Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குளித்தலை அருகே பட்டப்பகலில் பயங்கரம் மகன், தந்தை சரமாரி வெட்டிக்கொலை: குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற ஐகோர்ட் மூலம் நடவடிக்கை எடுத்ததால் கும்பல் வெறிச்செயல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளித்தலை அருகே பட்டப்பகலில் பயங்கரம் மகன், தந்தை சரமாரி வெட்டிக்கொலை: குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற ஐகோர்ட் மூலம் நடவடிக்கை எடுத்ததால் கும்பல் வெறிச்செயல்

 

குளித்தலை: குளித்தலை அருகே குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட் மூலம் நடவடிக்கை எடுத்த மகனையும், தந்தையையும் அடுத்தடுத்து வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டியை சேர்ந்தவர் ராமர் (எ) வீரமலை (70). சமூக ஆர்வலர். இவரது மனைவி தாமரை (65). இவர்களது மகன் நல்லதம்பி(எ) பாண்டு(35). இவருக்கு திருமணமாகி பொன்னர்(11) என்ற மகன் உள்ளார். ராமர் முதலைப்பட்டியில் உள்ள அய்யனார் கோயில் பூசாரியாகவும், கோயில் காவல்காரராகவும் இருந்து வந்தார். மேலும் தனக்கு சொந்தமான நிலத்திலும், கோயிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்தும் விவசாயம் செய்து வந்தார். 
முதலைபட்டி ஊராட்சியில் 196 ஏக்கரில் அரசுக்கு சொந்தமான குளம் உள்ளது.குளத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் நிலத்திற்கு பட்டாவும் வாங்கி உள்ளனர். இதுதொடர்பாக கரூர் கலெக்டர், ஆர்டிஓ, டிஆர்ஓ, குளித்தலை தாசில்தார் ஆகியோரிடம் ராமர், நல்லதம்பி மனு அளித்து வந்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுத்ததாக தெரியவில்லை. 

இதையடுத்து ராமர், மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு நிலத்தை அளவீடு செய்தனர். அப்போது அவர்களுடன் ராமர், நல்லதம்பி ஆகியோரும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மீது ஆக்கிரமிப்பாளர்கள் ஆத்திரத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று காலை நல்லதம்பி தங்களது நிலத்தில் விளைந்த மல்லிகை பூக்களை திருச்சிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு மீண்டும் பைக்கில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். ஊர் எல்லையில் வந்தபோது, மரத்தின் பின்னால் மறைந்து இருந்த 6 பேர் கும்பல் அரிவாள்களுடன் ஓடி வந்தனர். நல்லதம்பி சுதாரிப்பதற்குள் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதில் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்து அவர் பைக்குடன் ரோட்டில் விழுந்து ரத்த வெள்ளத்தில் பலியானார். அதனை தொடர்ந்து மர்ம கும்பல் பைக்குகளில் ஊருக்குள் சென்றனர். அங்கு ராமர் தனது வீட்டருகே சோமரசம்பேட்டை பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் பேரன் பொன்னரை பஸ் ஏற்றி விடுவதற்காக நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள் வீச்சரிவாள் மற்றும் அரிவாளால் அவரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதை பார்த்த பேரன் பயந்து அலறிக்கொண்டு தனது ஸ்கூல் பேக் மற்றும் டிபன் பாக்ஸ் ஆகியவற்றை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டான். அரிவாளால் வெட்டப்பட்ட ராமர் அங்கேயே துடிதுடித்து இறந்தார். தகவலறிந்து குளித்தலை போலீசார் வந்து விசாரணை நடத்தினர். கரூர் எஸ்.பி. பாண்டியராஜனும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இரட்டைக்கொலை தொடர்பாக குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்ததால் தந்தையும், மகனும் வெட்டி கொல்லப்பட்டார்களா என தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.