Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனைக்கு ஒரு இலட்சம் அபராதம்! – கடும் நடைமுறை அமுல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Plastic-in-tamil-nadu.jpg

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனைக்கு ஒரு இலட்சம் அபராதம்! – கடும் நடைமுறை அமுல்

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடும் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரச தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி முதலாம் திகதி, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் விற்கவும் அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதாக முறைப்பாடு எழுந்த நிலையில் இந்த அபராதம் விதிக்கும் நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது.

இதற்காகவென்றே சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள், சேமித்து வைப்பவர்கள், வணிக ரீதியாக பயன்படுத்தும் வியாபாரிகள், பொதுமக்கள் என ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து முதன்முறை பிடிப்பட்டால் 25 ஆயிரமும், இரண்டாவது முறை ஐம்பதாயிரமும், மூன்றாவது முறை சிக்கினால் ஒரு இலட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்படவுள்ளது. நான்காவது முறையாக பிடிபட்டால், விற்பனை செய்பவரின் கடை உரிமம் இரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுமக்களுக்கு, அதிகாரிகள் வீடுகளில் சோதனை செய்யும்போது பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைத்தால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/தமிழகத்தில்-பிளாஸ்டிக்-வ/

  • கருத்துக்கள உறவுகள்

மகி நூடில்ஸ் பைக்கட் பிளாஸ்ரிக் தானே என்ன நடக்குது என்று பார்ப்பம் இந்த விடயத்தில் தமிழக கூனல் அரசு கொடுக்கு கட்டுது என்றால் யாரோ பிஜேபி க்கு வேண்டாதவன் பிளாஸ்ரிக் வியாபாரம் செய்கிறான் என்று அர்த்தம் . தண்ணியில்லாமல் சென்னயே காலியாகி கொண்டுருக்கும் நிலையில் பழிவாங்கும் படலம் மட்டும் குறைவில்லாமல் தொடருது போல் உள்ளது .

சுற்றுச்சூழல், தண்ணீர், சுத்தமான வாயு, நெகிழி பாவிப்பு, உணவு பாதுகாப்பு, மொழி அடையாளம் : இவை  பற்றி  பாடசாலைகளில் பாடத்தின் திட்டமாக்கலில் இணைக்கப்படல் வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.