Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கண்டனம்

Featured Replies

கரூர் மாவட்டம் குளித்தலையில் குளம் ஆக்கிரமிப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்த சமூக ஆர்வலரும் அவரது மகனும் படுகொலை செய்யப்பட்டது பற்றி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் தாமாக முன்வந்து ஐகோர்ட் மதுரை கிளை விசாரித்து, தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததே காரணம் என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்பி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கரூர் மாவட்டம், குளித்தலை முதலைப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராமர் (எ) வீரமலை (70), இவரது மகன்  நல்லதம்பி (எ) பாண்டு (35). அங்குள்ள குளத்தில் சிலர் ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வந்தது தொடர்பாக இவர்கள் தொடர்ந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

இதற்கு ராமரும் நல்லதம்பியும்தான் காரணம் என ஆக்கிரமிப்பாளர்கள் கருதி இருவரையும் கடந்த 29ம் தேதி சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் தேடப்பட்ட முதலைப்பட்டியை சேர்ந்த பெருமாள் (எ) சவுந்தர்ராஜன் உட்பட 6 பேர் மதுரை ஜேஎம் 6வது நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, வழக்கு தொடர்ந்ததற்காக இருவர் கொலை செய்யப்பட்டது குறித்தும், இவர்களது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தினகரன் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது. இதுபற்றி கடந்த ஜூலை 30ல் வெளியான தினகரன் நாளிதழ் செய்தியின் அடிப்படையில், ஐகோர்ட் கிளை தாமாகமுன் வந்து வழக்காக எடுத்துக் கொண்டது. இதுதொடர்பாக ஐகோர்ட் கிளை பதிவாளர் (நீதித்துறை) தரப்பில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கொலையானவர்களின் குடும்பத்தினர் உரிய பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகவும் அவர்களுக்கு பாதுகாப்பு, நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தினகரன் நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு, இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் மறுவாழ்வு நிவாரணம் வழங்க வேண்டும். ஏரி, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாப்பது சம்பந்தமாக வெளிவந்துள்ள செய்திகளின் அடிப்படையில் நீர்நிலைகளை மீட்டு பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? இந்த கொலையில் குற்றவாளிகள் யார், அவர்களை கண்டறிய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?’’ என்று கேட்கப்பட்டிருந்தது.இதனிடையே முதலைப்பட்டி குளம் ஆக்கிரமிப்பு தொடர்பாக திருச்சி மணச்சநல்லூரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு மனுவும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். குளித்தலை டிஎஸ்பி சுகுமார் ஆஜரானார்.

நீதிபதிகள், ‘‘ஆக்கிரமிப்பு அகற்றுவது சம்பந்தமாக பல்வேறு உத்தரவுகளை இந்த நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட வழக்கிலும், பல உத்தரவுகள் ஏற்கனவே உள்ளன. அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அதிகாரிகள் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததே ஆக்கிரமிப்பிற்கு காரணம். இது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்கப்படுத்தும்விதமாக உள்ளது. பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் பஞ்சாயத்து என நீர்நிலைகள் ஏன் தனித்தனி கட்டுப்பாட்டில் உள்ளன? ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எந்த உறுதியான நடவடிக்கையும் அரசுத்தரப்பில் எடுக்கவில்லையே? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிகாரிகள் நெருக்கப்பட்டதும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்திருக்கலாம். இதுவும் கூட கொலைக்கு காரணமாக இருக்கலாம். 

எனவே, வழக்கின் விசாரணை வலுவானதாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் இடைக்கால குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யலாம். குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது’’ என சரமாரியாக கேள்வி எழுப்பினர். கூடுதல் அட்வகெட் ஜெனரல் செல்லப்பாண்டியன், ‘‘கொலையில் 8 பேர் நீதிமன்ற காவலில் உள்ளனர். இவர்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்படுவர். குளித்தலை டிஎஸ்பியே விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்பி கண்காணிப்பில் விசாரணை முறையாக நடக்கும். 90 நாட்களுக்குள் உறுதியாக வலுவான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நீர்நிலைகள் மற்றும் பொதுநில ஆக்கிரமிப்புகள் குறித்து பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக சட்டம் இருந்தும் அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை. இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் தைரியமாக இருந்திருக்கலாம். எனவே, நீர்நிலைகள் மற்றும் பொதுநில ஆக்கிரமிப்புகளை அகற்றத் தேவையான நடவடிக்கையை எடுக்க அதிகாரிகள் விழித்துக் ெகாள்ள வேண்டிய சரியான நேரம் இதுதான். எனவே, 196.42 ஏக்கர் பரப்பளவுக்கு இருந்த முதலைப்பட்டி குளம், 15.79.5 ஏர்ஸ் அளவுக்கு குறைந்துள்ளது. இதில், பலருக்கு 2பி பட்டா வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது மட்டுமின்றி, தாமதமாக நடவடிக்கை எடுப்பதும் நீதிமன்ற அவமதிப்ேப ஆகும்.

முதலைப்பட்டி குளத்தின் மொத்த பரப்பளவு எவ்வளவு? இதன் பரப்பளவு எதனால் குறைந்தது? இதில், எத்தனை கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் உள்ளன? இவற்றின் அளவு என்ன? மீதமுள்ள 15.79.5 ஏர்ஸ் பரப்பளவில் ஏதேனும் ஆக்கிரமிப்பு உள்ளதா? ஆக்கிரமிப்பு அகற்ற இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இனிமேல் மீண்டும் ஆக்கிரமிக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து கரூர் கலெக்டர், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர், குளித்தலை தாசில்தார், தோகைமலை யூனியன் கமிஷனர் ஆகியோர் தனித்தனியே பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த கொலை வழக்கின் விசாரணையை எஸ்பி நேரடியாக கண்காணிக்க வேண்டும். வழக்கின் தற்போதைய நிலை குறித்து போதுமான ஆவணங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=515157

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.