Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு மற்றும் பொலிஸார், படையினர் ஆகியோர் இணைந்து குறித்த இலவச சட்ட ஆலோசனை மற்றும் சட்ட நுணுக்கங்கள் தொடர்பான விளக்கங்களை வழங்கும் நிழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது.

1562996600827_News__4_.png

 குறித்த ஆரம்ப நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பிளச மண்டபத்தில் இடம்பெற்றது. முதல் நாளான இன்று முப்படையினர் மற்றும் பொலிசார், விசேட அதிரடிப்படையினரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது. 

1562996603858_News__3_.png

பொதுமக்களிற்கு சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் குற்ற செயல்களை கட்டுப்படுத்துதல், சட்டரீதியான சிறந்த சேவையை மக்களிற்கு எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பிலு்ம, புதிதாக நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் தொடர்பான விளக்கங்களும் இதன்போது அவர்களிற்கு வழங்கப்பட்டது.

1562996607505_News__6_.png

இதேவேளை நாளை 9 மணிமுதல் 5 மணிவரை பொதுமக்கள் தமது பிரச்சினைகளிற்கான இலவச சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக இரண்டாம் நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். சிரேஸ்ட சட்டத்தரணிகள் பொதுமக்களிற்கான ஆலோசனைகளை வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

1562996609421_News__9_.png

1562996618783_News__15_.png

குறித்த ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி இராணுவ கட்டளை அதிகாரி, சட்ட உதவி ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் செயலாளர், பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

1562996620220_News__14_.png

 

https://www.virakesari.lk/article/60385

"பொதுமக்களிற்கு சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் குற்ற செயல்களை கட்டுப்படுத்துதல், சட்டரீதியான சிறந்த சேவையை மக்களிற்கு எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பிலு்ம, புதிதாக நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் தொடர்பான விளக்கங்களும் இதன்போது அவர்களிற்கு வழங்கப்பட்டது."

இணைக்கப்பட்ட திரியில் ஒரு பொதுமக்களையும் காணவில்லை அதுவே பதிலை தருகின்றது !

நாவற்குழி புத்தகோவில் விவகாரத்தில் பின்வாங்கப்பட்டது மக்கள் வழக்கு ;
திருமலை ஐந்து மாணவர் கொலையில் அனைத்து படை குற்றவாளிகளும் விடுதலை ;
படையினர் முன்னின்று நடத்தும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை ;
அவசரகால சட்டம் ...... என மேலும் ....

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.