Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியத் தூதரை வெளியேற்றுகிறது பாகிஸ்தான்: இரு தரப்பு வணிகத்தையும் துண்டிக்கிறது

Featured Replies

காப்புரிமை Getty Images

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீருக்கு இருந்த சிறப்புரிமைகளை பறிக்கவும், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கவும் இந்தியா முடிவெடுத்த நிலையில் அதற்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது.

 

இனி இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தகத்தை முற்றாகத் துண்டிப்பதும், தூதரக உறவைக் குறைப்பதும் அதில் சில.

இதனிடையே பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரை அது வெளியேற்றுவதுடன், இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள தமது தூதரையும் அது திரும்ப அழைக்கிறது.

 

இந்தியாவில் கடந்த சில நாள்களாக நடந்த காஷ்மீர் தொடர்பான நிகழ்வுகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக் குழு புதன்கிழமை கூடியது. "இந்தியா தன்னிச்சையாக , சட்ட விரோதமாக எடுத்த முடிவால் எழுந்துள்ள நிலைமை, இந்திய நிர்வாகத்திலுள்ள ஜம்மு காஷ்மீர் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியின் நிலைமை பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது" என்று பாகிஸ்தான் தரப்பு கூறியுள்ளது.

அந்தக் கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக மிக முக்கியமான 5 முடிவுகள் எடுக்கப்பட்டன.

5 முடிவுகள்

1. இந்தியாவோடு இருக்கும் தூதரக உறவுகளை குறைப்பது.

2. இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தகத்தை துண்டிப்பது.

3. இருதரப்பு உறவு ஏற்பாடுகளை மீளாய்வு செய்வது.

4. பாதுகாப்பு கவுன்சில் உள்பட ஐக்கிய நாடுகள் அவைக்கு இந்த பிரச்சனையை கொண்டு செல்வது.

5. பாகிஸ்தானின் சுதந்திர நாளான ஆகஸ்ட் 14-ஐ காஷ்மீர் மக்களின் வீரத்திற்கும், சுயாட்சி உரிமைக்கான அவர்களின் நியாயமான போராட்டத்திற்குமான ஆதரவு தெரிவிக்கும் நாளாகக் கடைபிடிப்பது மற்றும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஐ கறுப்பு நாளாக கடைபிடிப்பது.

ஆகியவையே அந்த ஐந்து முடிவுகள்.

https://www.bbc.com/tamil/global-49266713

நல்ல விடயங்கள் நடக்கின்றன. சீனாவும் சில அதிரடி முடிவுகளை எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

எம் இனத்தை ஆயுதப் போராட்டத்துக்கு தூண்டி, எம் விடுதலைப் போராட்டத்தை தன் சுயலாபத்துக்கு பயன்படுத்தி, எம் போராட்டத்தை இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடிவுக்கு கொண்டு வர உறுதுணையாக இருந்த இந்தியா,  பாரதிய ஜனதா வின் காஸ்மீரம் தொடர்பான முடிவுகளால் அழிவுப் பாதைக்குள் நடக்க தொடங்கியிருப்பதையிட்டு மகிழ்ச்சியாக இருக்கின்றது.

  • தொடங்கியவர்

ஏற்கனவே பாரிய பொருளாதார சிக்கலில் உள்ளது பாகிஸ்தான்.

அமெரிக்க அரசு, ட்ரம்ப், பல பில்லியன்கள் உதவியை நிறுத்தி உள்ளார்.

இதை சாதகமாக சீன பயன்படுத்தி 'சிலக் வீதி உட்பட கடன் கொடுத்தும் தனது வலைக்குள் கொண்டு வர முயன்று வருகின்றது. அதற்கு இந்த காஸ்மீர் சிக்கல் மேலும் கைகொடுக்கும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.