட்ட ஓர் இனத்தவராகிய எம்மவர்கு எதிராக நடவடிக்கை எடுத்ததில் ஒரு முரண்பாடு தெரிகிறது.

சிறிலங்கா அரசு, மனித உரிமைகளை அப்பட்டமாய் மீறி, ஐ.நா, மனித உரிமை மன்றத்தின் நுண்ணாய்வுக்கும், பெயர்போன மனித உரிமை அமைப்புகளின் கண்டனத்துக்கும் உட்படும் இத்தறுவாயில் மேற்கண்டவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டமை உண்மையில் ஓர் அவப்பேறே. ஏ.எஸ்.எவ். என்னும் பிரெஞ்சு அமைப்பு இலங்கையில் ஆற்றிய அளப்பரிய தொண்டினை நாம் இத்தருணம் நன்றியுணர்வுடன் நினைவு கூருகின்றோம்.

அதன் 17 தொண்டர்கள் இலங்கை அரச படையினரால் கொல்லப்பட்டதை மறைத்து, உலகத்தை ஏமாற்றுவதற்கு இலங்கை அரசு ஆடிய நாடகத்தையும் நாம் இத்தருணம் எண்ணிப் பார்க்கிறோம். ஒரு தோல்வியடைந்த நாடாகிய இலங்கையின் அரசு அதன் சொந்த மக்களைத் தொடர்ந்தும் மிருகத்தனமான முறையில் ஒடுக்கி வருகிறது. பிரெஞ்சுக் காவல்துறையின் நடவடிக்கை, அத்தகைய ஒடுக்குமுறையை ஊக்குவிப்பதாய் அமையாது என்றே நாம் நம்புகிறோம்.

குற்றஞ்சாட்டப்பட்ட எம்மவர்க்குப் பிரெஞ்சுச் சட்ட முறைமையின்படி ஏற்புடைய சட்டதிட்ட வாய்ப்புகள் அனைத்தையும் அளித்து, சட்ட நடவடிக்கையைத் துரிதப்படுத்தும்படி அல்லது அவர்களை விடுதலை செய்து, அவர்களை நினைந்து வருந்தும் குடும்பத்தவர்களிடம் அவர்கள் மீள்வதற்கு வழிவகுக்கும்படி கனடியத் தமிழர் பேரவை பிரெஞ்சு அரசை இத்தால் வேண்டிக்கொள்கிறது. காலந்தோறும் மனித உரிமையையும் நீதி நியாயத்தையும் நிலைநிறுத்திய மரபில் எழுந்த பிரெஞ்சு அரசு இந்தப் பிரச்சனையை உரிய முறையில் அணுகி, உதவிநாடிப் பரிதவிக்கும் மக்களைப் பராமரித்த எம்மவர்க்கு நீதி வழங்கும் என்பதில் ஐயமில்லை.

கனேடிய தமிழர் பேரவை

sangkathi.com

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் புலிகளின் ஆதரவாளர்கள் 3 பேர் கைது...னைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக வந்து இருக்கின்றது.... தனியாக தலைப்பு தொடங்க அனுமதி மறுக்க பட்டதானால் இங்கே போடுகின்றேன்...மேலதிக தகவல்கள் தொடரும்...

பிரான்சில் வாழும் தமிழ் மாணவர்கள் அனைவரும் இணைந்து அண்மையில் பாரிசில் நடத்திய பேரணியை இருட்டப்புச் செய்தது போல சங்கதி இணையத்தளம் இதையும் இருட்டடிப்புச் செய்யுமா? சங்கதி இணையத் தளத்தில் ஒரு செய்தி வருவதற்கு அல்லது செய்தி ஒன்றை பிரசுரிப்பதற்கு என்ன அடிப்படை தகுதி வேண்டும் என்பதை யாராவது சொல்வீர்களா?

Edited by navam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.