Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.விதுஷா)

மட்டக்களப்பு  பல்கலைக்கழகத்திற்கு எதிராக கொழும்பில்  இன்று ஆர்ப்பாட்டம் செய்த அனைத்து பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியத்தினரை  கலைப்பதற்காக  பொலிசார்  கண்ணீர்புகை  பிரயோகமும் , நீர்தாரை  பிரயோகமும்  நடத்தினர். 

DSC_5027.jpg

அலரிமாளிகை வரையான ஆர்ப்பாட்டத்தின் காரணமாக  விஜேராமயிலிருந்து நுகேகொடைவரையிலான வீதியில் இன்று பிற்பகல்  கடுமையான வாகன  நெரிசல்  ஏற்பட்டது. 

DSC_0397.jpg

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல்  ஸ்ரீஜயவர்தனபுர  பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பமாகியது. 

 நுகேகொட ,கிருலப்பனை , தும்முல்ல சந்தியூடாக அலரி மாளிகைக்கு சென்றடைய  ஆர்ப்பாட்டகாரர்கள் முற்பட்டனர்.

மட்டக்களப்பு  பல்கலைக்கழகத்திற்கு  எதிராக  ஆயிரக்கணக்கான  பல்கலைக்கழக மாணவர்கள்  கோஷங்களை எழுப்பியும் , சிவப்பு  நிற  கொடிகளை  ஏந்தியவாறும்   தமது எதிர்ப்பை  வெளிப்படுத்தினர்.  

DSC_0368.jpg

ஆர்ப்பாட்டகாரர்கள் கொள்ளுப்பிட்டிய சந்தியை சென்றடைந்த போது அந்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு  ஆர்ப்பாட்டகாரர்கள்  தடுத்து நிறுத்தப்பட்டனர். 

இருப்பினும் பொலிசாரின் பாதுகாப்பு வேலியை தகர்த்திய ஆர்ப்பாட்ட காரர்கள் முன்னேறிச் செல்ல முற்பட்டனர். இதன் போது  பொலிசார்  ஆர்ப்பாட்டகாரர்களின்  மீது  கண்ணீர்  புகை  மற்றும்  நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர். 

மேலும்,ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கொள்ளுப்பிட்டியிலிருந்து , காலிமுகத்திடல் வரையான வீதி நேற்று பிற்பகல் 1.30 இற்கு பின்னர்  தற்காலிகமாக  மூடப்பட்டிருந்ததுடன், பொலிசார்  சாரதிகளை  மாற்றுவழிகளை  பயன்படுத்துமாறு  அறிவுறுத்தியிருந்தனர்.  

https://www.virakesari.lk/article/60111

10 hours ago, பிழம்பு said:

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல்  ஸ்ரீஜயவர்தனபுர  பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பமாகியது.   நுகேகொட ,கிருலப்பனை , தும்முல்ல சந்தியூடாக அலரி மாளிகைக்கு சென்றடைய  ஆர்ப்பாட்டகாரர்கள் முற்பட்டனர்.

மட்டக்களப்பு  பல்கலைக்கழகத்திற்கு  எதிராக  ஆயிரக்கணக்கான  பல்கலைக்கழக மாணவர்கள்  கோஷங்களை எழுப்பியும் , சிவப்பு  நிற  கொடிகளை  ஏந்தியவாறும்   தமது எதிர்ப்பை  வெளிப்படுத்தினர். 

வழமையாக புறக்கோட்டை தொடரூந்து நிலையத்தில் அல்லது லிப்டன் சதுக்கத்தில் ஆரம்பித்து 1000 மீட்டருக்கு குறைவாக அலரிமாளிகை வரை நடத்தப்படும் மாணவர் போராட்டங்கள் முதல் தடவையாக மிக நீண்ட (12000 மீட்டருக்கு அதிகமான) தூரம் ஊர்வலமாக நடத்தப்பட்டுள்ளது என்பதிலிருந்து சிங்கள மாணவர் மத்தியில் ஊறியுள்ள சிங்கள-பௌத்த பயங்கரவாத மனோநிலைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

இவ்வளவு நீண்ட தூர ஊர்வலத்தை அனுமதித்து மறைமுகமாக ஆதரித்தமை,  சிங்கள-பௌத்த போலீஸ், சிங்கள-பௌத்த அரச, சிங்கள-பௌத்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் இனமதவெறிப் பயங்கரவாத முகத்தை தெளிவாக காட்டுகிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.