Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிரும் துரோகச் சாயங்கள் ! – கஜேந்திரகுமாருக்கு பகிரங்க மடல்

Featured Replies

மதிப்புக்குரிய கஜேந்திரகுமார் அவர்களே,

தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள்  தம் உரிமைகளை  துரித கதியில் மீட்டெடுக்க வேண்டிய காலத்தின் நிர்ப்பந்தந்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் அரசியல் பேரம்பேசும் சக்தியாக  தமிழ் மக்களால் பெரிதும் நம்பப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் அதன் சில உறுப்பினர்களும்  தமது சுயலாப நோக்கங்களிற்காக  அரசுக்கும் மேற்கத்தைய சக்திகளிற்கும் துணைபோகின்ற அபாயத்தை நாம் கண்டு வருகின்றோம். இதன் அடிப்படையிலேயே தமிழ் மக்களால் இன்றளவும் மாற்றுத் தலைமையாக பெரிதும் நம்பப்படுகின்ற க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான அரசியல் கூட்டு ஒன்றிற்கான தேவை எழுந்திருக்கின்றது.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல்களின்போது இவ் இணைவுக்குரிய மும்முரமான முயற்சிகள் பல சமூக அரசியல் கட்டமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டபோதும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியினரால் இம்முயற்சிகள் புறக்கணிக்கப்பட்டிருந்தன. அரசியல் யதார்த்த அகப் புறச் சூழல்களைக் கருத்தில்கொள்ளாது தமது கட்சி நலனுக்காகவும் அத்தகையை கூட்டிணைவின் முக்கியத்துவத்தை உணராமையும் விளைவுகளின் வாதாங்களாகவே ஈபிஆர்எல் கட்சியினைத் துரோக கட்சியாகவும் நீதியரசர் க.வி விக்னேஸ்வரன் அவர்களை இந்தியாவின் நிழலில் செயற்படுகிறார் எனவும் கூறப்படுகின்ற குற்றச்சாட்டுக்களின் பின்னணியாகும்.

தற்போதைய தமிழ்க் கட்சிகளின் நிலவரப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக எந்தவொரு கட்சியும் தனித்து நின்று தமிழ் மக்களின் பேராதரவினைப் பெற்றுவிட முடியாது என்கின்ற யதார்த்த நிலைமைகளை உங்கள் கட்சியினர்  ஏற்றுக்கொள்ளாதிருப்பது தாங்கள் பிறிதொரு நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறீர்களோ என எண்ணத் தோன்றுகின்றுது.

தங்களைத் தவிர மற்றைய எவரும் கொள்கைத் தெளிவோடு பயணிக்கவில்லை என்று பிரச்சாரம் மேற்கொள்ளும் திரு. கஜேந்திரகுமார் அவர்களே உங்கள் பார்வைக்குச் சில கேள்விகள்.

தங்கள் கட்சியின் முக்கியஸ்தர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோரிடம் வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்  தன்னைத்  தங்கள் கட்சியுடன் இணைய வேண்டாம் என்று இந்தியா தெரிவித்ததாக அண்மைக்காலங்களில் ஊடகங்களில் தாங்கள் கூறித் திரிந்த புனைகதைக்கு க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அண்மையில் மறுப்புத் தெரிவித்திருந்தார். அத்துடன்  க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இந்தியாவின் வழிநடத்தலில் செயற்படுவதனாலேயே உங்களுடனான கூட்டணிக்கு மறுக்கிறார் என்றும் தாங்கள் தெரிவித்திருந்தீர்கள் ஆனால் நிஜத்தில் அவர் பல தடவைகள் பகிரங்கமாக தங்களை கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுத்திருந்தார் ஆனால் அக்கூட்டணிக்குச் செல்லாமல் நொண்டிக் காரணங்கள் சொல்லித் தாங்கள்தான் தவிர்த்து வந்திருக்கின்றீர்கள் ஆகவே உங்களைப் பின்னணியில் இருந்து இயக்கும் ஓர் சக்திதான் ஓர் பலமான மாற்று அணியை உருவாக்கவிடாமல் தடுக்கிறார்கள் என்பது புலனாகிறது. யார் அந்த தீய சக்தி என்பதை தாங்கள்தான் வெளிப்படுத்தவேண்டும்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலின் பின்பு வவுனியா நகர சபையில் ஈபிஆர்எல்எவ் கட்சியின்  வேட்பாளருக்கு வேறு கட்சியின் உறுப்பினர்கள் வாக்களித்தமையால் ஈபிஆர்எல்எவ் கட்சியினர் துரோகம் இழைத்துவிட்டார்கள் எனக் கூறும்  தாங்கள்  யாழ் . மாநகர சபையில் பெரும்பான்மையில்லாமல் யார் ஆதரவை நம்பி மணிவண்ணன் அவர்களை  போட்டியிடச் செய்தீர்கள்? இரகசிய வாக்கெடுப்புக் கேட்டதன் மர்மம் என்ன?

கிழக்கு மாகாணத்தில்  பொத்துவில் பிரதேச சபையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரை பிரதேச சபைத் தலைவராக ஆதரவளித்தமையும் திருக்கோவில் பிரதேச சபையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவரை உப தவிசாளராக்க வாக்களித்தமையும் எந்த வகைக்குள் இணைப்பது. இன்று வரை அவர்கள்மீது தாங்கள் நடவடிக்கை எடுக்காமல் அமைதிகாப்பது துரோகத்தனம் என்றில்லாமல் வேறெப்படி அழைப்பது.

கடந்த உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய பேரவை என்ற ஓர் கூட்டணியை உருவாக்கியிருந்தீர்கள். அந்தக் கூட்டணியின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று தேர்தலின் பின்பு தமிழ்த் தேசிய பேரவையை ஓர் கூட்டணியாகப் பதிவு செய்வது என்பது. ஆனால் தேர்தலின் பின்பு தமிழ்த் தேசிய பேரவைபற்றியோ அதன் பதிவைப் பற்றியோ தாங்கள் பேசாமல் இருப்பது உங்களது பொய்த்துப் போன அரசியல் வாக்குறுதிகளை வெளிப்படுத்துகின்றது.

ஈபிஆர்எல்எவ் கட்சியினைத் துரோகக் கட்சியென்றும் இந்தியாவின் நேரடி ஆளுகையின் கீழ் செயற்படுகிறார்கள் என்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ச்சியாக ஆதாரமற்ற  குற்றஞ் சுமத்தி வருகின்றீர்கள்.  கடந்தகால கசப்புணர்வுகள் அத்தனையையும் துறந்து தலைவர் பிரபாகரன் அவர்களின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு முழுமையான இதயசுத்தியுடனேயே தமிழ்க் கட்சிகளின் கூட்டிணைவில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அனைத்துக்கட்சிகளும் அங்கம் வகித்திருந்திருந்தன. அச்சந்தர்ப்பத்திலேயே ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களை, தலைவர் பிரபாகரன் அவர்கள் எந்தவித தனிப்பட்ட பாதுகாப்புகளும் இல்லாமல் தனிமையில் சந்தித்து, இருவரும் மனம் திறந்து பேசிய வரலாற்றை இக்கடிதம் நினைவுறுத்த விரும்புகின்றது. அரசியலையும் தாண்டி  ஈபிஆர்எல்எவ் கட்சிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் செயற்பாட்டுரீதியான புரிந்துணர்வுகளும் எட்டப்பட்டிருந்தன. அண்மைக்காலங்களில், இலங்கைத் தமிழரசுக் கட்சியினரைப் போலவே தங்கள் கட்சியினரும்  தமிழீழ விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடியவர்களை கறைபடிந்தவர்களாக காட்டி தம்மையே புனிதர்களாக காட்ட எத்தனிக்கும் கபடத்தனங்களை எமது மக்கள் உன்னிப்பாக அவதானித்துவருகிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதற்கான காரணமாக இன்றுவரை உங்களால்  கூறப்படும் வாதமாக  2009 இல் யுத்தம் முடிவடைந்தவுடன் அடிப்படைக் கொள்கைளை கூட்டமைப்பு கைவிடுவதாக இந்தியாவிடம் தெரிவித்தமையே காரணம் என்கின்றீர்கள். ஆனால் உங்களின் வாதப்படி அப்படி நடந்திருந்தால் 2010 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கும் வரை, எந்த வெளிப்படையான எதிர்ப்பும் தெரிவிக்காமல் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்தது ஏன் என்பதை தங்களால் விளக்க முடியுமா? அத்துடன் அத்தேர்தலின் ஆசனப்பங்கீடுவரை சென்றது ஏன்? ஆசனப் பங்கீட்டில் ஏற்பட்டட முரண்பாடே அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து  வெளியேறியதற்கான காரணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இன்றுவரை அதற்கு கொள்கை முரண்பாடு காரணம் என்று கூறித் திரிவது உங்களின் போலி முகத்தைக் காட்டுகிறது.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்கின்ற தங்கள் பூர்விகக் கட்சியினை அடிப்படையாக வைத்துக்கொண்டும், அக்கட்சியினைத் தொடர்ந்து பாதுகாக்கும் உள்நோக்கத்துடனும் பூசிக்கொள்ளப்பட்ட புதிய சாயமே  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. இன்று வரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்கின்ற பெயரை தனிக்கட்சியாகப் பதியாமல் வைத்திருப்பதே அதற்குச் சான்றாக அமைகிறது.

கொள்கையளவில் விடுதலைப் புலிகளின் கொள்கையோடு பயணிப்பதாக புலம்பெயர் தேசங்களிலும் ஆங்காங்கே தளத்திலும் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் தங்கள் அணியினர், தங்கள் கட்சியில் எத்தனை முன்னாள் போராளிகளுக்கு மத்திய குழுவில் அங்கம் வகிக்க அனுமதித்திருக்கிறீர்கள். தவிரவும், தங்களின் தந்தையாருக்கு மாமனிதர் வழங்கி கௌரவித்த நிகழ்வில் தாய் மற்றும் சகோதரியுடன் நின்று  தலைவர் பிரபாகரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் இருந்து  உங்கள் தாய் மற்றும் சகோதரியை நீக்கிவிட்டு தலைவர் பிரபாகரனுடன்  தாங்கள் தனிமையில் இருப்பதான புகைப்படத்தினை பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள் தங்கள் ஆதரவாளர்கள். ஆனால் தலைவர் பிரபாகரன்  அவர்கள் உங்களை  எச்சந்தர்ப்பத்திலும் தனிமையில் சந்திக்கவோ புகைப்படம் எடுத்துக்கொள்ளவோ இல்லையென்பது பலர் அறிந்த உண்மை.  உங்களின் இச்செயற்பாட்டுக்கும் தேர்தல் லாபங்களுக்காக இலங்கை சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழர் பிரதேசங்களில் விடுதலைப் புலிகளை உயர்வாகப் பேசுவதற்கும் ஈழ விடுதலைப் பாடல்களை ஒலிபரப்புவதற்கும் இடையில் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப் போகிறது. இவை தவிரவும் ஐநாவின் கூட்டத் தொடர் ஒன்றில், நீங்கள் , விடுதலைப் புலிகளின் போராளிகள் வறுமையின் காரணமாக போராட்டத்தில் இணைந்துகொண்டார்கள் என கொச்சைப்படுத்தியும்,  மாவீரர் நாளை அனைத்து இயக்கங்களிற்கும் பொதுவான நாளாக மாற்றவேண்டும் என்கின்ற தங்களது கபடச் சிந்தனைகளையும் வைத்துக்கொண்டு தமிழ்த் தேசியத்தோடு உறுதியோடு பயணிக்கிறோம் என்கின்ற உங்களது கூற்று உங்களது அடிப்படை அரசியல் நாடகத்தை வெளிக்காட்டுகின்றது.

எத்தகைய இடர்களையும் அடக்குமுறைகளையும் கடந்து தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் காலத்தின் கட்டாய தேவை இன்று எழுந்திருக்கின்றது. உள்ளக அரசியல் முரண்பாடுகளைக் களைந்து தனிப்பட்ட கட்சி நலன்களைப் புறந்தள்ளி ஒரு பொதுக்கொள்கையின் ஊடாக ஒரு மாற்று அரசியல் களத்தை நோக்கி நீதியரசர் விக்கினேஸ்வரன்  அவர்களின் தலைமையில் ஒன்றுபடவேண்டிய தேவையினை உணர்ந்து செயற்படுவதற்கான  அழைப்பாகவே இம்மடல் நிறைவுபெறுகிறது.

நன்றி

க.நேசன்

http://tkural.com/?p=8010

இந்த ஆக்கத்தின் தலைப்பிற்கும் அதன் சாரத்திற்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பதவியில் இல்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் பதவியில் உள்ளது. அவர்கள் தான் மக்களை பிரநிதித்துவம் செய்யதவறுகிறார்கள். தங்களுக்கு மக்கள் தந்த ஆணையை புறக்கணித்து அயலக சக்திகளின் நிரல்படி நடக்கின்றார்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் தமிழருக்கு உள்ள தெரிவு இனகொலை மகிந்தவை தோற்கடிப்பதா அல்லது நேரடி மறைமுக செயல்பாடுகளால் மகிந்தவை வெற்றி பெற வைப்பதா என்பதுதான், இந்த சதுரங்கத்தில் மகிந்தவை தமிழ் இனத்தின் முதல் சத்துராதியென சரியாகவே தெரிவு செய்து சபந்தர் மகிழ்ந்தவை விழுத்தக்கூடியவர்களை 2வது எதிரியாக காய்நகர்த்தி தொடர்ச்சியாக மகிந்த அணியை தோற்கடித்து வருகிறார். 1995ல் ஒருநாடு என்னூடாக தேர்தல் பகிஸ்கரிப்பினூடாக மகிந்த வெற்றிக்கு உதவினால் உதவுவோம் என செய்தி அனுப்பியது. செய்தியை சேர்த போதும் மகிந்த வெற்றிபெறுவது பேரழிவுகளின் ஆரம்பம் என்கிற என்கருத்தையும் பதிவு செய்தேன். பாலகுமாரனும் அதே நிலைபாட்டில் உறுதியாக இருந்தார். ஆனால் கொழும்பைச் சேர்ந்த தமிழ் அரசியல் பிரமுகர் ஓரிருவர்  அந்த சமயத்தில் மகிந்த குடும்பத்துக்கு ஆதரவாக இருந்தனர்.  அதே அதிதீவிர வாத அறிக்கை வீரர்களான தமிழ் தலைவர் சிலர் மீண்டும் பகிஸ்கரிப்பு அல்லது தமிழ் வேட்பாளர் என மகிந்தவின் வெற்றிக்கு வழிவகுக்க காய் நகர்த்துகின்றப்னர்.  பேசுகின்றனர். ஆதரித்தோ, பகிஸ்கரித்தோ அல்லது போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்தோ மகிந்தவை வெற்றி பெறும் சூழலை உருவாக்குவது இன துரோகம் மட்டுமன்றி முள்ளிவாய்க்கால் தியாகிகளுக்கு செய்யும் துரோகமுமாகும். 

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.