Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்மாதிரியை பின்பற்ற ஜனாதிபதி ராஜபக்ஷ முன்வருவாரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்மாதிரியை பின்பற்ற ஜனாதிபதி ராஜபக்ஷ முன்வருவாரா?

[28 - April - 2007]

உலகக் கிண்ணத்திற்கான ஒன்பதாவது சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று பாபடோசில் நடைபெற இருக்கின்றது. இதில் இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் களத்தில் இறங்குகின்றன. இலங்கை அணியை உற்சாகப்படுத்தி வெற்றி பெறச் செய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே நேரில் அங்கு சென்றுள்ளார். அத்துடன் பல அமைச்சர்கள், அதிகாரிகள், பிரமுகர்கள், விளையாட்டுத் துறை அமைச்சின் செலவில் அங்கு ரசிகர்களாகச் சென்றுள்ளனர். இலங்கையின் அரசியல் ஆடுகளம், பிரச்சினைகள் நிறைந்து எதிர்விளைவுகள் மேலோங்கி சாதகமற்ற நிலையில் இருந்து வரும் வேளை உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் ஆடுகளம் இலங்கைக்குச் சாதகமானதாகவும் சிறப்பானதாகவும் இருந்து வருவதை அரசியல் விமர்சகர்கள் ஒப்பிட்டு நோக்குகின்றனர்.

கிரிக்கெட் என்பது கனவான்களின் விளையாட்டு என்பதுடன், உலகின் பெரும் பணம் சம்பாதிப்போரின் சூதாட்டக் களமாகவும் விளங்கி வருகின்றது. அது மட்டுமன்றி தத்தமது அரசியலுக்கு வலுச் சேர்த்துக் கொள்ளவும் அரசியல் தலைமைகள் அவ்வப்போது கிரிக்கெட்டை பயன்படுத்தியும் வந்துள்ளன.

இலங்கை அணியில் சிங்கள, தமிழ், முஸ்லிம் வீரர்கள் திறமை அடிப்படையில் இணைந்து விளையாடி வருகின்றார்கள். அவர்களிடையே இதுவரை இனவாதச் சிந்தனை வெளிப்பாடடையவில்லை. ஆனால், வெளியே உள்ள தீவிர இனவாதிகள் கிரிக்கெட் விளையாட்டை இனவாதத்திற்கு உட்படுத்தி பிரகாரம் செய்ய முயன்று வருகின்றார்கள். நமது நாட்டின் சிங்கங்கள் உலகக் கிண்ணத்தை வென்றெடுத்து வருவார்கள் என சிங்கள இனவாதிகள் பரப்புரை செய்து வருகின்றார்கள். அதற்கேற்றாற்போல சிங்கம் ஒன்று வந்து கர்சனை செய்து முன்னோக்கிப் பாய்வது போன்ற ஒரு விளம்பரம் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பின் போது இடையிடையே காட்டப்படுவதை ரசிகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

சர்வதேச அளவில் நடைபெறும் இக் கிரிக்கெட் போட்டியில் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் ஒரே நிலைப்பாட்டில் நின்று வெற்றிக்காக அனைத்து ரசிகர்களும் குரல் கொடுக்க முடியாத அவல நிலையிலேயே இலங்கைத் தீவு இருந்து வருகின்றது. அந்தளவிற்கு இன,மத, மொழி முரண்பாடுகளாலும் ஒடுக்கு முறை யுத்தத்தாலும் பிளவுபட்டு நிற்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர

In The Final Sri Lanka Will Lose

Finally Sri Lanka Will Lose

மேற்சொன்ன எனது கருத்தில் தனிப்பட்ட காழ்ப்புணர்வு எதுவும் கிடையாது. தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தமிழர்களுக்கு எதிரான பிரசாரத்திற்காகவும், போருக்கான நிதி திரட்டவும், இராணுவத்தின் போரிடும் மனவலிமையை அதிகரிக்கவும் தான் ஸ்ரீலங்கா அரசு பயன்படுத்துகிறது. கிரிக்கட் வெற்றியையும் "சிங்கத்தை எவரும் வெல்ல முடியாது" என்று சிறுபிள்ளைத்தனமாக இராணுவ வீரர்கள் மத்தியில் இனவெறியை தூண்டும் பிரசாரத்திற்காக தான் பயன்படுத்தும். விளைவு இன்னும் பல அப்பாவி தமிழர்களின் உயிர்கள் தான் பலியாகும்.

ஸ்ரீலங்காவை பொறுத்தவரை மதமும் கல்வியும் விளையாட்டும் பேரினவாத அரசியலுடன் கலந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. போர் என்றால் போர்! சமாதானம் என்றால் சமாதானம்! என்று தமிழர்களை பார்த்து அறைகூவல் விட்ட ஜே.ஆரின் வார்த்தைகளை தான் நாமும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

யுத்த காலத்தில் அரசியல் என்றும் விளையாட்டு என்றும் தமிழர்கள் பிரித்து பார்த்தால் அது இனவெறி ஸ்ரீலங்கா அரசின் குண்டு வீச்சுக்களால் சிதறி இறந்த ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களுக்கும், வீடிழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு மரங்களின் கீழும் தெருவோரங்களிலும் வாழும் 300,000 தமிழ் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.