Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மரணம்!

Featured Replies

57 வயதான சந்திரசேகர் தமிழக அணியின் கேப்டனாகவும், தமிழக அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விபி.சந்திரசேகரின் திடீர் மரணம் கிரிக்கெட் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 57 வயதான சந்திரசேகர் தமிழக அணியின் கேப்டனாகவும், தமிழக அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர்.

மாரடைப்பால் சந்திரசேகர் இறந்ததாக தமிழக கிரிக்கெட் அசோசியேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்கப்பட்டபோது அதன் நிர்வாகத்தில் மிக முக்கியமானவராக இருந்தவர் சந்திரசேகர். இவர்தான் தோனியை அணிக்குள் கொண்டுவரும் யோசனையை அளித்தவர். மாரடைப்பால் சந்திரசேகர் இறந்ததாக தமிழக கிரிக்கெட் அசோசியேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1987-88ல் தமிழக அணி ரஞ்சி கோப்பையை வென்றபோது அதில் மிக முக்கிய பங்காற்றியவர் சந்திரசேகர். இந்தத் தொடரின் கால் இறுதிப்போட்டியில் 160 ரன்களும், இறுதிப்போட்டியில் ரயிவேஸ் அணிக்கு எதிராக 89 ரன்களும் அடித்து தமிழகம் வெற்றிபெற காரணமாக இருந்தவர் சந்திரசேகர்.

இராணி கோப்பையில் 56 பந்துகளில் இவஎ அடித்த சதம் இந்திய அணிக்குள் அழைத்து வந்தது. முதல் தர கிரிக்கெட்டில் இதுதான் அப்போது குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட சதம்.

v b chandrasekhar
 
v b chandrasekhar

தமிழக அணிக்காக சிறப்பாக விளையாடிய சந்திரசேகர் இந்திய அணியில் பெரிதாகத் தடம் பதிக்கவில்லை. 7 ஒரு நாள் போட்டிகளில் விளையாட மட்டுமே அவருக்கு வாய்பளிக்கப்பட்டது. அதில் நியூசிலாந்துக்கு எதிராக 77 பந்துகளில் 53 ரன்கள் அடித்திருந்தார் சந்திரசேகர். 2004-2006ம் ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினராகவும் இருந்தவர் சந்திரசேகர்.

https://www.vikatan.com/sports/cricket/former-india-cricketer-vb-chandrasekhar-passes-away

 

  • தொடங்கியவர்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழக ரஞ்சி அணி கேப்டனுமான வி.பி.சந்திரசேகர் நேற்று சென்னையில் மரணமடைந்தார். மயிலாப்பூர் இல்லத்தில் அவர் நேற்று மாலை தற்கொலை செய்துகொண்டார். முதலில் சந்திரசேகர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில் போலீஸ் தற்கொலை என்பதை உறுதிசெய்தது. சந்திரசேகர் தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் கடிதம் எதுவும் எழுதவில்லை என்கிறது போலீஸ்.

 

57 வயதான சந்திரசேகர், தமிழக அணியின் கேப்டனாகவும் தமிழக அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்கப்பட்டபோது, அதன் நிர்வாகத்தில் மிக முக்கியமானவராக இருந்தார். இவர்தான் தோனியை சென்னை அணிக்குள் கொண்டுவரும் யோசனையை அளித்தவர் என்றும் சொல்லப்படுகிறது.

தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் வர்ணனையாளராக இருந்துவந்த சந்திரசேகர், தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் விபி காஞ்சி வீரன்ஸ் என்கிற பெயரில் அணி ஒன்றை நடத்திவந்தார். தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டித் தொடரில் காஞ்சி வீரன்ஸ் அணி முக்கிய அணிகளில் ஒன்று.

தற்போது நடைபெற்று முடிந்த 2019 டிஎன்பிஎல் சீசனில் எலிமினேட்டர் சுற்றுவரை முன்னேறியது விபி காஞ்சி வீரன்ஸ் அணி. எலிமினேட்டரில் மதுரை அணியிடம் தோற்று தொடரைவிட்டு வெளியேறியது. இந்த நிலையில்தான் நேற்று டிஎன்பில் தொடரின் இறுதிப்போட்டி சென்னையில் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன், வீட்டில் தனது அறைக்குள் போன சந்திரசேகர் வெளியேவரவில்லை. நீண்டநேரமாக சந்திரசேகர் கதவைத் திறக்காததால் குடும்பத்தினருக்குச் சந்தேகம் ஏற்பட்டு ஜன்னல் வழியாகப்பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியபடி இருந்திருக்கிறார்.

போலீஸ் வரவழைக்கப்பட்டு உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. நேற்று மாலையே சந்திரசேகர் மரணமடைந்தாலும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. முதலில் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக உறவினர்கள் மூலம் சொல்லப்பட்டது. ஆனால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை போலீஸ் உறுதி செய்தது.

காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளர் வி.பி.சந்திரசேகர். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த அணியை நடத்திவந்ததில் 3 கோடி ரூபாய் அளவுக்கு அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் குடும்பத்தினர் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் இதை மறுக்கிறது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.

"இந்த டிஎன்பில் தொடர் முழுக்க சந்திரசேகர் கமென்ட்ரி டீமில் இருந்தார். கிட்டத்தட்ட 50 நாள்கள் எங்களோடுதான் இருந்தார். கடந்த 11-ம் தேதி நெல்லையில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டிக்குக் கூட வந்திருந்தார். அணிக்கு ஆலோசனைகள் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டார் என்பது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. தமிழக அணிக்காகப் பல சாதனைகள் செய்தவர் சந்திரசேகர்.
 
காஞ்சி அணியால் 3 கோடி ரூபாய் அளவுக்கு அவருக்கு நஷ்டமா என்று எங்களுக்குத் தெரியாது. இந்த ஆண்டு அந்த அணிக்கு 50 லட்சம் ரூபாய் அளவுக்கு லாபம் வரும். மேலும் அணியில் நஷ்டம் என்பது உண்மையாக இருந்தால் அந்த டீமை விற்றுவிட்டாலே 5 கோடி ரூபாய் அவருக்குக் கிடைக்கும். 2 கோடி ரூபாய் லாபம். மேலும் சந்திரசேகருக்கு 7 ஏக்கரில் `விபி நெஸ்ட்’ என்கிற பெயரில் சொந்தமாக கிரிக்கெட் மைதானம் உள்ளது. அதன் மதிப்பே 50 கோடி ரூபாயைத்தாண்டும். அதனால் அவர் பணக்கஷ்டத்தால் தற்கொலை செய்துகொண்டார் என்று நம்பமுடியவில்லை'' என்கிறார் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருப்பவர்.

தமிழக அணிக்காகச் சிறப்பாக விளையாடிய சந்திரசேகர். இந்திய அணியில் பெரிதாகத் தடம் பதிக்கவில்லை. 7 ஒரு நாள் போட்டிகளில் விளையாட மட்டுமே அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதில், நியூசிலாந்துக்கு எதிராக 77 பந்துகளில் 53 ரன்கள் அடித்திருந்தார். 2004-2006-ம் ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினராகவும் சந்திரசேகர் இருந்தார்.

வி.பி.சந்திரசேகரின் திடீர் மரணம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. தற்கொலைக்கான காரணமும் மர்மமாகவே இருக்கிறது!

https://www.vikatan.com/sports/sports-news/what-is-the-reason-behind-vb-chandrasekars-death

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.