Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் புலனாய்வுக்கட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படுகின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழமுரசுப் பத்திரிகையில் வந்த ஆக்கம் வாசிக்காதவர்களுக்காக இங்கே இணைக்கப்படுகிறது.

சிறிலங்காவின் புலனாய்வுக்கட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படுகின்றது. -ச.சங்கரன்-

உலகில் பெண்கள் சிறந்த ஒற்றர்களாக விளங்குகின்றனர் அவர்கள் ஆண்களிடம் இருந்து புலனாய்வு தகவலகளை தந்திரமாகப் பெறுகின்றனர் அந்த வகையில் இலங்கை அரச புலனாய்வு நிறுவனமும் பெண் உளவாளிகளின் எண்ணிக்கையினை மிக வேகமாக அதிகரித்துள்ளது.

சிறிலங்காவில் பெண் புலனாய்வாளர்களின் பங்கு 1998ம் அண்டு மொத்தப்புலனாய்வு மனித வளத்தில் 12வீதமாக இருந்தது என்றும், இது 2007ம் ஆண்டு 33வீதமா அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.

சிறிலங்கா அரசாங்கம் தமது பெண் புலனாய்வாளருக்கான ஆட்கள் தெரிவினை இஸ்லாமியத் தமிழர் மத்தியிலும் சில மலையகத் தமிழர் மத்தியில் இருந்தும் மேற் கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

அதன் ஒரு கட்டமாக சமுர்த்தி என்றழைக்கப்படும் புனர்வாழ்வுத்திட்டத்தில் புலனாய்வுக்கான அடிப்படைத் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. சமுர்த்தி திட்டமும் சிறிலங்காப் புலனாய்வுக் கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டு செயற்பட்டாலும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் புலனாய்வு அதிகாரிகளாக உள்ளனர் சமுர்த்தி திட்டத்திலும் அதிக பெண்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஆனால், பணியாளர்களாக கடமையாற்றுவோர் புலனாய்வு வேலை என்பதை தெரியாமலேயே பணியாற்றுகின்றனர்.

சிறிலங்காப் புலனாய்வுச் சேவையில் முன்னர் ஆண்கள் ஆற்றி வந்த வேலையின் ஒரு பகதியை இன்று பெண்கள் செய்கின்றனர் பெண்களினால் பல ஆண்களிடம் இருந்து தகவல்களைப் பெற முடிகின்றது 10 ஆண் புலனாய்வாளர்களின் வேலையினை 7 பெண்கள் செய்வதாக கூறப்படுவதுடன் அதனால் எதிர் காலத்தில் பெண்களின் பங்களிப்பினை அதிகரிக்கும் திட்டம் பலனாய்வுத்துறையினருக்கு உண்டு.

உலகெங்கிலும் சில வருடங்களாக இரகசிய புலனாய்வுச் சேவையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வந்த போதிலும் அவர்களின் பங்குபணிகள் பெருமளவில் மறைக்கப்பட்டே வந்தன. அதனால் அவர்கள் இலகுவாக பணியாற்றக் கூடியவாறும் இருந்தது.

பெண்களினால் பலரை இலகுவில் வசப்படுத்த முடியும் என்பதனாலும் உடல் கவர்ச்சி மூலம் பலரை அரவணைத்துச் செயற்பட முடியும் என்பதினாலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வந்துள்ளது.

சிறிலங்காப் புலனாய்ச் சேவையில் பணியாற்றும் பெண்களில் 80 வீதமான பெண்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் 18- 20 வயதில் இவர்கள் உளவுச் சேவைக்கு இணைக்கப்படுவதாகவும் தெரிய வருகின்றது.

இலங்கை அரச உளவுச் சேவையில் ஒவ்வொரு ஆண் புலனாய்வளார்களும் 10 பெண் முகவர்களை கட்டாயம் கையாள வேணடும் எனவும், அவர்கள் மொத்தம் 40 முகவரை ஒரு ஆண் புலனாய்வாளர் கையாள வேண்டும் எனவும் அரச புலனாய்வு நிறுவனத்தின் கட்டமைப்பு கூறுகின்றது.

பிரித்தானியாவின் புலனாய்வுச் சேவையான ஆ.ஐ-5 இல் 40 வீதம் பெண் புலனாய்வாளர்கள் இருப்பதுடன் 50 வீதத்திற்கு மேலானவர்கள் 28 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் கூறப்படுகின்றது

சிறிலங்காவின் உள்ளகப் புலனாய்வு கட்டமைப்பில் மாத்திரமன்றி வெளியகக்கட்டமைப்பிலும் பெண் புலணாய்வாளர்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்கான தூதுவராலயங்களினால் வெளிநாடுகளில் நவநாகரிகத்தில் மூழ்கிப் போன அழகிய பெண்கள் பணியாற்றுவதாக அறிய முடிகின்றது. இவர்களினால் பலர் தேசத்தின் பெயரால் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகின்றது. தேசத்திற்காக உடலை அர்ப்பணிப்பதாக இவர்களுக்கு உணர்வூட்டப்பட்டு வருகின்றது. அதனால் அவர்கள் பெருமை கொள்கின்றனர்.

உளவுத் துறைப் பணியில் ஈடுபடும் பெண்கள் பாலியல் உறவின் மூலம் ஆண்களை வசப்படுத்தி அவர்களிடம் இருக்கும் தகவல்களை அப்படியே திருடுகின்றனர். அவர்களின் வல்லமை கவர்ச்சியால் பாலியல் பலவீனம் உள்ள ஆண்களை பெண் ஒற்றர்கள் தேசத்தின் துரோகிகளாக்கி விடுகின்றனர் அவர்களிடம் இருந்து பெறுமதியான புலனாய்வு தகவல்களைப் பெறுகின்றனர். பாலியல் தொடர்பினைப் பேணும் இப்பெண்களினால் இலகுவில் பெறுமதியான புலனாய்த் தகவல்களை சேகரிக்க முடிகின்றது.

உளவு பார்க்கும் தொழிலில் ஆண்களை விட பெண்கள் திறமையாகப் பணியாற்றுகின்றனர் என புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஆராய்ந்து அறியும் திறனும், கூர்ந்து நோக்கும் ஆற்றலும் பெண்களிடம் உண்டு. இதனால் சிறிலங்காவிலும் பெண் உளவாளிகள் உளவுத்துறைக்கு அதிகம் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

சிறிலங்காவில் பயங்கரவாத முறியடிப்பு புலனாய்வுப் பிரிவுக்கு பெண்களை இணைத்துக் கொள்ளும் திட்டம் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

சிறிலங்கா உளவுச் சேவையில் பெண்களினால் ஆழமான புலனாய்வு ஊடுருவல் நடவடிக்கை வெற்றி பெறவில்லையாயினும் சாதாரண ஊடுருவல் அதாவது தமிழ் பொதுமக்களிடம் இருந்து தகவல் சேகரிப்பு நடவடிக்கை வெற்றியளி திருப்பதாக கூறப்படுகின்றது.

விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் அரச பெண் புலனாய்வாளர்களின் ஊடுருவல் வெற்றியளிக்கவில்லை என்பதினால் ஆழமான புலனாய்வுத் திட்டங்கள் வெற்றியளிக்க வில்லை.

கடந்த காலத்தில் (2000 .இற்கு முன்) சிறிலங்கா உளவுச் சேவையில் பெண்களின் பங்கு தென் இலங்கையில் காணப்பட்டாலும் 2000ஆம் ஆண்டுக்குப் பின் வடக்கு கிழக்குப் பகதிகளுக்கு விரிவாக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரச புலனாய்வு இயந்திரம் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது.

சிறிலங்கா அரசாங்கம் மலையகத் தமிழ் பெண்களை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் ஊடுருவ எடுத்த பல முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

வவனியா, மன்னார் மட்டக்களப்பு, யாழ்ப்பாண நகரங்களில் அண்மைக் காலத்தில் அரச பெண் உளவாளிகளின் நடாமட்டங்கள் அதிகரித்துள்ளதினை காண முடிகின்றது.

சிறிலங்கா அரசாங்கம் புலனாய்வுப் நடவடிக்கைக்கு என அனுராதபுரத்தில் ஒரு பாலியல் புலனாய்வு மையம் ஒன்றை நடாத்தி வருகின்றது.

வவுனியா மன்னார் பிரதேசத்தில் வாழ்வோரும், வன்னியில் இருந்து வவுனியா மன்னார் செல்வோரும் இங்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் இன்பத்திற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டு அதனை புகைப்படம் எடுத்த பின் அதனை கொண்டு அவர்கள் மிருட்டப்பட்டு அவர்களிடம் இருந்து புலனாய்வுத் தகவல்கள் எடுக்கப்படுகின்றன.

இவ்வாறாக இலங்கைத்தீவில் பல புலனாய்வு பாலியல் நிலையங்களை இலங்கை அரசாங்கம் நடாத்தி வருக்கின்றது என்பது பலருக்குத் தெரியாத விடயம்.

விடுதலைப் புலிகளின் பன்னாட்டுக் கட்டமைப்புக்குள் ஊடுருவல் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு பெண் உளவாளிகளை பயன்படுத்த அரசாங்கம் திட்டமிக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு.

இதில் புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
sllon1hw2.jpg

என்ன இவ்வளவுமா?மவனே இதிலே ஒருத்தி மானமுள்ள தமிழிச்சியாகவிருந்தால் றப்பிலே தான்டா கிடக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.