Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி:

Featured Replies

நாட்டு மக்களிடையே இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். 17-வது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தப்பின், பிரதமர் மோடி கடந்த மார்ச் 27-ம் தேதி, நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளேன்.  அப்போது, முக்கிய  தகவல்களை தெரிவிக்க உள்ளேன், அதனை அனைவரும் டிவி, ரெடியோ, ஊடகங்கள் மூலம் கவனிங்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தேர்தல் விதி அமலில் உள்ளதால் அரசின் கொள்கை முடிவை  வெளியிட முடியாது  என்றாலும், பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிழவியது. பொதுமக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நமது  நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை  வெற்றிகரமாக நடத்தி  முடிக்கப்பட்டுள்ளது. மிஷன் சக்தி சோதனை இந்தியாவின் செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல என்றார். விண்ணில் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு  வீழ்த்தும் சோதனை  வெற்றியடைந்துள்ளது.

விண்வெளியில் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களிலேயே வெற்றி அடைந்தது. அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு  அடுத்தப்படியாக இந்தியா விண்வெளியில் சாதனை படைத்துள்ளது. முழுக்க முழுக்க இந்திய   தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. உலகின் விண்வெளித்துறையில் 4-வது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. குறைந்த உயர சுற்றுப்பாதையில் செயற்கைக் கோளை நிறுத்தி இந்திய ராக்கெட் சாதனை   படைத்துள்ளது. விண்வெளி போர் நடத்துவதற்கான திறனை இந்தியா பெற்றுவிட்டது என்றார். தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்று பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிஸ், திமுக கட்சிகள் கடும் எதிப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இன்று நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற  உள்ளார். காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் உரையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில்  அனைத்துக்கட்சி கூட்டத்தையும் பிரதமர் மோடி கூட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=516541

  • கருத்துக்கள உறவுகள்

PM Narendra Modi deletes the tweet which he announces to talk about Kashmir issue

ஜம்மு காஷ்மீர் விவகாரம்.. இன்று மாலை ரேடியோவில் விளக்குவதாக மோடி வெளியிட்ட டுவீட் திடீர் நீக்கம்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு தகுதியை வழங்கும் 370 சட்டப்பிரிவை நீக்கியது ஏன் என்பது குறித்து இன்று மாலை நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி விளக்குவதாக அறிவித்திருந்த நிலையில் அந்த டுவீட் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

ஜம்மு- காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியதாக ரகசிய தகவலை அடுத்து அங்கு ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதனால் பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை அமைச்சரவை கூடியது.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் அவை கூடியவுடன் காஷ்மீர் விவகாரம் குறித்து அமித்ஷா விளக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370 சட்டப்பிரிவை நீக்குவதாக அறிவித்தார். இதன் மூலம் 35 ஏ சட்டப்பிரிவும் தானாக நீங்கியது.

அத்தோடு ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை பறித்து லடாக், ஜம்மு காஷ்மீர் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படுவதாகவும் அவர் அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும் இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுடன் ரேடியோ மூலம் உரையாடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

அச்சமயம் ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு தகுதி தரும் 370 சட்டப்பிரிவை நீக்கியது ஏன். ஜம்மு- காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றியது ஏன் என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கவுள்ளார் என அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது பிரதமர் மோடி பேசுவதாக அறிவித்த டுவீட் திடீரென நீக்கப்பட்டுவிட்டது.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/pm-narendra-modi-deletes-the-tweet-which-he-announces-to-talk-about-kashmir-issue-359537.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.