Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள்: சர்வதேச விசாரணைக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு!

Featured Replies

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை காரணம் காட்டி முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகளுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை இன வன்முறைகளில் ஈடுபட்டவர்களை பிணையில் விடுத்த நடவடிக்கையையும் கண்டித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் இலங்கை நீதித்துறையால் ஒருபோதும் முறையான நீதி விசாரணைகள் இடம்பெறாத என்பதை மீண்டும் நிரூபித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள் தமிழ் மக்கள் பேரவை, இதனால் முஸ்லீம்கள் மீதான இன வன்முறைகள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து இலங்கையில் வாழும் சிறுபான்மையின சமூகங்களில் ஒன்றான முஸ்லீம்கள் முழுமையாக ஓரம்கட்டப்பட்டு வருகின்றனர். குறிப்பாக முஸ்லீம்களின் வர்த்தக நிலையங்கள், உணவகங்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன், நாடு தழுவிய ரீதியில் முஸ்லீம்கள் அனைவரும் சந்தேகக் கண்கொண்டே பார்க்கப்படுகின்றனர்.

எனினும் முஸ்லீம்கள் அனைவரையும் தீவிரவாதிகளைப் போல் பார்க்க வேண்டாம் என்று வலியுறுத்திவரும் சிறிலங்கா அரச தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் படைத் தரப்பினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய ஆமைப்பினர் தொடர்பான அனைத்து தகவல்களையும் முஸ்லீம் சமூகமே பாதுகாப்புப் படையினருக்கு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்புத் தேடுதல்கள், கைதுகள் காரணமாக அச்சத்திற்குள் தள்ளப்பட்டுள்ள முஸ்லீம் சமூகம், அப்பாவிகள் பலரும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றது.

குறிப்பாக பாதுகாப்புப் படையினரால் இதுவரை 3000 க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் அமைச்சர்கள் பகிரங்கமாக அறிவித்தும் உள்ளனர்.

இந்த நிலையில் முஸ்லீம்களை இலக்கு வைத்து வட மேல் மாகாணத்திலும், கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட நகரிலும் மே மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகளுடன் தொடர்புடையதாக கூறி பொலிசாரினால் கைதுசெய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் கடும் ஆத்திரம் வெளியிட்டுள்ள வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் இணைத் தலைவராக இருக்கும் தமிழ் மக்கள் பேரவை, முஸ்லீம்களுக்கு எதிராக கொடூரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/121326?ref=home-imp-parsely

  • தொடங்கியவர்

முதலமைச்சர் பதவி முடிந்ததும் "தமிழ் மக்கள் கூட்டணி" என்ற புதிய கட்சியை ஆரம்பித்த விக்னேஸ்வரன் அதை வளர்ப்பதை விட்டுவிட்டு தமிழினப் படுகொலைகாரக் கும்பல்களின் பின்னால் எலும்புத் துண்டுக்கு பின்னால் அலைந்த நாய் போல அலைவதை கடந்த சில மாதங்களாக காணக் கூடியதாக இருந்தது!

அண்மைக் காலமாக தமிழர் பிரச்சினைகளுக்குரிய தீர்வை நோக்கிய நகர்வுகளை முன்னெடுப்பதை மறந்த விக்னேஸ்வரன், சில தசாப்தங்களாக தமிழினப் படுகொலைகளுக்கு பெருந்துணை போன முஸ்லீம் காடையர்களுக்கு வக்காலத்து வாங்கும் போக்கினை அவரது மட்டக்களப்பு பயணங்களின் போதும், இந்த அறிக்கையிலும் காணக்கூடியதாக இருக்கிறது! இந்த முஸ்லீம் கும்பல் எக்காலத்திலும் தமிழர் நலனுக்கு சார்பாக இருக்காது என்பது வரலாறு! இதை மறந்து விக்னேஸ்வரன் கூத்தாடுவது நல்லதல்ல.

அண்மைக் காலமாக தமிழர் பிரச்சினைகளுக்குரிய தீர்வை நோக்கிய நகர்வுகளை முன்னெடுப்பதை மறந்த விக்னேஸ்வரன், சில தசாப்தங்களாக தமிழினப் படுகொலைகளுக்கு பெருந்துணை போன இந்தியப் பயங்கரவாதிகளின் நலன்கள் பற்றி அக்கறையாக பேசத் தலைப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது! இந்த இந்த ஹிந்திய பயங்கரவாதக் கும்பல் எக்காலத்திலும் ஈழத் தமிழர் நலனுக்கு சார்பாக மட்டுமல்ல தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் சார்பாக இருக்காது என்பது வரலாறு! தமிழினத்தை மெல்ல மெல்ல அழிப்பதே ஹிந்திய அரச பயங்கரவாதக் கும்பலின் ஒரே நோக்கம் என்பதுவும் வரலாறு! இவற்றையெல்லாம் மறந்து விக்னேஸ்வரன் கூத்தாடுவது நல்லதல்ல.

தமிழரின் நலன்களை பின்னுக்குத்தள்ளி, உண்மைகளை மறைத்து, இராஜதந்திரம் என்ற போலித்தனத்தை வரிந்துகட்டி, சுயபுகழ் தேடுவதிலும் அறிக்கைகள் மூலம் காலத்தைக் கடத்தும் சாக்கடை அரசியலினுள் விக்னேஸ்வரன் சிக்கி வருவதை இவரின் அண்மைக்கால நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

சுயலாபங்களுக்காக தமிழர்களின் நலன்களை விலைபேசிய கடத்தல் கொலைகளில் கைதேர்ந்த காடையன் டக்ளஸ் தேவானந்தா, சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஆனந்தசங்கரி, சம்மந்தன்,  மாவை, சுமந்திரன் போன்றவர்களும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான வேறுபாடுகள் குறைந்து வருகின்றமையை தமிழ் மக்கள் கவனிக்காமல் இல்லை!

அரசியல் கத்துக் குட்டியான விக்னேஸ்வரன்  "தமிழ் மக்கள் கூட்டணி" என்ற புதிய கட்சியை தொடக்கி தமிழினப் படுகொலைகாரகளான முஸ்லீம் காடையர்களின் கூட்டணி போல அவர்களின் நலன்களை அக்கறையுடன் கதைப்பதையும், தமிழினப் படுகொலைகாரகளான ஹிந்தியப் பயங்கரவாதிகளின் கூட்டணி போல அவர்களின் நலன்களை அக்கறையுடன் கதைப்பதையும் எந்தவொரு தமிழனும் இரசிக்கப் போவதில்லை!

அரசியல் கத்துக் குட்டியான விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் பேராதரவை துஸ்பிரயோகம் செய்யத் தொடங்கியுள்ளமையை இன்னமும் அவர் தொடர்வாரானால் அது  அவரை படுகுழியில் விரைவில் தள்ளிவிடும்!  

விக்னேஸ்வரனிடம் தமிழ் மக்கள் எதிர்பார்த்தது, அவர் அனாவசியமாக அலம்பாமல் புலம்பாமல் தமிழருக்கு தேவையான மாற்றுத் தலைமையை அமைதியாக கட்டியெழுப்பும் பொறுப்பையே! இதை மறந்து தமிழ் மக்களின் பேராதரவை துஸ்பிரயோகம் செய்தபடி தமிழினப் படுகொலைகாரர்களின் நலன்களை போற்றுவாராயின் சம்மந்தன்-சுமந்திரன்-மாவை கும்பலுக்கும் விக்னேஸ்வரனுக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் போய்விடும்! 

  • கருத்துக்கள உறவுகள்

தன்னைக் கொண்டு போக .....ஏலாத  மூஞ்சூறு.....விளக்குமாத்தையும்....சேர்ந்து....காவ வெளிக்கிடுகிறது எண்டு இதைதான் சொல்லிறது போல....!

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களுக்கு... தங்களை பாதுகாத்துக் கொள்ளத் தெரியும்.
தமிழர்களாகிய நீங்கள், உங்கள்  மக்களை பாதுகாக்கின்ற வழியை பாருங்கோ.....
கொஞ்சம் என்றால்... அறிக்கை விட்டுக்  கொண்டு, 
தாங்களும் இருக்கிறம் என்று காட்ட வந்திடுவார்கள். 🤬

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.