Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"த.தே.கூ.வினர் இனிமேலும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தமிழ் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்"

Featured Replies

தமிழ் மக்களின்  உரிமை சார்ந்த மற்றும் நலன்களை பெற்றுக்கொள்ள  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனியாவது தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தமிழ் மக்களும் வரலாறும் அவர்களை மன்னிக்காது என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். 

தமிழினப் படுகொலை குறித்த சர்வதேச விசாரணை நடத்துவது இறைமையைப் பாதிக்கும் எனக் கூறும் அரசாங்கம், ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு மாத்திரம் எவ்வாறு சர்வதேச நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்கியது என்றும் அவர் சபையில்  கேள்வியெழுப்பினார். 

வடக்கிலும், கிழக்கிலும் அரசாங்க படைகளாலும், பல்வேறு அரச நிறுவனங்களாலும் சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீட்பதற்கே அகிம்சைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2009ஆம் ஆண்டு இதற்கான போராட்டங்கள் முடிவடைந்தபோதும் மக்களின் பிரச்சினைகள் தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.  தொல்பொருள் திணைக்களம் எனப் பல நிறுவனங்கள் மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதற்காக செயற்படுகின்றன. வடக்கில் தொல்பொருள் திணைக்களம் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் மற்றும் ஆலயங்களுக்கான காணிகளை சுவீகரித்து வருகிறது. இதன் நிர்வாகக் குழுவில் 32 சிங்களவர்களே இருக்கின்றனர். வடக்கில் 837 இடங்கள் இத்திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. யுத்த காலத்திலும், யுத்தத்தின் பின்னரும் வடக்கில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அரசாங்க படைகளிலிருந்து மீட்டெடுக்கவேண்டிய பொறுப்பு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது.

குறிப்பாக அரசாங்கத்தை பாதுகாத்துக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் நலன்சார்ந்த விடயங்கள், நிலங்களை மீட்பதுபோன்ற உரிமைசார்ந்த விடயங்களுக்காக அரசாங்கத்துடன் பேரம்பேசும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்துக்காக தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்த, தமிழர்களின் வாக்குகளில் தெரிவான கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவிடயத்தில் பேரம்பேசவில்லையாயின் வரலாறும், தமிழ் மக்களும் அவர்களை மன்னிக்க மாட்டார்கள் என்றும் இதன்போது குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/58607

  • தொடங்கியவர்

யாழ்.பல்கலைக்கழகத்தை தாரைவார்த்து விடாதீர்கள் !

தமிழினத்தை நசுக்குவதும் அடக்குவதும் எங்ஙனம் என்பது பற்றியே ஏனைய இனங்கள் சிந்திக்கின்றன.

முப்பது ஆண்டு காலயுத்தத்தில் தமிழினம் சின்னாபின்னப்பட்டு சிதறுண்டு போக, அந்தக் கால இடைவெளிக்குள் தமிழர்களின் நிலத்தை, அவர்களின் வாழ்விடத்தைக் கபளீகரம் செய் கின்ற சதிவேலையில் ஏனைய இனங்கள் ஈடுபட்டன.

எங்கள் கெடு காலமும் சில நாடுகளின் சதித்தனமும் சேர்ந்து தமிழர்களின் மண் மீட்புப் போராட்டம் தோற்கடிக்கப்பட, யாருமற்ற அநாதையாய் தமிழ் மக்கள் நடுத்தெருவில் நிற்கின்ற பரிதாபத்துக்கு ஆளாகினர்.

கிழக்கில் தமிழர்களின் மண் பறிபோகிறது. வன்னியில் சட்டவிரோதச் சிங்களக் குடியேற் றம் நடந்தாகிறது.

எஞ்சி இருக்கின்ற விளைநிலங்கள் இராணுவ ஆக்கிரமிப்பில் பறிபோய்விட, இப்போது தமிழர் தாயகம் குறுகிக் கொள்கிறது.

இந்தக் கொடுமையில் இருந்து மீள முடியவில்லையே என்ற ஏக்கம் மிகுந்திருக்க; இப் போது வட மாகாணத்தில் இருக்கக்கூடிய அரச நிறுவனங்களில் சிங்கள முஸ்லிம் தரப் புக்கு நியமனம் வழங்கி அவர்களை வடக்குக்கு அனுப்பி வைக்கின்ற நீசத்தனம் நடந்த வண்ணமுள்ளன.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் வேலையின்றி வெறுப்படைந்திரு க்க, இங்கிருக்கின்ற அரச அமைப்புகளில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம் தரப்புக்குமே வேலைவாய்ப்பு என்றால் தமிழ் இளைஞர் யுவதிகள் என்னதான் செய்ய முடியும்.

இத்தகைய கொடுமைத்தனங்கள் கண்டும் நம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மெளன மாகவே இருக்கின்றனர்.

சிலவேளைகளில் வடபகுதியில் நடக்கின்ற நியமனங்கள் கூட இவர்களுக்குத் தெரியுமா? என்று ஐயுற வேண்டியுள்ளது.

ஆம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கென தற்போது நடைபெறவுள்ள கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கான நியமனத்தில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் தரப்பினர் என்ற தகவல் எங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் பறிபோகிறது என்பதைத் தான் கட்டியம் சொல்லி நிற்கிறது.

விஞ்ஞான பீடத்தில், சித்த மருத்துவத்தில், சட்டத்துறையில் என எல்லாவற்றிலும் தமிழ் மாணவர்கள் குறைந்து, ஏனைய இனத்தவர் கள் அதிகரித்து நிற்க, தற்போது யாழ். பல்கலைக்கழக கல்விசாரா உத்தியோகத்தர்களையும் சிங்கள, முஸ்லிம் தரப்பாக்கி விடு கின்ற சதித்திட்டம் நடக்கிறது.

இது கண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் மெளனம் காத்தால் அது தமிழினத் துக்குச் செய்கின்ற மிகப் பெரும் துரோகத்தனமாகும்.

எனவே அரசியல் நியமனங்களாயினும் நடப்பது நம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் என்பதால் எங்கள் எதிர்ப்பு வலுவாக இருக்க வேண்டும்.

http://valampurii.lk/valampurii/content.php?id=18803&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.