Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீரில்.. ஏதோ நடக்கப்போகுது.. கூடுதலாக 28 ஆயிரம் ராணுவ வீரர்கள் விரைகிறார்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Additional 25,000 security personnel ordered to be moved to Jammu and Kashmir

காஷ்மீர் ஏதோ நடக்கப்போகுது.. பீதியில் மக்கள்.. கூடுதலாக 28 ஆயிரம் ராணுவ வீரர்கள் விரைகிறார்கள்.

அசாதாரண சூழல் நிலவுவதால் காஷ்மீருக்கு கூடுதலாக 28 ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என உறுதி அளித்து இருந்தது. இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக ஜம்மு காஷ்மீருக்கு பாதுகாப்பு படையனிர் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர்,

காஷ்மீரில் இதுவரை இல்லாத அளவாக அங்கு பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரம்தான் 10 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் கூடுதலாக அனுப்பப்பட்டிருந்தனர். ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் முக்கிய நுழைவுப் பகுதிகளை துணை ராணுவத்தினர் தங்கள் கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளனர். காஷ்மீரில் கல்வி நிறுவனங்களுக்கு கோடை விடுமுறை வழக்கத்தை விட 10 நாட்களுக்கு முன்பே தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக காஷ்மீரிகள் ஒருவித பதற்றத்துடன் காணப்படுகிறார்கள். திடீரென பல ஆயிரம் ராணுவ வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட என்ன காரணம் என்பது குறித்து மத்திய அரசுத் தரப்பிலிருந்து இதுவரை உறுதியான எந்த விளக்கம் வெளியாகவில்லை. இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் மக்கள் வீடுகளுக்கு தேனையான பொருட்களை வாங்கி இருப்பு வைக்க தொடங்கிவிட்டார்கள்.

இதனிடையே ஜம்மு காஷ்மீருக்கு தரப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு விலக்கிக் கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அந்த மாநிலம் முழுவதும் மக்களிடையே சிறப்பு அந்தஸ்து விலக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் காஷ்மீரில் பெரும் வன்முறை வெடிக்கலாம் என்பதால் கூடுதல் படைகள் அனுப்பப்பட்ட தகவல்கள் வெளியானது. ஆனால் அதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதனிடையே காஷ்மீரில் அமர்நாத் யாத்திரைக்காக 40 கம்பெணி படை வீரர்கள் குவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அங்கு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு குறிப்பிடத்தக்க ஏதோ ஒரு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளப்போவதாக அங்குள்ள கட்சிகளிடையே பீதி நிலவுகிறது. அதனால் தான் படைகள் குவிக்கப்பட்டு இருப்பதாக நம்பப்படுகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/india/additional-25-000-security-personnel-ordered-to-be-moved-to-jammu-and-kashmir-358892.html

இம்ரான் கான் அமெரிக்க சென்றிருந்ததும் அங்கே அதிபர் ட்ரம்ப் மூக்கை விட்டு தான் காஸ்மீரில் உதவ தயார் என்றதும் இந்தியாவிற்கு ஒரு பயம் வந்துவிட்டது. 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பà¯à®à¯ பà®à¯

வெள்ளைக் கொடியுடன் வந்து உடல்களை எடுத்து செல்லுங்கள்.. பாக்.கிற்கு இந்திய ராணுவம் பகிரங்க அழைப்பு

நேற்று இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்ல வெள்ளைக் கொடியுடன் வாருங்கள் என்று பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

நேற்று காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் ''பேட் தாக்குதல்'' நடத்த முயற்சி செய்தது. ஆனால் இதை இந்திய ராணுவத்தினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இந்த தாக்குதல் காஷ்மீர் எல்லையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவில் பிஎஸ்பி எனப்படும் பார்டர் செக்கியூரிட்டு போர்ஸ் - எல்லை பாதுகாப்பு படை உள்ளது. இவர்கள்தான் இந்திய காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

பிஎஸ்பி படை போல பாகிஸ்தானில் பேட் எனப்படும் Border Action Team உள்ளது. மற்ற நாட்டின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்துவதற்கு Border Action Team தான் எப்போதும் பாகிஸ்தான் ராணுவத்தால் பயன்படுத்தப்படும். இவர்கள் கடந்த சனிக்கிழமை காஷ்மீர் எல்லையில், குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரன் பகுதியில் நுழைந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினர், 5-7 பேட் டீம் வீரர்களை கொன்றனர். இதில் சில தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். இதனால் காஷ்மீரில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் நேற்று இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்ல வெள்ளைக் கொடியுடன் வாருங்கள் என்று பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. வெள்ளைக்கொடியுங்கள் வந்தால் தாக்க மாட்டோம். உங்களுக்கு விருப்பமான நேரத்தில் வந்து உடலை எடுத்து செல்லுங்கள் என்று இந்திய ராணுவம் அதிரடியாக கூறியுள்ளது.

ஆனால் இதற்கு பாகிஸ்தான் பாதுகாப்பு படையில் இருந்து பதில் வரவில்லை. இதற்கு முன்பு இதேபோல் இந்திய ராணுவம் அழைத்த போதெல்லாம் பாகிஸ்தான் அதை ஏற்றுக்கொண்டது இல்லை. அதேபோல்தான் இப்போதும் நடக்கும். அப்போதெல்லாம் பாகிஸ்தான் வீரர்களின் உடல்கள் இந்திய மண்ணில் புதைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/india/pakistan-offered-to-approach-with-a-white-flag-to-take-over-the-dead-bodies-by-indian-army-359091.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.