Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாபநாசம் அணை நீர்மட்டம் சதம் அடிக்குமா?......விவசாயிகள் எதிர்பார்ப்பு

Featured Replies

வி.கே.புரம்: பாபநாசம் அணை 100 அடியை எட்ட இன்னும் 3 அடிகளே தேவை. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை சற்று குறைந்த நிலையில்  பாபநாசம் அணை நாளை 100 அடியை எட்டுமா? என்று விவசாயிகள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் காரணமாக ஆக.5ம் தேதி முதல் மலைப்பகுதியிலும், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் தொடர்ந்து சாரல் பொழிந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதில் குண்டாறு அணையும், கொடுமுடியாறு அணையும் நிரம்பியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை நேற்று சற்று குறைந்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 94.80 அடியாக இருந்தது இன்று காலை 97 அடியானது. அணைக்கு வினாடிக்கு 1521 கனஅடி நீர் வருகிறது. 154.75 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 128.93 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 59.25 ஆக இருந்தது 59.80 ஐ எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 454 கனஅடி நீர் வருகிறது. 200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

63.50 அடியாக இருந்த கடனா நதி அணையின் நீர்மட்டம் 64.20 அடியாக உள்ளது. 71 கனஅடி நீர்வரத்தும், 10 கனஅடி நீர் வெளியேற்றவும் படுகிறது. ராமநதியின் நீர்மட்டம் 72 அடியிலிருந்து 73 ஆக உயர்ந்துள்ளது. அணைக்கு 44.69 கனஅடி தண்ணீர் வருகிறது. 5 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 67.92 ஆக இருந்த கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 68.96 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 45 கனஅடி தண்ணீரில் 2 கனஅடி மட்டும் வெளியேற்றப்படுகிறது.

குண்டாறு அணை நிரம்பியதால் அணைக்கு வரும் 48 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கொடுமுடியாறு முழு கொள்ளளவான 52.50 ஐ எட்டியதால் அணைக்கு வரும் 55 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நேற்று 113 அடியாக இருந்த அடவிநயினார் அணை 115 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு 54 கனஅடி தண்ணீர் வருகிறது. வெளியேற்றம் இல்லை. இன்று காலை 8 மணி நிலவரப்படி மழை நிலவரம்: பாபநாசம்- 1 மிமீ, சேர்வலாறு-1, குண்டாறு-25, அடவிநயினார்-7, ஆய்க்குடி-2, செங்கோட்டை-17. செப்டம்பர் 30ம் தேதியோடு தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வருகிறது. அதன்பின்னர் அக்டோபரில் தமிழகத்திற்கு அதிக மழை பொழிவைத் தரக் கூடிய வடகிழக்கு பருவமழை காலமாகும். புரட்டாசி மாதம் பிறக்கும் செப்டம்பர் பிற்பகுதியில் கடுமையான வெயில் இருக்கும் என்பதால் அதற்கு முன்பே பாபநாசம் அணையில்,் 100 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்தால், வடகிழக்கு பருவமழையின் போது அணை நிரம்ப வாய்ப்பு ஏற்படும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=517571

  • தொடங்கியவர்

நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்வு 

Dkn_Tamil_News_2019_Aug__896846950054169.jpg

 

சேலம்: தொடர் நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2.30 லட்சம் கன அடியாக உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீர் தமிழகத்துக்கு திறக்கப்படுவதால் மேட்டூர் அணை விரைவாக நிரம்பி வருகிறது. மேட்டூர் அணையில் தற்போது 52 டி.எம்.சி தண்ணீர் உள்ளதால் நாளை டெல்டா பாசனத்திற்கு நாளை திறக்கபடுகிறது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=517581

 

 

  • தொடங்கியவர்

"டி.எம்.சி” என்றால் என்ன தெரியுமா??

Thousand Million Cubic[TMC] ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.
ஒரு  டிஎம்சி கணக்கெடுப்பு - 1 பில்லியன் கன அடி ஆகும். 

கன அளவு : ஒரு பொருள் எவ்வளவு இடத்தை எடுக்கின்றது என்பதைக் குறிக்கும் ஒரு கணித அளவாகும். அப்படியெனில் ஒரு கன அடி என்பது 28.3 லிட்டர் நீருக்கு சமம். 

டிஎம்சி அளவிடும் முறை :

கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் என்ற அளவில் ஒரு மதகு மட்டும் இருக்கும், மதகை திறப்பதன் மூலம் ஒரு வினாடியில் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட்டால் போதும். ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிடலாம்.

டிஎம்சியின் கணக்கீடு மற்றும் அவற்றின் பயன்பாடுகள் : 

ஒரு டிஎம்சி எவ்வளவு லிட்டர் - 1 பில்லியன்(100 கோடி) கன அடி.

கடந்த முறை மற்றும் இம்முறை வழங்கப்பட்ட நீரின் அளவு என்ன? மற்றும் அவற்றின் நன்மை தீமைகள் : 

கடந்த முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு - 192 டிஎம்சி.

இம்முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு 177.25 டிஎம்சி.

கடந்த முறையை விட குறைக்கப்பட்ட 14.75 டிஎம்சி நீரால் தமிழகத்திற்கு 41,767,34,87,232 (சுமார் 41,767 கோடியே 34 லட்சம்) லிட்டர் நீர் இழப்பு ஏற்படும்.

தமிழ் நாட்டின் மொத்த விவசாய விளை பரப்பளவு :

தமிழகத்தில் மொத்தம் 22.3 லட்சம் ஹெக்டேர் பாழ்பட்ட நிலம் இருப்பது வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

காவிரி நீரால் தமிழ்நாட்டில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 44,000 சதுர கி.மீ.

காவிரி நீரால் கர்நாடகாவில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 34,000சதுர கி.மீ.

காவிரி நீரால் புதுச்சேரி பாசனம் பெறும் நிலப்பரப்பு 148 சதுர கி.மீ.

காவிரி கேரளாவில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 2,800 சதுர கி.மீ.
https://ns7.tv/ta/node/315702

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.