Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அமெரிக்கா பக்கம் சாய்வது குறித்து வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் அதிருப்தி- பாதுகாப்பு பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டை நிலையில்

Featured Replies

இந்து சமுத்திரத்திற்கான அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு திட்டம் இலங்கையில் நெருக்கடிநிலையை சந்தித்துள்ளது என ஜப்பானை தளமாக கொண்ட நிக்கேய் ஏசியன் ரிவியு  தெரிவித்துள்ளது.

சோபா உடன்படிக்கையின் கீழ்  புதிய பாதுகாப்பு உடன்படிக்கையை  இலங்கையுடன் செய்துகொள்வதற்காக  அமெரிக்க மேற்கொண்டுள்ள முயற்சிகள் இலங்கையில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஆழமாக பிளவுபட்டகூட்டணியில் அமெரிக்க சார்பு அணிக்கு  தலைமை தாங்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இது அவமானகரமான விடயமாக அமைந்துள்ளது எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் கூட சீற்றமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள நிக்கேய் ஏசியன் ரிவியு தற்போது இடம்பெறும் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அமெரிக்காவுடன்  பாதுகாப்பு உறவுகளை நெருக்கமாக்கினால் அது இலங்கை எதிர்காலத்தில் இராணுவரீதியான போட்டிக்குள் சிக்கிக்கொள்ளும் நிலையைஏற்படுத்தும் என அச்சம் வெளியிட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

பிராந்தியத்தில் எதிர்காலத்தில் ஏற்படும் பதட்டநிலைகளின் போது நாங்கள் ஒரு பக்கம் சார்ந்திருக்கின்றோம் என்ற கருத்து உருவானால் அது ஆபத்தானது என பெயர் குறிப்பிட விரும்பாத வெளிவிவகார அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

இது எங்கள் இராஜதந்திர சாத்தியப்பாடுகளை பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் சோபா உடன்படிக்கையில் கைச்சாத்திட்டால் எதிர்காலத்தில் சீனா ரஸ்யா இந்தியா போன்ற நாடுகளும் இவ்வாறான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் படி வேண்டுகோள் விடுக்கலாம் இதற்கு நாங்கள் மறுப்பு தெரிவிப்போமா என அந்த அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளனார் எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

ஏசிஎஸ்ஏ உடன்படிக்கையும் சோபா பேச்சுவார்த்தைகளும் இலங்கையில் அமெரிக்க படையினர் ஆழமாக காலூன்றுவதை நோக்கமாக கொண்டவையே என இலங்கையின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய விடயங்களை அரசாங்கம் இரகசியமாக வைத்துள்ளதால் இந்த உடன்படிக்கைகள் குறித்து மக்களிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

us_troops.jpg

குறிப்பிட்ட உடன்படிக்கைகயில் புதிய உட்பிரிவுகள் இரகசியமாக புகுத்தப்படுவதால் இந்த உடன்படிக்கை மறைமுக தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

புதிய ஏசிஎஸ்ஏ உடன்படிக்கை முடிவற்றது எப்போதும் தொடரும்,எனவும் தெரிவித்துள்ள இக்பால் அத்தாஸ் சோபா உடன்படிக்கை அமெரிக்க படையினர் சீருடையுடன் ஆயுதங்களை நடமாடுவதற்கான அனுமதியை வழங்குகின்றது எனவும் தெரிவித்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெறவுள்ளதால் கூடிய விரைவில்  இலங்கையுடன் இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு  அமெரிக்கா ஆர்வம் காட்டுகின்றது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2019 தேர்தலிற்கு முன்னர் சோபா உடன்படிக்கையில் கைசாத்திடுவதே அமெரிக்காவின் நோக்கம் என தெரிவித்துள்ளார் பாத்வைன்டர் மன்றத்தின் பேர்னார்ட் குணதிலக 

இதேவேளை எந்த இலங்கை ஜனாதிபதியும் அமெரிக்க நலன்களிற்கு எதிராக நடந்துகொண்டதில்லை என தெரிவிக்கும் சர்வதேச விவகாரங்களிற்கான பண்டாரநாயக்க நிலையத்தின் இயக்குநர் ஹரிந்த விதானகே நாங்கள் எப்போதும் அமெரிக்காவின் நலன்களை கையாண்டுள்ளோம் அரவணைத்து நடந்துகொண்டுள்ளோம், எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவை எதிரிநாடாக  இலங்கை மாற்ற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இது எங்களிற்க உதவாது எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/62529

 

  • தொடங்கியவர்

'அமெரிக்காவுடனான டீல் மொட்டுக்கா அல்லது எமக்கா?'

அமெரிக்காவுடன் இணக்கப்பாடு காணப்படுவது யாருக்கு என்பது தொடர்பில் தற்போது நடைபெறும் சம்பவங்களை பார்க்கும்போது மக்களால் புரிந்துகொள்ள முடியும் என, அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

“டீல்களைப் பற்றி ஒவ்வொரு நாளும் கதைத்தாலும் அவ்வாறு கதைப்பவர்கள்தான் இந்த டீல்களை மேற்கொண்டுள்ளார்கள். மொட்டின் வேட்பாளரை அறிவிக்க முன்னரும் அவர்கள் தான் சந்திப்புக்களை மேற்கொண்டனர். நாம் இராஜதந்திர கலந்துரையாடல்களை முன்னெடுத்தோம். யார் டீல்களை மேற்கொள்கின்றார்கள் என்பது தொடர்பில் மக்கள் தான் இறுதி முடிவினை எடுக்க வேண்டும். மக்களை ஏமாற்ற இயலாது.” என்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதற்கு முறையொன்று உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் பெயரிடப்படுவார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அமெரிக்காவுடனான-டீல்-மொட்டுக்கா-அல்லது-எமக்கா/175-236685

  • தொடங்கியவர்

கோத்தபாய போட்டியிடுவதற்கு அமெரிக்கா பச்சைக்கொடி காட்டியதா?

கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையாகயிருக்கமாட்டோம் என தெரிவிப்பதற்காகவும் அதேவேளை சோபா உடன்படிக்கைக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை பெறுவதற்காகவுமே அமெரிக்காவின் தென்னாசியாவிற்கான பதில் இராஜாங்க செயலாளர் அலைஸ் வெல்ஸ் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் என இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி எம் கே பத்ரகுமார் தெரிவித்துள்ளார்.

ஆங்கில இணையத்தளமொன்றில் எழுதியுள்ள கட்டுரையில் அவர்  இதனை தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு சில மணித்தியாலங்களிற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் தென்னாசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் அலைஸ் வெல்சும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்சும் கோத்தபாயவின் பாதையில் அமெரிக்கா தடைகளை போடாது  என்பதை தெரிவிப்பதற்காக  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தனர் என இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி எம் கே பத்ரகுமார் தெரிவித்துள்ளார்.

மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ராஜபக்சாக்கள் முயற்சி மேற்கொண்டுள்ள இந்த சூழ்நிலையை பயன்படுத்துவதற்காக தக்க தருணத்தில் வெல்ஸ் இலங்கை சென்றார் என இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி எம் கே பத்ரகுமார் 

அமெரிக்க பிரஜாவுரிமைய கைவிடுவதற்கான கோத்தபாய ராஜபக்சவின் விண்ணப்பத்தினை வேகமாக பரிசீலிப்பதற்கான முயற்சிகளை டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது என தகவல்கள் தெரிவிப்பதாக் இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி எம் கே பத்ரகுமார்

alice_wells.jpg

மேலும் இது தொடர்பில் காணப்படும் விதிமுறைகளை பின்பற்றாமல் கோத்தபாய ராஜபக்சவின் விண்ணப்பம் குறித்து நெகிழ்வு போக்கினை 

 அமெரிக்கா கடைப்பிடிக்கின்றது  என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் அமெரிக்கா  ஏற்படுத்திக்கொள்ள முனையும் பாதுகாப்பு உடன்படிக்கைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பு வெளியிடாது என்ற உத்தரவாதத்தை அமெரிக்கா பெற்றுக்கொள்ளமுயல்கின்றது 

இந்த நோக்கத்துடனேயே அலைஸ்வெல்ஸ் கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டார் எனவும் இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி எம் கே பத்ரகுமார்  தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/62688

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.