Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காடழிப்பு, மணல் அகழ்வு முல்லைத்தீவில் தீவிரம்

Featured Replies

இயற்கை வளங்களை சூறையாடும் சுயநலமிகள்!

Fea02.jpg?itok=B2gl4nVe

அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அலட்சியப்படுத்துவது ஏன்?

யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகளைத் தாண்டி விட்ட இன்றைய காலத்தில் இயற்கை வளங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரியளவில் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்த வரை கருங்கல் அகழ்வு, கிரவல் அகழ்வு, காடழிப்பு, மரவியாபாரம் என பல்வேறு வழிகளில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. மணல் அகழ்வின் மூலமும் பாரிய அளவில் இயற்கை வளங்களும் வனப்பகுதிகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதினெட்டாம் போர், பனிக்கன்குளம், கிழவன்குளம், மாங்குளம், அம்பகாமம், மணவாளன் ஆகிய பல்வேறு பகுதிகளில் அதிகளவான மணல் அகழ்வு இடம்பெறுகின்றது.அனுமதிப் பத்திரம் பெறப்பட்டு அனுமதி விதிமுறைகளை மீறியும் சட்டவிரோதமாகவும் மணல் அகழப்படுகின்றது. அனுமதிப்பத்திரங்கள் பெறப்படாமலும் தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.

அதேபோன்று துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவின் ஐயன்கன்குளம், புத்துவெட்டுவான், கோட்டைகட்டியகுளம், பழையமுறிகண்டி, அம்பலப்பெருமாள்குளம் போன்ற பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான மணல் அகழ்வு இடம்பெறுகிறது.

அதேபோன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் இதே போன்று சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது. அதேபோன்று மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிலும் இவ்வாறான நடவடிக்கைகள் அனுமதிப்பத்திரங்கள் இன்றியும், அனுமதிப்பத்திரங்கள் பெறப்பட்டும், அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறியும் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளான உடையார்கட்டு, தெற்கு ரெட்பானா, இருட்டுமடு, சுதந்திரபுரம், தேவிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பாரியளவில் காடுகள் அழிக்கப்பட்டு மணல் அகழ்வு என்ற பெயரில் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

சட்ட விதிமுறைகள் அனைத்தையும் தாண்டி மணல் அகழ்வு இடம்பெறுவதை அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ கண்டு கொள்வதில்லை.

குறிப்பாக மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் மணல் அகழ்வு தொடர்பாக பல மணி நேரம் விவாதிக்கப்பட்டு பலவிதமான நடைமுறைகள் கொண்டுவரப்பட்டு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மணல் அகழ்வு பத்திரம் வழங்குவதில்லை எனவும் உள்ளூர் அமைப்புக்களுக்கும் மாவட்டத்தைச் சேந்தவர்களுக்கும் மணல் அகழ்வு பத்திரங்களை வழங்குவது எனவும் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.ஆனாலும் வெளி இடங்களைச் சேர்ந்த பல்வேறு செல்வந்தர்களுக்கு அரசியல் பின்னணி மற்றும் பண பின்னணிகளின் மத்தியில் மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.

குறிப்பிட்ட சில செல்வந்தர்கள் மணல் அகழ்வு நடவடிக்கைகளில் விடுகின்ற எந்தவித தவறுகளையும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில் அதை சாதகமாக பயன்படுத்தி பல்வேறு தரப்பினரும் சட்ட விதிமுறைகளை மீறி அனுமதிப்பத்திரங்கள் இன்றி மணல் அகழ்வில் ஈடுபடுகின்றார்கள். இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் இயற்கை வளங்கள் பாரியளவில் பாதிக்கப்படுகின்றன.

இந்த விடயத்தில் அதிகாரிகள் ஏன் அக்கறை கொள்ளவில்லை என மக்கள் அங்கலாய்க்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வினால் முல்லைத்தீவு மாவட்டம் வரட்சியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நான்கு வருடங்களாக தொடர்ச்சியான வரட்சி முல்லைத்தீவு மாவட்டத்தை வாட்டி வருகின்றது. காடுகள் அழிக்கப்படுவது இதற்கு காரணம் என மக்கள் கூறுகின்றனர். இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை உடன் நிறுத்த அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் அக்கறை கொண்டு செயற்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

https://www.thinakaran.lk/2019/07/29/கட்டுரைகள்/37772/இயற்கை-வளங்களை-சூறையாடும்-சுயநலமிகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.