Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்‌ஷ சகோதரர்களை பாதுகாக்கும் சுவரொட்டிகள்

Featured Replies

[ராஜபக்‌ஷ சகோதரர்களை பாதுகாக்கும் சுவரொட்டிகள்

இராணுவத்தின் சீருடையை அணிந்தவர்கள் தலைநகரில் ராஜபக்ஷ சகோதரர்களை பாதுகாப்பதற்கான சுவரொட்டிகளை ஒட்டி வருவதாகத் தெரிவித்த கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இவர்கள் உண்மையிலேயே படை வீரர்களாக இருப்பார்களானால் ராஜபக்‌ஷ சகோதரர்களுக்காக கூஜா தூக்காமல் தேசத்தின் பாதுகாப்புக்காகப் பாடுபட முன்வருமாறு கோரிக்கை விடுத்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனை அவர் குறிப்பிட்டார்.

லக்ஷ்மன் கிரியெல்ல தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது;

"கடந்த சில தினங்களாக தலைநகரில் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் கோதபாய ராஜபக்‌ஷவை பாதுகாப்போம் என்ற கருத்துப்பட பல்வேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இரவு நேரத்தில் இந்த சுவரொட்டிகளை இராணுவச் சீருடை அணிந்தவர்களே ஒட்டி வருகின்றனர். பொலிஸார், பாதுகாப்புத் தரப்பினர்கள் நடமாடக்கூடிய முக்கிய இடங்களில் கூட இந்த சீருடை தரித்தவர்கள் சுவரொட்டிகளை ஒட்டுவதால் இவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்றே கருத முடிகிறது.

நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாத பாதுகாப்புச் செயலாளரை பாதுகாக்க என்ன அவசியம் இவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது எனக்கேட்க விரும்புகின்றோம். இந்த அரசு பதவிக்கு வந்தபின்னர் இதுவரையில் 4500 பேர் பலியாகியுள்ளனர். வடக்கு - கிழக்கில் மூன்று இலட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 54 பேர் கடத்தப்பட்டுள்ளனர். சட்டத்தின் பேரால் காட்டுத்தர்பார் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசு தொடர்ந்து மௌனம் சாதித்துக் கொண்டிருக்கின்றது. ராஜபக்‌ஷ குடும்பம் நாடு பாதுகாக்கப்படுவதாக கூச்சல் போடுகின்றார்கள். முன்னொரு போதுமில்லாத விதத்தில் நாடு பேரழிவு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. யாருக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று புரியாத அச்சச்சூழல் தொடர்கின்றது. இதுதான் நாட்டை பாதுகாக்கும் இலட்சணமா எனக் கேட்கின்றோம்.

ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கு மட்டும் தான் நாட்டுப்பற்று இருப்பதாக இவர்கள் கருதுகின்றனரா? ஏன் இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு மகனுக்கும் நாட்டின் மீது பற்று இருக்கின்றது என்பதை மறந்து பேச முனையக்கூடாது. ஜனாதிபதித் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி மூன்று மாதங்களில் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தால் இன்றைய அவல நிலை ஏற்பட்டிருக்குமா? மக்களை ஏமாற்றுவதற்காக பொய் வாக்குறுதியை அளித்ததன் காரணமாக இன்று நாடு பேரழிவுக்குள் தள்ளப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கா விமானப் படைமுகாம், பலாலி விமானப் படைத் தளம் போன்றவற்றின் மீது விடுதலைப் புலிகள் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். அதனை முறியடிக்க முடியாத, பதிலடி கொடுக்க முடியாதவர்கள் உண்மையை மறைக்க பொய்க்கு மேல் பொய் கூறிக் கொண்டிருக்கின்றனர். படைத்தரப்பின் பலம் இன்று நன்கு புலப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையில் கோதபாய ராஜபக்ஷவின் செயற்பாடுகளும் முயற்சிகளும் தோல்வி கண்டுள்ளன. இதற்காகவா அவரது பாதுகாப்பை பலப்படுத்த எண்ணுகின்றனர். தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் கோதபாய ராஜபக்ஷ மனச்சாட்சிப் படி பதவி விலக வேண்டும். அவர் தாமாக விலகத் தயாராக இல்லை என்பதையே இந்த சுவரொட்டி நாடகம் புலப்படுத்துகின்றது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிலைமைகள் குறித்து கலந்துரையாட எமது கட்சி பிரதமரிடம் சந்தர்ப்பம் கேட்டது. பிரதமரும் கடந்த திங்கட்கிழமை பேச்சுக்கு வருமாறு நேரம் ஒதுக்கித் தந்திருந்தார். ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்குச் சில மணி நேரத்துக்கு முன்னர் சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலகத்திலிருந்து அறிவிக்கப்பட்டது. அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

மக்கள் முன்பாக எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பைக் கோருகின்ற அரசாங்கம் மறைமுகமாக பலம் வாய்ந்த எதிர்க்கட்சியை ஓரங்கட்டி வருகின்றது. 60 பேர் ஒத்துழைக்க முன்வந்த போது அது தேவையில்லை தமது தாளத்துக்கு ஆடும் 17 பேருக்கு அமைச்சுப் பதவி எலும்புத் துண்டைப் போட்டு அணைத்துக் கொண்டுள்ளது."

தினக்குரல்

Edited by வானவில்

  • தொடங்கியவர்

கந்தப்பு அந்த செய்தியை அகற்றி விட்டு வேறொரு செய்தி பதிந்துள்ளேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.