Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மின்சார சபை 100,000 மில்லியன் ரூபாய் நட்டத்தில் இயங்குகின்றது’

Featured Replies

இலங்கை மின்சார சபை 100,000 மில்லியன்  ரூபாய் நட்டத்தில் இயங்குவதாக, மின்சக்தி அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிக விலைக்கு மின் உற்பத்தி செய்யப்படுவதால், மின்சார சபை இவ்வாறு நட்டத்தில் இயங்குவதாக, அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 இலங்கை மின்சார சபை இன்று 100,000 மில்லியன்  ரூபாய் நட்டத்தை அடைந்துள்ளதாகவும் இந்த நிலைமையை மாற்றி, இந்த 100,000 மில்லியன்  ரூபாய் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு, சுயதொழிலை ஊக்குவிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் இதற்கு முன்னர் எடுத்த தீர்மானங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமையின்  பிரதிபலனே இன்று இந்த நாடு அனுபவிக்க நேர்ந்துள்ளதென தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கை-மின்சார-சபை-நட்டத்தில்-இயங்குகின்றது/175-234544

நட்டம் (?) 100000 மில்லியன்கள் ரூபாய் = 100 000 000 000 ரூபாய்கள் !

813720810.00 ஆஸ்திரேலிய டாலர்கள்  / 497394050.00 யூரோக்கள்  / 445162010.00 பவுண்கள்

  • தொடங்கியவர்

மின்சார அலகொன்றின் விலை அதிகரிப்புக்கான  அரசாங்கத்தின் முயற்சி முறியடிக்கப்படும் - மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கம் 

இலங்கை மின்சாரசபையின் பத்தாயிரம் கோடி ரூபா இழப்பை ஈடுசெய்வதற்காக மின்சார அலகு ஒன்றை 7 ரூபாவால் அதிகரிக்கும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் திட்டம் முறியடிக்கப்படும் என்று மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கம் தெரிவித்தது. 

ஜனநாயக  முன்னணியின்  காரியாலயத்தில்  நேற்று  புதன்கிழமை  இடம் பெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பின்போது  கருத்து  தெரிவித்த மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கத்தின்  ஒருங்கிணைப்பாளர்  கே.எச். சஞ்சீவ  தம்மிக்க  கூறியதாவது  ,  

இலங்கை மின்சாரசபை பத்தாயிரம் கோடி ரூபா இழப்பை சந்தித்து வருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த இழப்பை ஈடுசெய்வதற்காக மின்சார கட்டணத்தை ஒரு அலகுக்கு சுமார் ரூ 10 ரூபா வரை அதிகரிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளையே மின்சாரத்துறை அமைச்சு மேற்கொண்டு வருகிறது. 

2016 ஆம் ஆண்டிலிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்தமை காரணமாகவே மின்சாரசபை இந்த  இழப்பைச் சந்தித்துள்ளது. தனியார் துறையினரிடமிருந்து 40 ரூபா என்ற அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதால் மின்சார சபைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த விடயமே. 

இலங்கை மின்சாரச் சட்டத்தின்படி, மின்சாரம் வாங்கும்போது டெண்டர் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். ஆனால்  முறைப்படி செயற்படாமல் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றது. ஊழல் மோசடி தொடர்பாக நாம் வெளிப்படையாவே லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளோம்.

இவ்வாறாக மின்சாரக்கட்டணத்தில்   அதிகரிப்பு  ஏற்படுமாயின்  மின்சார பாவனையாளர்கள்  பாரிய  நெருக்கடியை  சந்திக்க  நேரிடும்.  இது தொடர்பில்  மின்சார  பாவனையாளர்களை  தெளிவுபடுத்த வேண்டியமை  அவசியமாகும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  

இலங்கை  மின்சார சபை  100  மெகாவோல்ட்  மின்சாரப்பற்றாக்குறையை  சந்தித்துள்ளதாக  மின்வலுத்துறை  அமைச்சர்  ரவிகருணாநாயக்க  தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில்  , துருக்கிநாட்டு  கப்பலிலிருந்து  மின்சாரத்தை  கொள்வனவு  செய்யவதற்கான விலைமனுகோரப்பட்டதையடுத்து , தற்போது  200 மெகாவோல்ட்  மின்சார  தட்டுப்பாடு நிலவுவதாக  அறிவித்திருந்தார்.  பின்னர்  470 மெகாவோல்ட்  மின்சார  தட்டுப்பாடு நிலவுவதாக மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் , பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 100 மெகாவோல்ட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான அனுமதியையே  வழங்கியுள்ளது.  இருப்பினும்  100 மெகாவோல்ட்டிற்கும்   அதிகமான  அளவு  மின்சாரத்தை கொள்வனவு  செய்வதற்கான  நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ளனர் .  இவ்வாறான செயற்பாடுகளின் விளைவாக அலகிற்கு  7ரூபாவால்  மின்சார கட்டணம்  அதிகரிக்கும்  நிலை  ஏற்படும் . இவ்வகையான நடவடிக்கைகளையும்  மின்வலு  அமைச்சு  மேற்கொண்டு  வருகின்றது. 

2016 ஆம்  ஆண்டிலிருந்து  அதிக விலைக்கு  மின்சாரத்தை  கொள்வனவு  செய்தமையின் காரணமாகவே மின்சார சபைக்கு 10 ஆயிரம் கோடி  ரூபாய்  நட்டத்தை   சந்திக்க  வேண்டிய  நிலை  ஏற்பட்டுள்ளது. எவ்வாறெனில்  தனியார்  துறையினரிடத்திலிருந்து  40 ரூபாவிற்கு  அதிக  பெறுமதியில்  மின்சாரத்தை  கொள்வனவு  செய்துள்ளனர்.  இலங்கை  மின்சார  சட்டத்திற்கு  அமைய  ஒப்பந்த  முறையினூடாகவே  மின்சார  கொள்வனவுகளை  மேற்கொள்ள  முடியும்.  மாறாக  இந்த  ஒப்பந்தமுறைமையை  பின்பற்றாமல்  செயற்படுகின்றமையே   அதற்கு  காரணமாகும். இவ்வாறாக  மின்சார  சபையில் இடம் பெறும்  ஊழல் தொடர்பில்  இலஞ்ச  ஊழல்  ஆணைக்குழுவில்  முறைப்பாடு  செய்துள்ளோம்.  

மின்சார சட்டத்திற்கு  அமைய  மின்சாரத்தை  கொள்வனவு  செய்வதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம்  இலங்கை  பொதுப்பயன்பாடுகள்  ஆணைக்குழுவிற்கே  உள்ளது.  இந்த நிலையில்  2016 ஆம்  ஆண்டிலிருந்து  அதிக  விலையில்  கொள்வனவு செய்யப்பட  மின்சாரத்திற்கான  அனுமதியை  பொதுப்பயன்பாடுகள்  ஆணைக்குழு  வழங்கியிருக்கவில்லை. இருப்பினும்  ஆணைக்குழுவின்  அனுமதியின்றி  மின்சாரக்கொள்வனவுகள்  இடம் பெற்றுள்ளன என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/59132

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6/24/2019 at 6:26 PM, ampanai said:

இலங்கை மின்சார சபை 100,000 மில்லியன்  ரூபாய் நட்டத்தில் இயங்குவதாக, மின்சக்தி அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசுக்கு சொந்தமானது எது லாபத்திலை ஓடுது?
கவுண்மேந்திலை இருக்குறதுகள் முழுக்க கள்ளர் கூட்டம். எப்பிடி லாபம் வரும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.