Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீர் மங்கும் மேதினம்

Featured Replies

சீர் மங்கும் மேதினம்

`

நாளை மே முதலாம் திகதி. மேதினி எங்கும் மேதினம் தொழிலாளர் திருநாள் அனுஷ்டிக்கப்படும் வேளை அது. எனினும் இம்முறை இலங்கையில் அது மே முதலாம் திகதிக்கு முதல் நாளான இன்று இடம்பெறுகின்றது.

முன்னைய வருடங்களில் தசாப்தங்களில் கொண்டாடப்பட்டமைபோல எழுச்சியாக, மலர்ச்சியாக, உத்வேகத்தோடு இப்போதெல்லாம் மேதினம் அமைவதில்லை என்பது தெளிவு. உழைப்பாளர் வர்க்கத்தின் உழைப்பைப் போற்றி, அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் எழுச்சிக் கோஷத்தோடு கொண்டாடப்படும் மேதினத்தின் சிறப்பும், தொனியும் காலம் செல்லச் செல்ல இப்போது மங்கி வருவது கண்கூடு. இதற்குக் காரணம் என்ன?

உலக ஒழுங்கு மாறி வருவதே இதற்கு அடிப்படை. அது எங்ஙனம் என்பதை இந்த உழைப்பாளர் தினத்தில் அசைபோடுவது பொருத்தமானது.

ஆதி நாகரிகங்களில் அனைத்து அதிகாரமும் கொண்ட அரசனே அனைவருக்கும் எஜமானன். அவனே சுதந்திர புருஷன். மற்றெல்லோரும் அவனுக்குக் கீழ் அடிமைகளாக உழலும் தொண்டர்கள். அவ்வேளையில்தான் விடுதலையின் விழிப்புணர்வு பிறந்தது. புதிய பண்பாட்டு உலகங்கள் தோன்றின. புதிய நாகரிகங்கள் உருவெடுத்தன. போர், புரட்சி, கிளர்ச்சி என மனிதர்கள் விடுதலை வேண்டி எழுச்சியுற்றனர். அதன் விளைவாக மன்னராட்சிகள் மண்ணாகின. சர்வாதிகார ஆட்சிகள் சரிந்தன. முடியாட்சி வீழ குடியாட்சி அரசேறியது. சுதந்திரம், சமத்துவம், விடுதலை என்ற மனித விழுமியங்களைப் பிரதிபலிக்கும் பெயரில் புதிய அரசுகள் தோற்றம் பெற்றன.

விடுதலையைத் தேடும் மனித நாகரிகத்தின் பயணம் அரசுகளின் உருவாக்கத்தைத் தொட்டு நிற்கின்றது. அதன் பின்னணியில்தான் சமூக உறவு முறைகளையும் அவற்றில் ஏற்பட்ட மாறுதல்களையும், பிரதிபலிப்புகளையும் நாம் அடையாளம் காணவேண்டும்.

மனித வாழ்வுக்கு பொருளுலகம் அத்தியாவசியமானது. அதுவின்றி அவனின் வாழ்க்கை சாத்தியமேயற்றது. பொருளுலகமன்றி மனித உயிர்ப்பும் இல்லை; உணர்வுமில்லை. அத்தகைய இந்தப் பொருளுலகின் சிருஷ்டி கர்த்தா அவன்தான். தனக்குத் தேவையான பொருளுலகத்தைத் தானே படைத்து அதற்குள் சிறைப்பட்டு, சிக்கி நிற்கிறான் அதன் கர்த்தாவான மனிதன்.

உழைக்கும் மனிதன், அவனின் உழைப்பாக வெளிப்படும் உழைப்பு சக்தி, அந்த உழைப்பு சக்தியிலிருந்து உதயமாகும் உற்பத்தி உலகம், அந்த உற்பத்தி உலகிலிருந்து உருப்பெறும் உற்பத்தி உறவுகள், அந்த உற்பத்தி உறவிலிருந்து உருவாக்கமடையும் வர்க்கப் பிரிவுகள், அந்த வர்க்கப் பிரிவுகளிடையே முனைப்புறும் முரண்பாடுகள் என்று மனிதனின் உழைப்பிலிருந்து பொருளுலகம் விரிகின்றது.

மேற்படி வர்க்கப் பிரிவுகளிடையேயான முரண்பாடுதான் சுரண்டலாகின்றது. பொருளிய உற்பத்தி உலகில் முதலாளிய ஆதிக்க சக்தி, தொழிலாளரின் ஆக்க சக்தியை விழுங்கிக் கொள்கின்றது.

அவனது உழைப்புச் சக்தியைப் பிழிந்து, உறிஞ்சி எடுக்கிறது. இதுதான் சுரண்டல்.

விடுதலை வேண்டிய புரட்சிகளின் விளைவாக அரசர்களின் தனியாட்சி மடிந்து, அரசுகளின் பொது ஆட்சி மலர்ந்த காலத்தில், நிலமானிய பிரபுத்துவ முறையும் பிறந்தது. அப்போது கட்டவிழ்ந்த விவசாயப் புரட்சியினிடையே சுரண்டலும் உத்வேகம் பெற்றது. வியர்வை சிந்தி உழைக்கும் உழவனின் உற்பத்தி சக்தியை பிரபுத்துவம் விழுங்கிக் கொண்டது. அங்கு விவசாயிகள், உற்பத்திக்கான அடிமைகளானார்கள்.

அதன்பின்னர் விவசாயப் புரட்சி ஒழுங்குமாற, கைத்தொழில் புரட்சி பூத்தது. அங்கும் முதலாளி தொழிலாளி என்ற வர்க்க பேதம் ஆழமாகப் புரையோடியது. தொழிலாளியின் வியர்வையிலும் உழைப்பிலும் உருவான உற்பத்தியை முதலாளியம் சுரண்டிக்கொண்டது.

இந்த ஒழுங்கு முறையில் விவசாயப் புரட்சியும், கைத்தொழில் புரட்சியும் நிலை நிறுத்தப்பட்ட காலத்தில் வியர்வை சிந்தி, உதிரத்தை உழைப்பாக்கி, கடினமாகக் கஷ்டப்பட்ட உழைப்பாளர் வர்க்கத்துக்கும், அவர்களின் கடின உழைப்பால் கிடைக்கும் நலன்களைச் சுரண்டி, விழுங்கி, வீங்கிப் பெருத்த முதலாளி வர்க்கத்துக்கும் இடையேயான முரண்பாடு முற்றியது.

அதனால், நசுக்கப்பட்ட உழைப்பாளர் வர்க்கத்தின் உரிமைக்குரல், அதனை ஈட்டுவதற்காக ஓங்கி ஒலிக்க வேண்டியதாயிருந்தது. அழுக்குப்படாத வெள்ளைச் சீருடைப் பணியாளரினதும், முதலாளியரினதும் சுரண்டலிலிருந்து தொழிலாள வர்க்க மீட்சிக்காக அந்த வர்க்கம் கிளர்ச்சியும் எழுச்சியும் வெளிப்படுத்த வேண்டியிருந்தது. அதுவே உழைப்பாளர் நாளான மேதின நிகழ்வுகளுக்கும் அப்போது உத்வேகமும் உந்துதலும் அளிக்கும் காரணியாயும் அமைந்தது.

ஆனால், இப்போது நிலைமையில் சடுதியான மாற்றம். விவசாயப் புரட்சியையும் கைத்தொழில் புரட்சியையும் தாண்டி, புதிய உலக ஒழுங்காக அறிவுசார் அபிவிருத்தியாக தகவல் தொழில்நுட்பப் புரட்சி வெடித்திருக்கின்றது.

விவசாய சமூகங்களையும், நிலமானிய சமூகங்களையும் விஞ்சி கைத்தொழில் சமூகங்கள் உயர்ந்த காலம்போய், இப்போது அதையும் தாண்டி, புதிய நூற்றாண்டில் அறிவு மைய சமூகம் உச்ச அபிவிருத்தியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றத

அவுஸ்ரெலியாவில் மேதினம் கொண்டாடபடுவதில்லை யாருக்கும் காரணம் தெறியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.