Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் சோதனை சாவடிகள் அகற்றப்படாமை தொடர்பில் மக்கள் விசனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சோதனை சாவடிகள் அகற்றப்படாமை தொடர்பில் மக்கள் விசனம்

நாட்டில் உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலை தொடர்ந்து யாழில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ, பொலிஸ் சோதனை சாவடிகள் ஒரு மாத காலமாகியும் அகற்றப்படாமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

நாட்டின் ஏனைய பகுதிகளில் தற்போது சுமூகமான நிலைமைகள் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனாலும் யாழில் அமைக்கப்பட்ட சோதனை சாவடிகளில் யாழ்.வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் சோதனை சாவடி மாத்திரமே அகற்றப்பட்டுள்ளது. 

 

காரைநகர் செல்லும் வழியில் பொன்னாலை சோதனை சாவடி , தீவகத்திற்கு செல்லும் வழியில் மண்டைதீவு சந்தியில் உள்ள சோதனை சாவடி , பருத்தித்துறை செல்லும் வழியில் வல்லை சோதனை சாவடி , பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் பாடசாலைக்கு அருகில் உள்ள சோதனை சாவடி , காங்கேசன்துறைக்கு செல்லும் வழியில் மயிலிட்டி சோதனை சாவடி ஆகியவற்றில் தற்போதும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. 

குறித்த சோதனை சாவடிகள் ஊடாக செல்லும் , பஸ்களில் பயணிக்கும் மக்கள் அனைவரும் சோதனை சாவடிகளில் இறங்கி நடந்து சோதனை சாவடிக்கு செல்ல வேண்டும். அங்கு அடையாள அட்டை ,  உடல் மற்றும் கைகளில் உள்ள பொதிகளை இராணுவத்தினர் , பொலிஸார் சோதனையிட்ட பின்னர் , பஸ்ஸையும் சோதனையிட்ட பின்னரே மேற்கொண்டு அவர்கள் தமது பயணத்தை தொடர அனுமதிக்கப்படுகின்றனர். 

குறித்த சோதனை சாவடிகளில் வயது வேறுபாடின்றி அனைவரும் இறக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. அதனால் வேலைக்கு செல்வோர் , வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளிகள் என பல தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இது தொடர்பில் உரிய தரப்பினர் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கேட்டுக்கொள்கின்றனர். 

 

http://www.virakesari.lk/article/56942

 

5 hours ago, கிருபன் said:

காரைநகர் செல்லும் வழியில் பொன்னாலை சோதனை சாவடி , தீவகத்திற்கு செல்லும் வழியில் மண்டைதீவு சந்தியில் உள்ள சோதனை சாவடி , பருத்தித்துறை செல்லும் வழியில் வல்லை சோதனை சாவடி , பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் பாடசாலைக்கு அருகில் உள்ள சோதனை சாவடி , காங்கேசன்துறைக்கு செல்லும் வழியில் மயிலிட்டி சோதனை சாவடி ஆகியவற்றில் தற்போதும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. 

குறித்த சோதனை சாவடிகள் ஊடாக செல்லும் , பஸ்களில் பயணிக்கும் மக்கள் அனைவரும் சோதனை சாவடிகளில் இறங்கி நடந்து சோதனை சாவடிக்கு செல்ல வேண்டும். அங்கு அடையாள அட்டை ,  உடல் மற்றும் கைகளில் உள்ள பொதிகளை இராணுவத்தினர் , பொலிஸார் சோதனையிட்ட பின்னர் , பஸ்ஸையும் சோதனையிட்ட பின்னரே மேற்கொண்டு அவர்கள் தமது பயணத்தை தொடர அனுமதிக்கப்படுகின்றனர். 

 

குண்டு வெடித்தது கொழும்பில், மட்டக்களப்பில். குண்டுகளை வெடித்த மற்றும் உதவிய முஸ்லீம் மற்றும் அரச பயங்கரவாதிகள் வாழ்ந்தது தெற்கில், கொழும்பில், கிழக்கில். சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் முஸ்லீம் மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டது குருநாகல், குளியாபிட்டிய போன்ற பகுதிகளில்.

இந்தப் பகுதிகளில் முழுமையான வீதித்தடைச் சோதனைகள் இல்லை 1000க்கு ஓரிரு வாகனங்கள் மட்டுமே சோதிக்கப்படுகின்றன.

ஆனால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தமிழர்கள் அனைவரும் கடந்த 3 கிழமைகளாக 3 முதல் 5 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். அதுவும் வடமாகாணத்தில் மட்டும் 2 - 4 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

அதுபோலவே கொழும்பிலிருந்து தலைமன்னார் செல்லும் தமிழர்கள் கடந்த 3 கிழமைகளாக 4 முதல் 6 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். அதுவும் வடமாகாணத்தில் மட்டும் 3 - 5 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

இதில் வடக்குக்கு சுற்றுலா செல்லும் சிங்கள-பௌத்தர்கள் எந்தவொரு இடத்திலும் இறக்கப்படுவதும் இல்லை, சோதிக்கப்படுவதும் இல்லை.

தமிழர் மீதான சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் மிக அப்பட்டமான சித்திரவதையை இதுவரை எந்தவொரு தமிழ்  அரசியல்வாதிகளும், பிரதிநிதிகளும் கண்டிக்கவில்லை, நிறுத்தவில்லை. வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் தமிழர் மீதான இந்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் மிக அப்பட்டமான சித்திரவதையை இதுவரை கண்டும் காணாமல்  உள்ளனர்.  இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அனுபவித்தபடி உள்ளனர்! சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் எவ்வளவு கீழ்த்தரமான, மிகமிக மோசமான அரசியல்வாதிகள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள்  தேவையில்லை.

சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் தமிழர் நலனில் கொஞ்சமும் உண்மையான அக்கறை இல்லாத அரசியல்வாதிகள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள்  தேவையில்லை.

அத்துடன் இந்த சம்பவங்களும் தமிழர்களுக்கு சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் நீதித்துறை எந்தவொரு நீதி நியாயத்தையும் வழங்காது என்பதற்கு மேலும் ஆதாரமாகும்!

சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் நீதித்துறை சிங்கள-பௌத்த இனமதவெறியர்களுக்கும் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளுக்கும் சார்பாகவே எப்போதும் செயற்படுமே தவிர பாதிக்கப்பட்ட சிங்கள-பௌத்தர் அல்லாதவர்களுக்கு எந்தவொரு நீதியையும் பெற்றுக்கொடுக்காது!

இவை அனைத்துமே தமிழர்களுக்கு தமிழீழ தனிநாடே ஒரேயொரு குறைந்தபட்ச தீர்வாக அமையும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

யாழில் சோதனை சாவடிகள் அகற்றப்படாமை தொடர்பில் மக்கள் விசனம்

நாட்டில் உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலை தொடர்ந்து யாழில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ, பொலிஸ் சோதனை சாவடிகள் ஒரு மாத காலமாகியும் அகற்றப்படாமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

நாட்டின் ஏனைய பகுதிகளில் தற்போது சுமூகமான நிலைமைகள் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனாலும் யாழில் அமைக்கப்பட்ட சோதனை சாவடிகளில் யாழ்.வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் சோதனை சாவடி மாத்திரமே அகற்றப்பட்டுள்ளது. 

 

காரைநகர் செல்லும் வழியில் பொன்னாலை சோதனை சாவடி , தீவகத்திற்கு செல்லும் வழியில் மண்டைதீவு சந்தியில் உள்ள சோதனை சாவடி , பருத்தித்துறை செல்லும் வழியில் வல்லை சோதனை சாவடி , பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் பாடசாலைக்கு அருகில் உள்ள சோதனை சாவடி , காங்கேசன்துறைக்கு செல்லும் வழியில் மயிலிட்டி சோதனை சாவடி ஆகியவற்றில் தற்போதும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. 

குறித்த சோதனை சாவடிகள் ஊடாக செல்லும் , பஸ்களில் பயணிக்கும் மக்கள் அனைவரும் சோதனை சாவடிகளில் இறங்கி நடந்து சோதனை சாவடிக்கு செல்ல வேண்டும். அங்கு அடையாள அட்டை ,  உடல் மற்றும் கைகளில் உள்ள பொதிகளை இராணுவத்தினர் , பொலிஸார் சோதனையிட்ட பின்னர் , பஸ்ஸையும் சோதனையிட்ட பின்னரே மேற்கொண்டு அவர்கள் தமது பயணத்தை தொடர அனுமதிக்கப்படுகின்றனர். 

குறித்த சோதனை சாவடிகளில் வயது வேறுபாடின்றி அனைவரும் இறக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. அதனால் வேலைக்கு செல்வோர் , வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளிகள் என பல தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இது தொடர்பில் உரிய தரப்பினர் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கேட்டுக்கொள்கின்றனர். 

 

http://www.virakesari.lk/article/56942

 

நான் நினைக்கிறன் பழைய நினவில் இருக்கிறாங்கள் போல் உள்ளது எதுக்கும் கூப்பிட்டு நல்ல சிங்களம் தெரிஞ்ச ஆளை விட்டு சத்தமாய் காதுக்கு கிட்ட போய்   சொல்லி வையுங்கோ பிரச்சனை கொழும்பிலும் மட்டகளப்பிலும்தான் என்று. பிறகு காம்புக்குள் பணம்காய் விழ வெள்ளைகொடியோடு தெற்கு நோக்கி ஒடபோரங்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.