Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி வடக்கில் பல ஆலயங்கள் இராணுவத்தினர் வசமே உள்ளன

Featured Replies

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சியில் கூட, யாழ். வலி வடக்கில் பல ஆலயங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், யாழ் வலி வடக்கில் பல ஆலயங்கள் திறக்கப்படாமலும் ஒளியேற்றப்படாமலும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
 
கடந்த ஒக்டோபர் மாதம் இடம் பெற்ற ஆட்சி மாற்றத்தின்போது, போராடியே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை கொண்டு வந்தோம்.
 
ஜனாதிபதிக்காக மக்களிடம் வாக்கு கேட்டு நாங்களே அவரை தெரிவு செய்தோம். 
 
ஆனால் அவரை ஆட்சிக்கு கொண்டு வந்தது, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கோ அல்லது ஆலயங்களை மூடுவதற்கோ அல்ல.
 
எனவே வடக்கில் மூடப்பட்டுள்ள ஆலயங்கள் திறக்கப்பட வேண்டும். அதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.  
 

 

இந்துமதம் சார்ந்து ஐந்து முத்திரைகள் வெளியிடப்படும்-ஆளுநர் ராகவன் உறுதி

இந்து சமய மக்களின் ஐந்து முக்கிய ஸ்தலங்களைக் குறிக்கும் முத்திரைகளை வெளியிடவுள்ளதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
 
யாழில் நேற்றையதினம் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இடம்பெற்ற இந்துக் கோயில்களுக்கான நிதிஉதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் மாதம் வெளியிடத் தீர்மானித்துள்ளோம்.
 
வடமாகாணத்தில் உள்ள இந்துக்களின் முக்கிய ஸ்தலங்களாகக் கருதப்படும் விடயங்களை இந்து அமைப்புக்கள், நல்லை ஆதீனம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பரிந்துரைகளை முன் வைக்கலாம்.
 
தமிழ்க் கடவுளாகப் பேற்றப்படுகின்ற வள்ளுவப்பெருமானின் முத்திரையைக் கூட வெளிடத்தயாராக உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.       
 

 

இந்து தேசிய மகா சபையை உருவாக்கியே தீருவேன்-யாழில் மனே கணேசன் சபதம்

இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் வாழும் இந்துக்களை உள்ளடக்கி நிறுவனமயப்படுத்தப்பட்ட இலங்கை இந்து தேசிய மகா சபையை உருவாக்கியே தீருவேன்.
 
 என தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள் சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் யாழில் தெரிவித்தார்.
 
நேற்றையதினம் யாழ் நீராவியடி இலங்கை வேந்த மன்றத்தில் இடம்பெற்ற வடமாகாண இந்து ஆலயங்களுக்கான நிதி வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில் ஆதியும் அந்தமும் இல்லாத இந்து மதம் இதுவரை காலமும் நிறுவனமயப்படுத்தபடாமல் கட்டுக் போப்பின்றி காணப்பட்டு வருவதாகவும் இதை ஓர் நிறுவன அமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கு தன்னால் ஆன பணியைச் செய்யத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
 
திருகோணமலைக் கன்னியாப் பிள்ளையார் ஆலயம், முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம், மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளைவு ஆகிய வற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்தேன்.
 
திருகோணமலை கன்னியா பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் பேசியிருக்கிறேன்.
 
இதன் பயனாக ஜனாதிபதியன்  மேலதிக செயலாளர் திருகோணமலை மாவட்ட செயலாளருக்கு குறித்த ஆலயம் வளவினுள் பௌத்த விகாரை கட்டுவதை நிறுத்த வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
 
அது மட்டுமல்லாமல் நானும் திருகோணமலை மாவட்ட செயலாளருக்கு தொலைபேசி ஊடாகத்  தொடர்பு கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீள செயற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டு மெனவும் கூறியிருக்கிறேன்.
 
இவ்வாறான நிலையில் அமைச்சர் மனோ கணேசன் தான் இந்து மதம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைக்கு பொறுப்பேற்க வேண்டுமெனச் சிலர் வீரவசனம் பேசுகிறார்கள்.
 
அவ்வாறானவர்களுக்கு நான் ஒரு விடையத்தை கூற விரும்புகிறேன் உண்மையில் நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிக்கின்றவர்கள் இருந்தால் கட்சிகளின் வர்ணங்களை மறந்து சேவையாற்ற வாருங்கள் இல்லையென்றால் எம்மை வம்புக்கு இழுக்கலாம் அடி பணிந்து போவதற்கு நான் தயாராக இல்லை என அமைச்சர் மனோ மேலும் தெரிவித்தார்.   

Edited by ampanai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.