Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீட்டை ஒரு போதும் மறப்பதில்லை - வீடுகள் தந்த உங்களையும் மறக்கமாட்டோம் - செல்வம் அடைக்கலநாதன்

Featured Replies

நாடு பூராகவும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றிய கோசம் எழுப்பப்பட்டு வருகின்றது. ஒரு பக்கம் கோத்தாபாய ராஜபக்ஸவின் பெயரும் இன்னொரு பக்கம்   சஜித் பிரேமதாசவின் பெயரும் முன் மொழியப்படுகின்ற போதும் இன்னும் பல பெயர்காலும் முளைக்கின்றது.

ஆனாலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கள் வரும் போது தமிழ் மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் ஜோசவாஸ் நகர் மற்றும் ஜோசப் நகர் ஆகிய இரு மாதிரிக் கிராமங்களில் உள்ள வீடுகள்   கையளிக்கும் நிகழ்வு இன்று (8) இடம்பெற்றது.

இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாங்கள் பல அமைச்சர்களிடம் பேசினோம். உதவி கோரினோம். ஆனாலும் செயலாற்ற கூடிய ஏழைகளுக்கு செயலாற்ற கூடிய அமைச்சர் சஜித் பிரமதாஸவும் உண்மையை கூற வேண்டுமானால் எங்களுடைய மனங்களில் வீடு தந்த நீங்கள் இருக்கின்றீர்கள்.

 ஆகவே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக தெரிவிக்கப் படுகின்ற போது எங்கள் மக்கள் சரியாக முடிவெடுப்பார்கள்.

அத்துடன் தோட்டவெளி கிராமத்தில் வீட்டுதிட்டங்கள் வழங்கப்பட்ட போதிலும் இன்னும் வீடுகள் தேவையானவர்கள் இருப்பதனால் அவர்களுக்கும் வழங்க முன்னவர வேண்டும் என கோரிக்கையாக விடுப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் நீங்கள் எங்களுக்கு வீடு தந்திருக்கின்றீர்கள் நாங்கள் வீடுகளை ஒரு போதும் மறப்பதில்லை அதே போன்று வீடுகளை தந்த உங்களையும் மறக்கமாட்டோம் என மேலும் தெரிவித்தார்.

 

DSC_0023.JPG

DSC_0187.JPG

 

DSC_0197.JPG

https://www.virakesari.lk/article/62283

 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவசரப்படத் தேவையில்லை - செல்வம் எம்.பி

எந்தவொரு கட்சியும் தமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்காத நிலைமையே தற்போது காணப்படுகிறது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவசரப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இது தொடர்பில் தமது கட்சி இதுவரை எந்த ஒரு தீர்க்கமான முடிவுகளையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

நாம் முடிவுகள் எடுப்பதற்கு யார் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகின்றார்கள் என்பது அறிவிக்கப்படல் வேண்டும்.  ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் யார் என்பதில் எமது கட்சி அதிக கவனம் செலுத்தப் போவதில்லை. குறித்த கட்சிகளினால் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனத்தையே நாங்கள் கூர்ந்து அவதானிப்போம்.

அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே தமிழ் மக்களுடைய தேசிய பிரச்சினைகளுக்கும், மக்கள் எதிர் நோக்குகின்ற ஏனைய அரசியல், அன்றாட பிரச்சினைகளுக்காக முன் வைக்கப்போகின்ற தீர்வுகள், எப்படி அப்பிரச்சினைகளை அணுகுகிறார்கள் என்பது தொடர்பில் நாங்கள் அவதானிப்போம்.

மேலும் எமது மக்களின் அபிலாசைகளையும் நிலைப்பாட்டினையும் நாங்கள் துல்லியமாக உணர்ந்துள்ளோம். அதே போன்று நமது போராட்டங்களுக்கும், அரசியல் நில்லைப்பாடுகளுக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கின்ற சர்வதேச சமுகத்தின் விருப்பினையும், நிலைபாட்டினையும் தெரிந்து கொண்ட பின்னர் முடிவினை எட்டுவது உசிதமாக இருக்கும் என கருதுவதாகவும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/62281

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.