Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோதபாயவின் மோசடி அம்பலம்? | அமெரிக்க குடியுரிமைத் துறப்புப் பத்திரம் பொய்யானது ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோதபாயவின் மோசடி அம்பலம்? | அமெரிக்க குடியுரிமைத் துறப்புப் பத்திரம் பொய்யானது ?

 
கோதபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையைத் துறந்துவிட்டதாக அவரது சகாக்களால் சமீபத்தில் வெளியிடப்பட்ட பத்திரம் பொய்யானது எனச் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அவரது குடியுரிமை துறப்புப் பத்திரம் விக்கிபீடியாவில் காணப்படும் வேறொரு பத்திரத்தை ஒத்தது என சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது. அதில் உள்ள முக்கியமான திகதிகளும், கடவுச் சீட்டு இலக்கமும் பிழையானவை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதை ஒத்துக்கொண்ட கோதபாய  ‘உண்மையான’ பத்திரம் தன்னிடம் இருப்பதாகக் கூறிவருகிறார்.

ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் குடியுரிமை இழப்புக்கான பத்திரம் அமெரிக்க குடியுரிமையைத் துறந்தவர்களுக்கு அவ்வரசினால் வழங்கப்படுகிறது. தனது குடியுரிமையைத் துறப்பதற்கான விண்ணப்பத்தை 2015 இலேயே அமெரிக்க அரசிடம் கையளித்திருந்ததாக கோதபாய ராஜபக்ச கூறிவருகிறார். ஆனால் லசந்த விக்கிரமசிங்கவின் கொலை தொடர்பாக கலிபோர்ணியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டபோது கோதபாயவின் விண்ணப்பம் இந்த வருடம் ஏப்ரல் 17ம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தில் கையளிக்கப்ப்ட்டிருப்பதாகத் தெரிய வந்தது. நேற்று அவரது சகாக்களால் வெளியிடப்பட்ட அமெரிக்க குடியுறவுத் துறப்புப் பத்திரத்தில் கோதபாய மார்ச் 13, 2003 இல் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றிருந்தார் எனவும் இந்த வருடம் ஜூலை 5 ம் திகதி கொழும்புத் தூதுவராலயத்தில் துறப்புக்கான விண்ணப்பத்தைக் கையளித்திருந்தார் எனவும் திகதிகள் மாறாட்டமாகக் காட்டப்பட்டுள்ளன. கொழும்பு தூதரகத்தில் துறப்புக்கான விண்ணப்பம் கையளிக்கப்பட்டதெனக் கூறப்பட்ட ஜூலை 5ம் திகதியன்று கோதபாய சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்ததாகவும் அறியப்படுகிறது.

அரையலமைப்பின் 91வது கட்டளையின் பிரகாரம் வெளிநாட்டுக் குடியுரிமையுரியவர்கள் சிறீலங்காவில் ஜனாதிபதியாகப் போட்டியிடத் தகுதியற்றவர்கள் என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கும் தனது எண்ணத்தை உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து கோதபாய தெரிவித்திருந்தார்.

அமெரிக்கக் குடியுரிமையைத் துறப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. குறிப்பாக, லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சவினால் அவரது தந்தையின் கொலை தொடர்பாகக் கலிபோர்ணியா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, இதர நாடுகளில் கோதபாயவின் நிதி மோசடி மற்றும் குற்றச் செயல்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள், கோதபாயவின் இரட்டைக் குடியுரிமைச் சாதகமாகப் பாவித்து அமெரிக்க – சிறீலங்கா இடையில் கோதபாயவினால் செய்யப்பட்டு இன்னும் நிலுவையிலுள்ள ஒப்பந்தங்கள் என்பன அவர் அமெரிக்க குடியுரிமையைத் துறப்பதில் பெரும் தடைகளாகவிருக்கும்.

தனது அமெரிக்கக் குடியுறவுத் துறப்பு பற்றிய சமூகவலைத் தளங்களில் உலாவும் பத்திரம் உண்மையானதல்லவென்பதை ஒத்துக்கொண்ட கோதபாய, உண்மையான பத்திரம் தன்னிடமுள்ளது எனவும் சமயம் வரும்போது தான் அதைத் தேர்தல் ஆணயத்திற்க்குக் காட்டுவார் என்றும் கூறியதாக அறியப்படுகிறது.

http://marumoli.com/கோதபாயவின்-மோசடி-அம்பலம்/?fbclid=IwAR3FxL_SLjXnHYba7syQPv0sntocBk--kKgt4Q8c-562PjC2KIGHrRvXAeg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.